உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

 

யாசகம் ♥ 11

சன்விதா வீட்டை விட்டு கிளம்பும் போதே நண்பகல் இப்போது மணி ஐந்தாகி இருந்தது. ஷாப்பிங் முடித்து அவற்றையெல்லாம் தெரிந்த முச்சக்கர வண்டி மூலம் மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தாள். வெளிநாட்டிலிருந்து வந்த தோழி ஒருத்தி போனில் அழைத்து பீச் வர கேட்டிருந்தாள். சரி அவசர வேலை ஏதும் இல்லை எப்படியும் கரண் வந்து சேர நேரமாகும் போய் சந்தித்து வருவோம் என புறப்பட்டுவிட்டாள்.

பாதி வழியில் மீண்டும் அதே உணர்வு. யாரோ பின்தொடர்வது போல் ஸ்கூட்டி பக்க கண்ணாடியில் பார்க்க அந்த மாலை நேர போக்குவரத்து நெரிசலிலும் அந்த திறந்த ஜீப் அவளையே பின் தொடர்வது போல் ஒரு பிரமை ஏற்பட பயத்தில் கைகள் வியர்க்க தொடங்கியது. சொல்ல போனால் கடையில் நிற்கும் போதே இரண்டு தரம் அருகில் வந்து விலகி சென்றனர். கடை ஊழியர் கூட எச்சரித்து இருந்தார். அவர்களை பார்க்க சந்தேகமாக இருப்பதாக ஆனால் இப்படியே வீட்டிற்கும் போக முடியாது செல்லும் வழியில் சற்று தூரம் தனியாக செல்ல வேண்டி வரும் தற்போது கூட்டமாக உள்ள இடம்தான் பாதுகாப்பு. கண்ணா என்ன செய்ய என்று யோசித்தவளின் அவள் கண்ணெதிரே தென்பட்டது அந்த AS மால்.

♥♥♥♥♥

அவன் மெதுவே கண்விழித்து சுற்றி பார்த்தான். அது ஒரு ஒதுக்கு புறமான இடமாக இருக்கவே சமாளித்து எழுந்தவனுக்கு விபரீதம் உறைக்க இருக்காது என்று தெரிந்தும் தனது போனை தேடினான், கிடைக்கவில்லை தள்ளாடியவாறே வீதிக்கு வந்தவன் அருகே இருந்த கடையில் இருந்தவரின் போனை கடனாக வாங்கி நம்பரை அழுத்தினான்.

♥♥♥♥♥

சன்விதா ஸ்கூட்டியை கீழே உள்ள பார்க்கிங் கொண்டு செல்லாமல் அருகே இருந்த வழமையாக செல்லும் பீட்ஸா ஹட் முன் நிறுத்தியவள் உள்ளே இருந்தவர்களுக்கு ஸ்கூட்டியை பார்த்துக்கொள்ளுமாறு கையசைத்து விட்டு மாலினுள் நுழைந்தாள். கரனுக்கும் அப்பாவுக்கும் போன் பண்ணனும் அப்படியே அருகே உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கும் போன் பண்ணனும் இதையெல்லாம் பிட்ஸா ஹட்டில் வைத்து செய்ய முடியாது. வருபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆட்களாக தென்பட கண்ணாமூச்சி விளையாடுவதே சரி வரும் என முடிவெடுத்தாள்.

♥♥♥♥♥

போனை கடனாக கொடுத்தவன் ஜிங்கா புங்காவின் அருகில் நின்ற ஓமகுச்சி நரசிம்மன் போல் நின்றான். ஒரு நம்பர் பதிலின்றி போக அடுத்ததாக ஒரு சில இலக்கங்களை அழுத்த ஹலோ என்றவனிடம் ரத்தின சுருக்கமாக சொன்னான் "தே அர் ஹண்டிங் த டீர்"

♥♥♥♥♥

‘எங்கே போய் தொலைந்தான் இந்த டிஸ்கவரி சேனல். இந்த டைனோசர் தேவை இல்லாத நேரமெல்லாம் கண்ணுல தென்படும் இப்ப எங்க போய் ஒளிஞ்சுது என்று தெரியலையே. முதல்ல அவன் ஃபோன் நம்பர் வாங்கனும், இவ்வளவு காலம் என் பின்னால சுத்துறானே ஒரு நம்பர் தந்தானா... கொல்டன் கொரில்லா, நேஷனல் ஜோக்ரபி, கிங்கொங்’ அச்சுத கேசவனைத்தான் மனதில் தாளித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

‘ச்சு... கரண் இன்னும் வெளியவே வந்திருக்க மாட்டான் வந்தாலும் இங்கே வர எப்படியும் மூன்று மணி நேரமாவது ஆகும். அப்பாவும் சரவணனும் ஊரிலேயே இல்லை. இப்ப எப்படி என்ன செய்யலாம்’. முதலாவது மாடிக்கு செல்லும் எஸ்கிளேடரில் நின்றவாறே மனதினுள் ஏதோதோ சிந்தித்தவள் கண்களில் அந்த மாலின் மூன்றாவது மாடியில் உள்ள கடைகள் தென்பட்டது. அதிகம் நகை கடைகள் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

இரண்டாவது யோசனை இல்லாமல் அந்த இடத்தை நோக்கி சென்றவவளை  மோதிய ஒருவன் “சாரி சாரி” என்றவாறு வேகமாக கூட்டத்தில் மறைய சன்விதாவுக்கு தனது ஃபோன் இருந்த கைபை களவு போனது புரிய அவன் பின்னால் செல்வது இன்னும் ஆபத்தை விலைக்கு வேண்டுவதற்கு சமம் என்பதை உணர்ந்தவள் வேகமாக மூன்றாம் மாடியை நோக்கி நகர்ந்தாள்.

♥♥♥♥♥

"ஷிட் ஒரு பொண்ண காப்பாத்த வக்கில்ல உங்களுக்கெல்லாம் எதுக்குடா செக்யூரிட்டி சர்வீஸ் என்று பேர்" கத்தினான் அருண். எதிரே நின்ற உதவியளரிடம் "டெக்னிகல் டீம் உடனே இங்க இருக்கணும் ரைட் நௌ" உத்தரவிட்டவன் போனில் "யூ ஆல்ரைட், உன்னால தொடர்ந்து இயங்க முடியுமா?" என கேட்க தயக்கமின்றி பதிலளித்தான் அந்த விசுவாசம் மிகுந்த செக்யூரிட்டி "எஸ் சார்"

"வெயிட் போர் ஆர்டர்"

எதிரே நின்றவர்களிடம் "இந்த ஃபோன் நம்பர் எங்க இருக்கு என்று தெரியனும் யூ ஹவ் ஒன் மினிட்" கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்சில் நொடிகள் கடப்பதை பார்த்து கொண்டிருந்தான்.

மூப்பதாவது நொடியில் பதில் வந்திருந்தது "AS மால் சார்" செக்யூரிட்டி அருண் இருவரும் நிம்மதியாக மூச்சுவிட்டனர். மறு பக்கத்திலிருந்த செக்யூரிட்டி கட்டளைக்கு காத்திருக்கவில்லை  போனை கொடுத்து விட்டு வழியில் வந்த ஆட்டோவை மறித்து ஏறியவன் "AS மால்" என்றான்.

வேகமாக வெளியே ஓடிய அருணின் கார் AS மாலை நோக்கி சீறிப் பாய்ந்தது.

♥♥♥♥♥

அந்த இருக்கையில் அமர்ந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தவன் சிந்தையை கலைத்தது அவனது அக்கா சுபத்திராவின் குரல் "இப்ப ஐயா பெரிய்ய்ய ஆள் கல்யாண நாள் பிறந்த நாள் எல்லாம் மறந்துட்டார்" மூக்கை சுருக்கி முகத்தை திருப்பி கொண்டாள். "அது எப்படி இருக்கும் சுபா, தினம் சன்வி புராணம் தான் போ ஆபீஸ்ல சன்வி பெயர் தெரியாத ஆளே இல்லை" தன் பங்குக்கு அத்தானும் வாரினார்.

அச்சுதன் பரிதாபமாக பார்த்தான் எல்லாம் தெரிஞ்சும் இப்படி கலாய்கிறங்களே என்பது போல். "சரி சரி பிழைச்சு போகட்டும் விடும்மா, ஆனாலும் உன் தம்பிக்கு தைரியம்தான்" என்றான் அர்ஜுன்.

கேள்வியாக பார்த்தவளுக்கு பதிலாக "இல்லை என்னை நிதமும் பார்கிறான் அதுக்கு பிறகும் லவ் எல்லாம் சான்சே இல்ல வேற லெவல்"

சந்தேகமாய் பார்த்த கண்ணை சுருக்கி சுபத்ரா கேட்டாள் "நீங்...க என்னோட பக்கம் தானே"

"ஆப் கோர்ஸ் ஆப் கோர்ஸ், டேபானட்லி" என சத்தமாக சொல்லியவன் "வேற வழி" என மெதுவாக சொல்ல தன் கவலை மறந்து கலீரென்று சிரித்தான் அச்சுதன். அவனது ஃபோன் சட்டைக்குள் அதிர "ஒன் செக்" என்றவாறு சற்று தள்ளி வந்து "ஹலோ" என்றவாறு நிமிர்ந்து பார்க்க தென்பட்டாள் பயத்தில் வியர்த்துக்கு விறுவிறுத்து எஸ்கேலாட்டோர் வழியாக மேலே வந்து கொண்டிருந்த சன்விதா.

ஃபோன் வழி வந்த செய்தியில் முகம் தடை எல்லாம் இறுக கை முஷ்டியாக கண்ணாடி தடுப்பில் லேசாக தட்டியவன் திரும்பி பார்த்த செக்யூரிட்டியிடம் அவளை உள்ளே அழைத்து வர சைகை செய்ததோடு உள்ளே நின்றவன் காதில் சில உத்தரவுகளை இட்டவன் அமைதியாக சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

செல்ல கோபத்திலிருந்த சுபத்ராவை சமாதானம் செய்து கொண்டிருந்த அர்ஜுன் நிமிர்ந்து கண்ணாலேயே ‘என்னாச்சு’ என்பது போல் கேட்க உதடு கடித்து மெதுவே குறுக்காக தலையசைத்தான் அச்சுதன். செக்யூரிட்டி அவனருகே சுடச்சுட காஃபி ஒன்றை அவனருகே வைத்து விட்டு சென்றான்.

சுபத்ரா நிமிர்ந்து பார்க்க சட்டென முகத்தை மாற்றி கொண்டவன் அவளது தோளை சுற்றி கை போட்டவாறே "அப்ப உங்கள் இருவரின் கல்யாண நாள் சி....   சன்வி...."

"ஹா... நான் சன்வி இல்லடா உன் அக்கா" என்று முறுக்கியவாறே நிமிர்ந்தவள் அவன் எண்ணங்கள் இங்கே இல்லை என உணர்ந்து தன் தம்பியின் பார்வையை தொடர்ந்தவள் கண்களில் தென்பட்டாள் வியர்த்து விறுவிறுத்து வந்த சன்விதா.

"அத்தான் மழை புயல் வெள்ளம் எல்லாம் சேர்ந்து வருது கவனம்" சிறு சிரிப்புடன் எச்சரித்தான். ஆனால் அந்த சிரிப்பு அவன் கண்களை எட்டவே இல்லை. அக்காவும் அத்தானும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க சற்று எட்டி வெளி நிலவரத்தை ஆராய்ந்தவன் கண்களில் ஒரு திருப்தி வந்தது. பாதுகாவலனுக்கு கண் காட்டியவன் சன்விதாவிடம் திரும்பினான்.

"சன்வி..." அன்புடன் அழைத்தவள் "வாம்மா எப்படி இருக்கிறாய் ஏன் களைத்து போன மாதிரி இருக்கு" வேலையாளிடம் திரும்பி "ஒரு கூல்ட்ரிங்க்ஸ் ப்ளீஸ்" என்றவள் அச்சுதன் அருகேயிருந்த இருக்கையை காட்டினாள்.

சுபத்ரா பேசியது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல் அச்சுதனிடம் திரும்பியவள் “எங்க மேன் போய் தொலைஞ்ச, லவ் பண்றன் என்று பின்னால் சுத்தினால் மட்டும் போதுமா? ஒரு போன் நம்பர் தர வேணாம். தேவையில்லாத நேரமெல்லாம் கண்ணுக்குள்ளேயே இரு தேடும் போது...” ஆத்திரத்தில் தொடங்கி அழுகையில் தளும்பியது அவள் குரல்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அச்சுதனின் கண்கள் வேக வேகமாக அவளை ஆராய்ந்தன. பயந்து வியர்த்தது தவிர அவளிடம் வேறு காயமே அடிபட்ட கண்டலே இல்லை என்பதை உறுதி செய்தவன் முதலில் அவளது மனதை மாற்ற நினைத்து "வை டோன்ட் யூ சீட்" நிதானமாய் கேட்டவனை உச்ச கட்ட கோபத்தில் பார்த்தாள் சன்விதா.

எங்கே போக எனத் தெரியாமல் மருண்டு நின்றவளை அந்த கடைக்கு முன் நின்ற செக்யூரிட்டி கை காட்டி உள்ளே போக சொல்ல யோசியாமல் வந்துவிட்டாள். உள்ளே வந்தவளுக்கு சீராக மூச்சு வந்தது அவனை பார்த்த பின்புதான். ஏனோ பயம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட அவ்விடத்தை கோபம் அக்கிரமித்தது கொண்டது. அவனுமே ஒர விழியில் அவளைத்தான் கவனித்து கொண்டு இருந்தான். அவளது விறைத்த உடல் தன்னை கண்டதும் ஆசுவாசத்தில் தளர்வது தெளிவாகவே புரிய, அவள் பயம் சென்றுவிட்டது என்பதை விட எவ்வளவு நேரம் இப்படி பயந்து கொண்டிருந்தாளோ என்று தான் வருந்தினான். ஆனால் முகம் உணர்ச்சியற்று இருந்தது.

அவனிடம் பொரிந்து தள்ளிய பின்னர் தான் சுபத்ரா கேட்டதே அவள் நினைவுக்கு வர "இல்ல அக்கா நான்... " என்று ஆரம்பித்த வார்தைகளை இடைவெட்டியது அச்சுதன் செயல், அவள் இடது கையை பிடித்து அமர வைத்தவன் "முதலில் இரு" என்றவாறு தன் அருகே சூடாக இருந்த காபியை அவள் புறம் நகர்த்தினான் "குடி" சொன்னோதோடு அல்லாமல் கண்களாலும் காட்டினான். தன் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்த சில்லிட்ட அவள் கரத்தையும் வியர்வை முத்துக்கள் அரும்பிய முகத்தையும் பார்த்தவன் உள்ளுற எழுந்த சினத்தை அடக்க கீழ் உதட்டை இறுக கடித்தான்.

மறு பேச்சின்றி குடித்தாள் சன்விதா. கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் தன்னை பின் தொடர்ந்தவர்களை சுத்த விட்டு கொண்டிருந்தாள். நல்ல வேளை இங்கே வந்து சேரும் முன் பெற்றோல் முடியவில்லை. உண்மையில் நன்றாக களைத்து போய் விட்டிருக்குந்தாள் அவள் கடைசி முயற்சியாக மாலின் உள்ளே வந்து போன் செய்வோம் என்று இங்கே வந்தாள். வந்த இடத்தில் போன் தொலைந்தாலும் அச்சுதனை பார்த்ததும் வீடு வந்து சேர்ந்த உணர்வு. அதை அவள் சரியாக உணரவில்லை. காலம் கடப்பதற்குள் உணர வேண்டுமே.

திரும்பி சுபத்ராவை நோக்கி "என்ன அக்கா எதாவது விசேஷமா இல்லை சும்மா பார்ச்சஸா?" புன்னகையுடன் வினவினாள்.

"அதுவா என்னோட பிறந்தநாள் கல்யாண நாள் இரண்டையும் மறந்திட்டான் அதான் சமாளிக்க கூட்டிட்டு வந்திருக்கான்" புன்னகைத்தாள் சுபத்ரா.

"ஓஹ் வாழ்த்துக்கள், எப்ப அக்கா முடிஞ்சுதா இல்ல இனிதான" அச்சுதனை பார்த்ததில் பயம் ஜகா வாங்கி விட சற்று இயல்பாகியிருந்தாள்.  “நானும் ஹெல்ப் பண்ணட்டுமா?” கேட்டவாறு வலது கையால் ஒவ்வென்றாக எடுத்து பார்க்க தொடங்கினாள்.

"ஹ்ம்ம் இன்னும் மூன்று நாளில் இரண்டும் சேர்ந்து வரும்" புன்னகையுடன் சுபத்ரா கூற குழப்பத்துடன் பார்த்தவள் கேட்டாள் "மறந்துட்டார் என்று சொன்னீங்க".

“அது வழமையா பெரிய பங்க்சனா செய்வான் இந்த முறை எதுவும் அரஞ் பண்ணல அதான்” உதட்டை பிதுக்கினாள்.

சுபத்ராவுக்கு சுற்றி நடப்பது தெரியவில்லை எனவே இன்னமும் அச்சுதனின் கையிலிருந்த சன்விதாவின் கையை பார்த்து சிரித்தாள். அவளை இருக்க வைப்பதற்காக பிடித்த கையை அச்சுதன் விடவேயில்லை. அவள் கை சில்லிட்டிருந்தது. மெதுவே தன் பரந்த உள்ளங்கைக்குள் வைத்து அவள் அறியாமலே தேய்த்து தன் வெப்பத்தை கொடுத்து கொண்டிருந்தான்.  அவளை அறியாமலே பாதுகாப்பாக உணர்ந்தாளோ இல்லை சில்லிட்டிருந்த கரத்துக்கு அந்த வெப்பம் இதமாய் இருந்ததோ அவளும் கைகளை விலக்கில் கொள்ளவில்லை.

வைர ஆரமொன்றை எடுத்து அவள் கழுத்தில் வைத்து பார்க்க இடது கையை எடுத்தால் அது எங்கேயோ மாட்டி கொண்டு வருவேனா என முரண்டு பிடிக்க திரும்பி தன் கை எங்கே என தேடியவளுக்கு அவன் கரங்களில் இருந்தது புரிய நிமிர்த்து அவனது கண்களைப் பார்த்துவிட்டு ஒரு விரலால் சுபத்ராவை சுரண்டினால் சன்விதா. ஆச்சரியத்துடன் திரும்பியவள் கண்களாலேயே என்னவென்று கேட்டவளுக்கு பதிலாய் "உங்கள் பிறந்த நாளும் கல்யாண நாளும்தானே மறந்தது" எனக் கேட்டாள் சன்விதா.

"ஹ்ம்ம்" சிறு சிரிப்புடன் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் சுபத்ரா. அர்ஜுன் இருவரையும் கவனித்து கொண்டிருந்தான். "இல்ல அப்ப நீங்கதானே கோபமா இருக்கனும் ஏன் அவர் கோபமா இருக்கார்" யோசனையுடன் கேட்டாள் சன்விதா. ஒரு புறம் தலை சாய்த்து சிறு சிரிப்புடன் வேண்டுமென்றே மறுத்தாள் சுபத்ரா "அவனா கோபமா இல்லையடா".

"இல்லக்கா கோபமா தான் இருக்கார், கொஞ்சம் விட்டால் இங்கே இருக்கும் திங்ஸ் எல்லாத்தையும் உடைத்து விடுவார் போல கோபம் எனக்கு தெரியும்" உறுதியாய் சொன்னாள்.

அர்ஜுன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான்.

சுபத்ரா சந்தோசமாய் பார்த்தாள்.

அச்சுதன் கண்கள் மின்ன புன்னகையுடன் பார்த்தான்.

அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே புரிந்திருந்தது அச்சுதன் ஏதோ விடயமாக சினந்துள்ளான் என்று ஆனால் அவள் உள்ளே வந்து இரு நிமிடங்கள் கூட ஆகாத நிலையில் இவ்வளவு துல்லியமாக அச்சுதன் உணர்வை கண்டுபிடிப்பாள் என நினைக்கவில்லை. இத்தனைக்கும் அவள் உள்ளே வரும் போது சாதாரண மன நிலையிலும் வரவில்லை.

அதற்குள் சன்விதாவின் கருத்தை கவர்ந்தது அவள் முன் இருந்த டைமென்ட் பென்டன்ட் அதை கைகளில் எடுத்து பார்த்தவள் "அழகாயிருக்கு இல்லை" ஒரு சென்றிமீட்டரை விடை குறைவான அளவில் AS என்ற இரு எழுத்துக்களும் பின்னி பிணைந்து அதன் மேல் டைமென்ட்  பதிக்கப்பட்டு இருந்தது. "ஓஹ் என்னோட விசா கார்ட் இப்ப என்னிடம் இல்லையே இத ரிசெர்வ் பண்ணி வைக்கலாமா?" என கேட்க விற்பனை பெண் அச்சுதனை பார்த்தாள். ஆம் என்பது போல் தலையாட்டினான் அச்சுதன். "ஷுயர் மாம்" புன்னகையுடன் பதிலளித்தாள் விற்பனை பெண்.

அதற்குள் கடை வாசலில் சிலரின் நடமாட்டம் தென்பட அதைப் பார்த்த சன்விதாவின் கையில் ஓடிய சிறு நடுக்கம் அச்சுதனுக்கு தெளிவாகவே புரிந்தது. அச்சத்துடன் திரும்பி அச்சுதனை நோக்கினாள். அவள் விரல் இடைவெளிகளை தன் விரல்கள் கொண்டு நிரப்பியவன் லேசாக தட்டி கொடுத்தான். வெளியில் உள்ளவர்களுக்கு தான் உத்தரவிட்ட வேலையை முடிக்க  இன்னும் சிறிது நேரம் தேவைப்படும் என்று நினைத்தவனாய் அவளுடன் உரையாட தொடங்கினான்.

"சோ சன்வி என்னை ஏன் தேடினாய்? தெரிந்....து கொள்ளலாமா?"

அர்ஜுன் புருவத்தை நெரித்தவாறு அவனை பார்க்க சிறு கண்ணசைவில் வெளியில் நடப்பதை கட்டினான்.

"நான் உங்களை தேடினேனா என்னோட வோர்ஸ்ட் நைட்மைர்ல கூட இல்லை"

"அப்ப உன்னோட ஸ்வீட் ட்ரீம்ஸ்லய ஹா " புருவத்தை உயர்த்தினான்.

சன்விதா சஞ்சலத்துடன் மீண்டும் கடையின் வாயிலை நோக்கினாள்.

"பிறகு உனக்கு எப்படி தெரியும் நான் இங்கே இருக்கிறேன் என்று"

அவனது வார்தையில் கவனமின்றி பதிலளித்தாள் "ஹா எனக்கு எப்படி தெரியும்? எனக்குத் தெரியாதே நீங்க இங்க இருப்பீங்க என்று "

“அப்ப இங்க ஷாப்பிங் செய்ய வந்தாயா?”

"ஹான்"

"கிரெடிட் கார்ட் மணி எதுவும் இல்லாமலா?"

"ஹா...." இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்த சான்விதாவை கேள்வியாக பார்த்தான் அச்சுதன்.

"அ அது... வந்து " என்று தடுமாற பொங்கி வந்த சினத்தை அடக்க முடியாமல் "enough" என்றவாறு நகைகளை காட்சிபடுத்தி வைத்திருந்த மேஜையில் ஓங்கி அடிக்க அழகான அந்த கண்ணாடி மேஜை தூள் தூளாக நொறுங்கியது.

“வந்து இவ்வளவு நேரத்தில் ஒரு வார்தை சொன்னியாடி கையில போனும் இல்ல” சீற்றத்துடன் கேட்டான். அவள் கையை விட்டுவிட்டு எழும்பவே இவ்வளவு நேரம் ஓடியிருந்த மறுபடி வந்து ஒட்டிக்கொள்ள சன்விதா அவன் பின்னாலே எழுந்து அழைத்தாள் “அ அச் கே கேசவ்...” வெறும் காற்று மட்டுமே வர அவன் திரும்பியதில் வாயை மூடிக்கொண்டாள்.

சுபத்ரா ஏதோ சொல்ல வர அர்ஜுன் அவளை தடுத்து நிறுத்ததினான்.

கடகடவென கோட் ப்ளஸர் இரண்டையும் கழட்டியவன் அணிந்திருந்த கரு நீல ஷிர்டின் கைகளை முட்டி வரை ஏற்றிவிட்டான். அருகே நின்ற செக்யூரிட்டியின் கையிலிருந்த ஹாக்கி ஸ்டிகை வாங்கியவன் "வா" என்ற ஒற்றை சொல்லில் அழைத்தவாறு வெளியே சென்றான்.

அவன் முதுகின் பின்னால் இருந்து எட்டி பார்த்த சன்விதா தென்பட்ட காட்சியில் உறைந்து போய் நின்றாள்.

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 12

ஹாக்கி ஸ்டிகை கைகளில் பிடித்து சுழற்ற அணிந்திருந்த ஷிர்டினை மீறி புடைத்த புஜங்களை பார்த்த சன்விதாவுக்கு வாய் வறண்டு போனது. அசையாது நின்றவளை திரும்பி ஓர் பார்வை பார்க்க மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து வெளியே சென்றாள்.

அவள் அந்த இடத்திற்கு வந்த போது மணி ஆறரையை தாண்டி மெல்ல இருட்டி கொண்டிருந்தது ஆனால் அந்த மால் ஜனங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது இப்போது அவ்விடத்தில் கறுப்பு உடையணிந்த செக்யூரிட்டி நபர்கள் சிலரும் அவளை துரத்தி வந்த அந்த ரவுடிகளும் முட்டி போடப்பட்டு கழுத்துக்கு பின்னால் கைகள் கட்ட வைக்கப்பட்டு இருந்தார்கள்.

கண்களை சுற்ற விட சுற்றியிருந்த இடமே புதிதாய் இருந்தது. விட்டலாச்சாரியார் படத்தில் வருவது போல் ஒரு வாசல் வழியாக இன்னொரு உலகத்துக்குள் வந்தது போல் இருந்தது. அந்த கடை வாசலின் இருபுறமும் அதற்குள் என்ன நடந்தாலும் வெளியே தெரியாத மாதிரிக்கு இருபது அடிக்கு இருபுறமும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. முன்னே திறந்திருந்த பால்கனிக்கு மேலிருந்து ஒரு கருப்பு திரை போடப்பட்டிருக்க எதிர் கடையில் இருப்பவருக்கு இங்கே என்ன நடக்கிறது என்பது தொலை நோக்கி வைத்து பார்த்தாலும் தெரியவே தெரியாது.

திருப்பி அச்சுதனை பார்க்க அவன் ஹாக்கி ஸ்டிகை அதன் நீளத்துக்கு விரலால் தடவியவன் ஒரு கையில் அதை சுழட்டியவாறே அந்த ரவுடிகளை நோக்கி நடந்தான். சரியாய் அவனுக்கு எதிர் திசையிலிருந்த பேனரை சற்று அகற்றி அதன் வழியே உள்ளே ஓடி வந்தனர் அருணும் அந்த செக்யூரிட்டியும்.

அருண் உள்ளே வரும் போதே அவன் கண்ணில் தென்பட்டது ஹாக்கி ஸ்டிக்குடன் நின்ற அச்சுதனும் பயம் நிறைந்த சன்விதாவின் முகமும்தான். ஏற்கனவே அவன் மீது அப்படி ஒரு உயர்ந்த அபிப்பிராயம் இதில் இதை வேறு பார்த்து வைத்தாள் அவ்வளவுதான் அவள் கண்ணனே வந்து சொன்னாலும் கேட்க மாட்டாள் என யோசித்தவனாய் அவனை வேகமாக வருவதற்குள் ஹாக்கி ஸ்டிகால் அந்த ரவுடிகள் அனைவருக்கும் வாரி வழங்கியிருந்தான். நெருங்கி வந்தவன் அவன் கையிலிருந்த ஹாக்கி ஸ்டிகை பறிக்க முயற்சித்தவாறே "அச்சுதா, இதை நாம் வேறு இடத்தில் வைத்து கொள்வோமே இவங்களுக்கும் அந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை" என அவசரமாக சொன்னான்.

நெற்றி சுருக்கியவன் சன்விதாவை அருகே அழைத்தான் “இங்கே வா”.

நிலத்தில் வேரோடியவள் போல் நின்றவள் மறுப்பாய் தலையசைத்தாள். ஒரு கணம் அவளை ஆழ்ந்து நோக்கியவன் ஹாக்கி ஸ்டிகை அருணிடம் வீசி விட்டு, அருகே சென்று அவள் விரல்களில் தன் விரல்களை கோர்த்து அழைத்து வர அவனோடு ஒட்டி நடந்தவள் மறு கையால் அவன் கையை பிடித்து கொண்டாள். குனிந்து அவள் கைகளை பார்த்து சிறுமுறுவல் செய்தவன் "இவர்களை உனக்கு தெரியுமா? எங்காவது பார்த்திருக்கிறாயா?" மென்மையாக கேட்டான்.

கோர்திருந்த கரங்களை பார்த்த சன்விதா குழப்பத்தில் இருந்தாள் மறுபடியும் அவளிடம் இருந்த பயம் சென்ற இடம் தெரியவில்லையே அவனை நிமிர்ந்து பார்க்க மறுபடி கேட்டான் "என்ன தெரியுமா?"

அவன் கைகளை பற்றியபடியே குனிந்து அவனை பார்க்க அவள் செயலை ரசித்து மெல்ல சிரித்தவன் அருகே இருந்த செக்யூரிட்டிக்கு கண் காட்ட அந்த ரவுடியின் முகத்தை நிமிர்த்தினான். சட்டென பின் வாங்கியவள் வேகமாக ஆம் என்று தலையாட்டினாள்.

"எப்படி எப்போது எங்கே"

"ஆறேழு மாதத்திற்கு மு....." அருணின் வேகமான ‘சொல்லாதே’ என்ற தலையாட்டலில் இடையில் நிறுத்தினாள்.

அச்சுதன் கண்மூடி "ஆறேழு மாதத்திற்கு முன்" தனக்கு தானே சொல்லி பார்த்தவனுக்கு நினைவு வர சட்டென அருண் கையிலிருந்த ஹாக்கி ஸ்டிகை பறித்து ஒரே அடி முன் பக்க பற்கள் அத்தனையும் கழண்டு விழுந்திருந்தது.

"ஆத்தி......."

"உன்னிடம் தப்பாக நடந்து அந்த கரண் போலீசில் பிடித்து கொடுத்தது இவர்கள் தான் இல்லையா?" கேட்டவாறு அருகில் திரும்பி பார்க்க இடம் வெறுமையாக இருந்தது.

சன்விதா சுபத்ராவின் பின்னால் நின்று அவள் தோளில் முகத்தை புதைத்திருந்தாள். "அங்கே என்ன செய்கிறாய்? கேள்விக்கு பதில் சொல்" சீறினான் அச்சுத கேசவன்.

நிமிராமல் சத்தமாய் சொன்னாள் "அவங்களேதான்."

"சொல்லுறத கேளு அச்சுதா, இந்த வேலையை பிறகு செய்வோம், முதல்ல அவளை வீட்டில் விடு,  அத்தான் சொல்லுங்களேன்" அருண் கெஞ்சினான்.

அர்ஜுன் உதட்டை கடித்தவாறு யோசித்தவன் "அருண் சொல்லுறது சரிதான் அச்சுதா, இங்கே வேண்டாம்" அனைவரும் சன்விதாவின் பயத்தை யோசிக்க சன்விதாவின் மேல் ஒருவன் கை வைக்க துணிந்தான் என்பதே அச்சுதனுக்கு சுர்ர்ர்... என்று  கோபம் ஏற உடல் தடை எல்லாம் இறுக கைகளை முஷ்டியாக்கி "சரி வேண்டாம், இவளை இவர்களே கூட்டிட்டு போகட்டும்" பாதுகாவலரை பார்த்தவன் "சன்விதா இல்லமால் போனால் ஒருத்தன் விடாம சுட்டு தள்ளிரு மிச்சத்தை நான் பார்க்கிறேன்" உத்தரவிட்டு சன்விதா அருகேயிருந்த பல்கனி தூணில் ஏறி அமர்ந்து ஹாக்கி ஸ்டிக்கை விரல்களின் நடுவே வைத்து சுழற்றி கொண்டிருந்தான். ரவுடிகளை தவிர அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். "கொல்வதாக முடிவே பண்ணிட்டானா?" அர்ஜுன் வாய்க்குள் முனங்கினான்.

மரணதேவன் அவர்கள் முன் சதிராடுவது புரியாமல் அந்த ரவுடி கும்பல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது.

என்ன நடக்க போகின்றது என்பது ரவுடி கும்பலை தவிர அனைவருக்கும் புரிய சன்விதா இன்னமும் நடுங்கினாள். ‘கண்ணா வேணாம் கொல்ல வேணாமே’ வேண்டுதல் வைக்க, கண்ணன் புன்னகைத்தான், நடக்க வேண்டியது நடக்க தானே வேண்டும் என்பது போல். அருகில் ருக்கு “அவள் பாவம் எதாவது செய்யுங்கள்” என வேண்டுகோள் வைக்க கண்ணன் சிரித்தான் அந்த சிரிப்பு ஜெமகதாகி அவள் அவளையா பாவம்  பார்க்கிறாய் என்பது போல் இருந்தது .

"கண்ணா..." சுபத்ரா அழைக்க அவளிடமும் பாய்ந்தான் "என்ன அக்கா கையை கட்டி வேடிக்கை பார்க்கவா?"

"உன்னை யாருடா வேடிக்கை பார்க்க சொன்னது ஆனா இங்கே வேண்டாம் புரிந்து கொள்ளடா" அவனுக்கு விளங்க வைக்க முயன்று தோற்றாள்.

அக்காவின் பின் நின்ற சன்விதாவை பார்த்தவன் குதித்து கிழே இறங்கி அவள் அருகே சென்றவன் "இப்ப என்னோட கையை பிடிக்கும் போது முதலில் உள்ளே என்னை பார்த்த போது உனக்கு பயம் போச்சு தானே இப்ப மட்டும் என்ன பயம் உனக்கு" சீறியவனை பரிதாபமாக பார்த்தாள். அவளுக்கு சத்தம் வந்தால் தானே வெறும் காற்று மட்டும் தானே வந்தது.

அதற்குள் கீழே இருந்தவர்களில் ஒருவன் வந்து சன்விதாவின் கையை தொட வர மணிக்கட்டில் பிடித்து கையை முறுக்கி ஒரே ஒரு அடி கை உடைந்து விட்டிருந்தது. அடுத்தடுத்து விட்ட அடியில் ரத்த களறியாய் விழுந்தவனுக்கும் அவனை சேர்ந்தவர்களுக்கும் இப்போது தெளிவாக புரிந்தது தொட்டால் இவன் கொன்னுருவான் தொடாமல் போனால் துப்பாக்கி வெட்டி தடியனுங்க (தீவெட்டி தடியன் மாதிரி துப்பாக்கி வெட்டி ஹி ஹி) கொன்னுருவங்க எந்த வழியிலும் மரண தேவன்தான்.

சன்விதாவை பார்த்தவன் அவள் நடுங்குவது புரிய "சரிஇ...." முழு கோபத்துடன் தொடங்கவே இடையிட்டது அவளது குரல் "வேண்டாம்"

எரிச்சலுடன் திரும்பி கேட்டான் "என்னடி வேண்டாம் வேண்டாம் அதான் உன் முன்னால் ஏதும் செய்யாமல் விடுறன் இல்ல"

கண்களை இறுக மூடியபடி சுபத்ராவின் தோளில் இருந்து முகத்தை நிமிர்த்தியவள் அவனது குரல் வந்த திசைக்கு கையை நீட்டி கன்னத்தில் கை வைத்து கீழே கழுத்தில் இருந்த டையை கழட்டினாள்.

அவள் தடுமாற கண்களில் கேள்வியுடன் அவனாகவே கழட்டி கொடுத்ததை வாங்கி இரண்டு சுற்றுகளாக கண்களை மறைத்து கட்டியவள் "அவங்கள கொல்ல வேணாம், ஆனா ஜென்மத்துக்கும் நடக்கவே முடியாத மாதிரி அப்படி நடந்தாலும் அனுதினமும் நரகமா இருக்கிற மாதிரி தான் செய்யனும், முடியுமா?". 

சட்டெனெ மலர்ந்த புன்னகையுடன் அவளருகே வந்து சற்று குனிந்தவன் கேட்டான் "நீ ஏதோ சொன்ன எனக்கு சரியா கேட்கல"

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவள் பதிலுக்கு கேட்டாள் "உங்களுக்கு சரியாய் தான் கேட்டுது கேட்ட மாதிரி செய்ய முடியுமா இல்லையா?"

அருகே நின்ற சுபத்ரா வெளிப்படையாகவே தலையில் அடித்தாள் "இவள் சரியான தோலை முழுங்கி, அவன் சும்மாவே ஆடுவான் அவன் காலில் சலங்கையை வேற கட்டி விடுறாளே"

அக்காவின் புலம்பலில் சிரித்தவன் சன்விதாவுடன் வார்த்தையில் மல்லடா பிடித்து தொலைக்க "இல்லாவிட்டால் என்ன செய்வாய்? நீயே அடித்து விடுவாயா?" கேலியாக கேட்டான்.

"ஹ்ம் நான் பிளாக் பெல்ட் அந்த ஸ்டிக்கை முறித்து காட்டவா?" கையை நீட்டினாள். (அறிவு கெட்டவளே ஹாக்கி ஸ்டிக்கையா கேட்ப)

"பின் எதுக்குடி பயந்து கண்ணை கட்டியிருக்க"

"அதுவா எனக்கு ரத்தம் பார்க்க பயம்"

"சுத்தம்" என்றவாறு ஒரு பக்க உதடு மட்டும் சிரிக்க ரவுடிகளை நோக்கினான்.

அதற்குள் சுபத்ரா "உனக்கு அப்படி என்னம்மா கோபம் இவர்கள் மேல்" என கேட்க "உங்களுக்கு தெரியாது அக்கா இந்த பாவிகளால் இரண்டு குழந்தைகள் அப்பா பக்கத்தில வந்த கூட பயந்து சாகுது" அழுகுரலில் கூற அதுவரை பொறுமையாக நின்ற அச்சுதனின் கை  ஹாக்கி ஸ்டிகை இறுக பற்ற சன்விதாவுக்கு அடி விழும் சத்தமும் எலும்புகள் முறியும் சத்தமும் வலியில் அலறிய சத்தமுமே சற்று நேரம் கேட்டது. அதன் பின் கத்துவதற்கு கூட திரணியில்லாத ரவுடிகளின் முனகல்கள் மட்டுமே கேட்டது.

"வேணாம் அச்சுதா விட்டுரு"

"இதுக்கு மேல செத்துருவாங்க விடு"

"உன்னோட கோபத்தை இவர்களிடம் காட்டாதே"

முகத்தை சற்று திருப்பி காதுகளை கூர்மையாக்கி சத்தத்தை வைத்து நடப்பதை அறிய முயன்றாள் சன்விதா. ரவுடிகள் வலியில் கத்தும் சத்தத்துடன் அர்ஜுனும் அருணும் அவனை தடுக்க முயற்சிக்கும் சத்தமும் கேட்கவே மெதுவே கண்கட்டுகளை அவிழ்க்க "கழட்டாதே.." எச்சரித்தாள் சுபத்ரா.

அதையும் மீறி கழட்டியவள் நடுங்கிவிட்டாள் அவன் ஆடி வைத்திருந்த ருத்ர தாண்டவத்தில் மொத்தமாக இரண்டு நிமிடங்கள் கூட இருந்திருக்காது பத்து பேரை துவம்சம் செய்திருந்தான் அச்சுதன். அவர்கள் பெற்றோரும் மனைவியும் வந்தாலும் அடையாளம் காண முடியாது போல் இருந்தனர். சும்மாவே அவர்களை பந்தாடியிருப்பான் இதில் சன்விதா வேறு கோரிக்கை வைத்திருக்க பிரளய தாண்டவமே ஆடிவிட்டிருந்தான். அப்போதும் ஒருத்தனை போட்டு மிதித்து கொண்டிருந்தவனை தடுக்க போனாள். முகத்தை மூடி கொண்டிருந்த சுபத்ரா அவளை பிடித்து நிறுத்துவதற்கு முன் சென்று அச்சுதன் தோளை தொட்டாள்.

பொதுவாக அச்சுதன் பொது இடத்தில் கோபத்தை வெளியிட மாட்டான். கோபம் வரும், கட்டுக்கடங்காத கோபம் வரும் ஆனால் இரையை பார்த்து வைத்து வேட்டையாடும் புலியாக வேட்டையாடுவான். உணர்வுகளை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்க மாட்டான். சிறிது காலமாக சன்விதா விடயத்தில் எல்லாமே தலைகீழாக நடந்து கொண்டிருந்தது. அவள் சம்பந்தபட்ட வரையில் அவன் உணர்ச்சிகள் எந்த விதத்திலும் கட்டுப்படுவேனா என அவனிடம் மல்லுக்கு நின்றது .

அச்சுதனின் பின்னால் வந்து நின்றவள் முடிந்த வரை சுற்றியிருந்த ரத்தத்தை பார்க்காமல் அவனுக்கு பின்னால் நிற்க அவளது முழு உருவத்தையும் மறைத்து பார்வையை தடை செய்தது அவன் முதுகு. அவள் தோளை தொட சட்டென திரும்பியவன் முகம் சிவந்து நெற்றி கழுத்து நரம்புகள் எல்லாம் புடைக்க சிவந்த கண்களுடன் அவனை பார்த்தவள் அவளையுமறியாமல் இரண்டடி பின்னால் செல்ல முன்னே கிட்டே தெளிவாக தென்பட்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றிந்தாள் சன்விதா. ரத்தமும் சதையுமாக பார்த்ததுமே தலை கிர்ரென்று வர தலை சுற்றி விழ இருந்தவளை நெஞ்சில் தங்கி கொண்டான் அச்சுதன்.

ஹாக்கி ஸ்டிக்கை தூக்கி எறிந்துவிட்டு ஒரு கையால் இடையே பிடித்தவன் மறு கையால் அவள் முகம் நிமிர்த்தி கன்னம் தட்டியவன் "உன்னை யாரடி கண் கட்டை கழட்ட சொன்னது" தவிப்புடன் கேட்டவனின் குரலில் அரை மயக்கத்தில் இருந்தவள் மெல்ல கண் விழித்தாள்.

சன்விதாவுக்கு மீண்டும் வேறு உலகம் மாறியது போல் இருந்தது மீண்டும் அந்த கோவில் வாசலில் அவனை முதல் முதல் பார்த்த இடத்திற்கே சென்றுவிட்டிருந்தாள் அன்றும் இதே போல்தான் அவன் நெஞ்சில் தாமரையாக பூத்திருந்தாள். அத்துடன் இப்போதும் இடையில் அழுத்தமாய் படிந்திருந்த அவன் கரங்கள் மூலமாக உடலில் பாயும் மின்சாரம் கொடுக்கும் உணர்வு சொல்லியது அவள் இதயம் தேடிய கள்வன் இவன் தானென, எத்தனை நாட்களாக தேடி கொண்டிருக்கிறாள். இமை தட்டி விழித்தவள் இதழ்கள் மட்டும் அசைய சத்தம் கேட்கவில்லை.

மீண்டும் கன்னம் தட்டியவன் "என்னம்மா என்ன செய்யுது என்னடா சொல்லுறாய்" பயத்தில் இதயம் லயம் தப்ப கேட்டவன் குனிந்து அவள் இதழருகே காதை கொடுத்தான்.

"அன்று மம மணி கோவில் பிடித்தது நீங்கள் தானே" வார்தைகள் கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.

"நானேதான், அதற்கு இப்போ என்னடி பிரச்சனை"

"உங்களைத்தான் நான் தேடி....." அத்துடன் கைகளில் மயங்கியவளை குழப்பத்துடன் பார்த்தான் அச்சுதன்.

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 13

கைகளில் மயங்கியவளை குழப்பத்துடன் பூக்குவியலாய் கைகளில் அள்ளியவன் அக்காவையும் அத்தானையும் பார்த்து "இப்படியே வீட்டிற்கு அனுப்ப முடியாது இல்லையா" கேட்டான்.

அர்ஜுன் சுபத்ரா இருவரும் கலீரென சிரித்துவிட்டனர்.

அவனது முறைப்பில் வேகமாக தலையாட்ட "பக்கதில் கம்பனி கெஸ்ட் ஹவுஸ் இருக்கு இப்ப யாரும் இல்ல நாங்க அங்கே போறோம். நீ இதை முடித்து வா" சுருக்கமாய் அருணுக்கு கூறியவன் ஓரடி எடுத்து வைத்தவன் நல்ல தம்பியாய் "அக்கா உன்னோட நகை" என இழுக்க சுபத்ரா குருவியாய் தலை சாய்த்து "தப்பித்து விட்டாய் எனக்கும் எடுத்திட்டான், நீ ஆர்டர் கொடுத்த அந்த பென்டனும் எடுத்தாச்சு" கேலியாய் கூறினாள்.

வெட்கத்துடன் சிரித்தவன் “சரி போவோம் வா” என்று முன்னே நடந்துவிட்டான். விட்டால் இதை வைத்தே இன்னும் ஒரு வருடத்திற்கு அவனை ஓட்டுவாள் அவனது அக்கா .

சுபத்ராவும் சேர்ந்து அச்சுதனுடன் காரில் ஏற போக "இடம் காணாது நீ மற்ற காரில் வா" என கூறி சட்டமாய் அமர்ந்துவிட்டான். பின் ஸீட்டில் இருந்தவன் அவளை மடியில் போட்டு கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான் பயனில்லை என்றதும் எக்கி முன்னே இருந்த தண்ணீர் போத்தலை எடுக்க முயல எதுவோ தடுத்தது. என்னவென்று குனிந்து பார்த்தவன் முகம் புன்னகையை தத்தெடுத்தது. மயக்கத்திலும் அவனது ஷிர்டினை கழுத்தடியில் இறுக்கி பிடித்திருந்தாள் அவன் ரோஸ்.  

♥♥♥♥♥

அவள் கழுத்தில் இருந்த செயினில் எஎஸ் என்ற பெண்டனை கோர்த்து விட அழகாய் அவள் தொண்டைக் குழிக்குள் நின்ற பெண்டனை ஒருவிரலால் சுண்டினான். “ஐம் சாரி ரோஸ், நான் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கனும்” கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து ஒரு கையால் கன்னத்தை வருடியவன் அவள் கையை எடுத்து உள்ளங்கையில் இதழ் பதித்து கன்னத்தோடு அழுத்தி கொண்டான். சன்விதா புருவத்தை சுருக்கவே அவள் முன் குனிந்து அழைத்தான்.

"ஹேய் ரோஸ்" அந்த குரலில் கண்களை திறந்தவளுக்கு முன்னே தென்பட்ட அச்சுதன் முகத்தில் அதிர்ந்து எழும்ப முயல நெற்றியும் நெற்றியும் முட்டி கொண்டது.

"அவுச்"

"அவுச்"

அச்சுதன் விலக நெற்றியை தடவியவாறே நேராக அமர்ந்தாள் சன்விதா.

“எப்போதாவது சொல்வழி கேட்டதுண்டா மிஸ்டர் அச்சுத கேசவன்” அடிக்க சொன்னதை வசதியாய் மறந்துவிட்டாள்.

"இல்லையே ரோஸ்"

"அப்ப பழகி கொள்ளுங்கள்"

"ஏன்"

"உங்களுக்கு நல்லது "

"நிச்சயமா நீ சொல்லி மறுப்பேனா ரோஸ்?"

"ரோஸ் சொல்லாத சொன்னேன்"

"இப்ப தனியா தானே இருக்கிறோம் "

"ஆ........................"

"என்னாச்சு"

"யாரு சத்தம் போட்டது"

சுபத்ரா அர்ஜுன் இருவரும் ஓடி வந்தவர்கள் அச்சுதன் நின்ற கோலத்தை பார்த்து சிரிப்பை அடக்கி கொண்டனர். கட்டிலிலிருந்து மூன்றடி தூரத்தில் பாம்மை (Bomb) பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான். சன்விதா கட்டிலில் கண்களை இறுக மூடி கைகளை முஷ்டியாக்கி வைத்திருந்தாள். கண்களை திறந்து முன்னால் சுட்டுவிரல் நீட்டியவள் இடம் வெறுமையாக இருக்க இடம் வலமாக பார்த்து அச்சுதனை நெருங்கியவள்

"இந்த மாதிரி பின்னால ஆள் அனுப்புறது எனக்கு பின்னால் சுத்துறது எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கொள்ளுங்கள்"

 "நான் செய்வன், என்ன செய்வாய்?"

"ஈவ் டீஸ் பண்ணுறத போலீஸ் காம்ப்ளயின் செய்திருவன்"

"ஓஹ் ரியலி"

அவள் முறைத்துக் கொண்டிருக்க, அவனோ அவள் கோபத்தை ஒரு பக்க உதட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

"சன்விதா நீ எங்கே இங்கே"

"என்ன மேன் மிமிக்கரி எல்லாம் பண்ற"

அச்சுதன் வேகமாக தலையசைத்து கண்ணால் கட்டினான். பின்னால் நின்றிருந்தான் சரவணன்.

"என்ன ஆடு தானா வந்து பிரியாணி போட தலை கொடுக்குது" முனகியவள் குரல் அச்சுதனுக்கு கேட்க சிரிப்பை கன்னத்துள் கடித்து அடக்கினான். 

“ஓஹ் வை ஹலோ மிஸ்டர் சரவணன்”

தவறான நேரத்தில் வந்தது புரிய “இல்ல நான் சரவனே இல்ல, பிழையான ரூம் வந்திட்டேன்”

அவன் அருகே வந்த சன்விதா "இல்ல சரவன் சரியான ரூமுக்கு தான் வந்திருக்க"

சரவணன் பாவமாக விழித்தவன் "லுக் சன்வி ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது"

"ஓஹ் ரியலி" கிண்டலாக கேட்டவள் அவன் காலில் ஓங்கி மிதித்தாள்.

"ஆ.....வ்......."

"காட்டு பூனை"

முறைத்தவளிடம் "இல்ல அந்த பக்கம் ஓடிச்சு" அப்பாவியாய் ஜன்னலை காட்டினான் அச்சுதன்.

"உனக்கும் எனக்கும் பகை பகை தான் சரவன் இல்ல இல்ல மிஸ்டர் சரவணன்"

"ஏய்.. சன்விச் அப்படியில்ல நிஜமாவே எனக்கு தெரியாதும்மா"

"சன்விச்" புருவம் உயர்த்தினான் அச்சுதன்.

"மிஸ் சர்மா மிஸ்டர் சரவணன், மிஸ் சர்மா"

"அவனுக்கு உண்மையிலேயே அதை பற்றி தெரியாது சன்வி"

“அவனுக்கு நீங்கள் வக்கீலா” அவனிடம் பாய்ந்தாள்.

கைகளை உயர்த்தி இரண்டடி பின்னால் சென்றவன் வேகமாக இல்லை என்று தலையாட்டினான்.

"கதவு எங்கே"

"எதுக்கு"

"ஹ்ம்ம் அப்படியே ஊர் சுத்த தான், வீட்ட போறத்துக்கு மேன்"

"கார் வரும் வெயிட் பண்ணு"

"என் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும்"

"இப்ப நேரம் என்ன தெரியுமா?" கோபத்துடன் கேட்டான் அச்சுதன்.

"....." அப்போதுதான் நினைவு வந்தது போன் பர்ஸ் எதுவும் கையில் இல்லை.

"கொஞ்சம் பொறு அக்காவும் அத்தானும் உன்னுடன் வருவார்கள்"

அர்ஜுன் சுபத்ரா, சரவணன் அங்கு அப்போது வந்த அருண் அனைவரும் இமைதட்டி விழித்து எட்டாவது அதிசயமாக அவனை பார்த்தனர்.

அனைவரையும் டீலில் விட்டவன் "அக்கா நீங்களும் அத்தானும் சரவணனோட போங்க இன்று அவள் ஆபிஸ் லீவு, வீணே பயப்படுத்த வேண்டாம் அவளின் அம்மா அப்பா கேட்டால் போன் மிஸ் பண்ணிட்டாள் நீங்கள் சாப்பிட அழைத்ததால் நேரமாகிவிட்டது என்று கூறிவிடுங்கள்" பாதி பொய்யையும் பாதி மெய்யயையும் கலவையாக்கினான். 

சரி என்று நடந்தவர்களை "ஒரு நிமிடம்" என்று நிறுத்தினான் ‘இப்ப என்ன’ என்பது போல் பார்க்க "உள்ளே போக வேண்டாம்" அழுத்தமாய் கூறினான். அர்ஜுன் சுபத்ரா ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் எதுவும் பேசாமல் நடந்தார்கள்

சன்விதா ஏன் என்பது போல் பார்க்க அவள் பார்வையை முதல் முறை தவிர்த்தான் அச்சுதன்.

சாதாரணமாக ஷர்ட்டை முட்டி வரை ஏற்றி பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு அவள் கழட்டிய டையை காட்டாமல் இரண்டா மடித்து கழுத்தை சுற்றி போட்டிருக்க அது காற்றில் பறக்க அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்திருந்த அச்சுதனை காரிலிருந்து திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள் சன்விதா.

கார் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தவன் உதட்டில் அழகிய புன்னகை உதித்தது.

♥♥♥♥♥

காரை விட்டு இறங்கியவள் சுபத்ராவை குழப்பமும் தயக்கமுமாய் பார்க்க புன்னகையுடன் கையசைத்தாள். தயங்கியவாறே உள்ளே செல்ல எத்தனித்த சன்விதாவை அழைத்தார் பத்மாவதி. துளசி மாடத்தின் அருகே வந்த பத்மாவதி “சன்விதா, உன்னோட பிரெண்டும் வந்திருக்கிறாளா? உள்ளே வரச்சொல்லு, கரண் உன்னை பார்க்கதான் வைட்டிங்” சத்தமாய் அழைத்தார்.

கரண் என்ற சொல்லில் மற்றது மறக்க ஓடி சென்றவளை இடையோடு அள்ளி சுற்றி அணைத்துக் கொள்ள கழுத்தை கட்டிக்கொண்டு சிறுமியாய் குதூகலித்தாள். அப்படியே சுற்றியவாறே வீட்டினுள் சென்றவர்களை கண்கள் சிவக்க உடல் முறுக்கேற காட்சியாக பார்த்து கொண்டிருந்தான் அச்சுத கேசவன்.

சலீர்.... போன் சில்லு சில்லாய் உடைந்திருந்தது.

♥♥♥♥♥

உள்ளே சென்ற சன்விதா வேகமாக கரண் தோளில் அடித்து தள்ளிவிட்டாள். "பேசாதே உன்னுடன் நான் கோபம் மறந்து போய் ஹக் பண்ணிட்டேன், போ" சிறுமியாய் கோபம் கொண்டாள்.

"ஆஹ் செல்லாது செல்லாது நீ முதலில் பேசிட்டே அதால மக்கா நாம ராசி ஆயிட்டாம்"

வடிவேல் ஸ்லாங்கில் உரையாடல் செல்ல அந்த வீடே களை கட்டியது.

ரெப்ரெஷ் ஆகி வந்தவள் "அம்மா பயங்கரமா பசிக்குது" கத்தியவாறே வர "நடுச்சாமம்டி ஏன் கத்தி ஊரை கூட்டுற உன் சாப்பாட்டை ஆந்தை தூக்கல வா" (இரவில்ல அதான் ஆந்தை பகல்ல காக்கா) மெலிதாய் கடிந்தார் பத்மாவதி. 

சாப்பிட்டு பெரியவர்கள் உறங்க செல்ல இவர்கள் மூவரும் ஹாலில் அமர்ந்து அரட்டை அரங்கம் ஆரம்பித்தார்கள்.

"அப்புறம், கனடால வெள்ளைக்காரி யாரையாவது பார்த்தியா?

“பார்வதியா பாத்தியா பாக்கு வெத்திலை மத்தினியா?”

“என்ன சொன்னாள்?”

“அதுசரி டெல்லி எப்ப போற?”

“உன்னோட கம்பெனி ஆரம்பிக்கிற திட்டம் எப்படி போகுது?”

“எனக்கும் வேலை கிடைக்குமா?”

“அப்புறம் ஏதோ கேக்கனுமே...."

இருவரும் கன்னத்தில் கைவைத்து ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் ஷப்பா முடில எஸ்ப்ரேஷனை ஒன்றாக வெளியிட சன்விதா தொடர்ந்தாள் "ஆ.... நினைவு வந்திட்டு இவளுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை எனக்கு புடிக்கல, நிச்சயத்தை எப்படி நிறுத்தலாம்?" ஆர்வமாக பார்த்தாள்.

அதிர்ச்சியில் கையிலிருந்த கன்னம் நழுவ விழ பார்த்தவன் சமாளித்து "ஏண்டி கல்யாணம் பண்ண போறது அவள் அவளுக்கு தானே பிடிக்கணும், இது என்ன நியாயம் மக்களே" மனஸாவை பார்க்க அவளுக்கும் சேர்த்து சன்விதா அலட்சியமாக பதிலளித்தாள் "அவளுக்கும் தான்". மானஸா வேகமாக மறுத்து தலையாட்டினாள்.

"இதுக்குத்தான் அவசரமா வர சொன்னாயே" சிறு சிரிப்புடன் கேட்டான் "இத நான் அங்கேயிருந்தே செய்திருப்பனே".

"ம்கூம்" மறுத்தவள் "அது பெரிய காரணம், இது சின்ன காரணம்" கையை அபிநயித்து கூறியவள் அழகில் "அவளுக்கு பிடிக்காவிட்டால் மணமேடையில் வைத்து என்றாலும் திருமணத்தை நிறுத்தலாம், அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை" என்று அவள் தலையை கலைத்து விட்டவன் "இங்கே வா" என்று அருகே அமர்த்தி கைவளைவில் கொணர்ந்தான் "உன்னோட பெரிய காரணத்தையே சொல்லு" புன்னகையுடன் கேட்டான்.

அவன் நைட் ஷிர்டின் பட்டனை திருகியவள் மனக்கண்ணில் சற்று நேரத்தின் முன் தன்னையே இமை வெட்டாது பார்த்த அச்சுதன் முகம் வந்து செல்ல முனகினாள் "எனக்கே குழப்பமா இருக்கு". அவள் அவனிடம் பேச விரும்பியது டெல்லியில் கரம் சந்த்தின் இடத்துக்கு போவோமா என கேட்கவே ஆனால் தீடிரென போக விருப்பமில்லாமல் போய்விட்டது.

கரம் சந்த் ஆர்மி கமாண்டோ, கேப்டனாக இருப்பவன் அந்த இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அச்சுத கேசவனால் கூட நெருங்க முடியாது. ஸ்ரீநகரில் அதியுயர் பாதுக்காப்பான இடங்களில் ஒன்று. அத்தையின் பெறாத மகன் கரம் சந்த் அவர் ஒன்று சொல்லி தட்டியதில்லை. நாட்டுக்கு விரோதமாகாத வரையில் எதுவும் செய்வான். ஆனால் இந்த பாழும் மனம் திடீரென சொல் கேட்குதில்லையே.

கரண் நிமிர்ந்து மானஸாவை பார்க்க அவள் சிரிப்பை அடக்க படாதபாடுபட்டாள். பின் அவளையும் இதே போல் தானே படுத்தி எடுக்கிறாள். எழுந்த சிறுநகையை மறைத்தவன் "உன்னோட பாடி கார்ட் என்ன செய்யுறான்" 

"ஆஹ்...." பட்டனை விட்டு நிமிந்து அவனை பார்த்தாள்.

"அதான் அந்த அச்சுத கேசவன் போன்ல பின்னாலயே சுத்துறான் என்றாய்"

"ரெம்ப கஷ்டமா இருக்கா?"

"..."

கீழ் கண்ணால் அவளை பார்த்தவன் "ஸ்ரீநகர்.... கரம் சந்த்திடம் போகிறாயா?"

அவள் விரும்பியதையே கேட்க லேசாக அதிர்ந்தவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தவள் உடனே ‘வேண்டாம்’ என்று மறுத்து அசைத்தாள். தலையை தடவி கொடுக்க அவன் மறு கையை எடுத்து விரல்களை சுற்றி விளையாடினாள். புருவத்தை நெறித்தான். சிறு வயதிலிருந்து என்ன செய்வது என்று தெரியாத போதே இப்படி நடக்க தொடங்குவாள்.

"அந்த மணி பார்ட்டி, கோவிலில் பார்த்தவனை சந்தித்தயா?"

குழந்தையாய் உதடு பிதுக்கினாள். அவன் முகம் ஆழ்ந்த யோசனையை தத்தெடுத்தது. 

உதடு கடித்தவன் "பிடிச்சிருக்கா?"

"ஹ்ம்ம் " கேள்வியாய் நோக்கினாள்.

"அவனை பிடிச்சிருக்கா? அச்சுத கேசவனை"

மீண்டும் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள். 

"இரண்டு நாள் லீவு போட்டுரு"

"அவன் விட மாட்டான் பின்னாலேயே வருவான் இல்லையா ஆபிஸ் வர சொல்லுவான்" மீண்டும் வாய்க்குள் முனங்கினாள்.

பத்மாவதி உள்ளிருந்து குரல் கொடுத்தார் "கரண் வெளிநாடு போய் வெறும் தொண்ணூறு நாளில் திரும்பி வந்திருக்கிறான் இதில் தினமும் மூன்று மணித்தியாலம் போன் கதை வேற போய் படுங்கள் மூவரும் அவன் இரண்டு நாள் பிரயாணம் செய்து வந்திருக்கிறான்”

நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவன் "எல்லாம் பார்த்து கொள்ளலாம் போய் படு" கண்களை விரித்து நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண் மூடி ‘நான் இருக்கின்றேன்’ என தைரியம் கொடுத்தான்.

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 14

அனைவரும் உறங்கி விட சன்விதாவுக்கு மட்டும் உறக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி விளையாடியது. ஏதோதோ எண்ணங்கள் அலைக்கழிக்க அதிகாலையில் ஒருவாறு உறங்கினாள்.

காலை சரவணன் அலுவலகம் வரும் நேரம் பார்த்து போன் எடுத்தவள் இன்று வர முடியாது லீவு என் தெரிவிக்க சரவணனுக்கும் நேற்று நடந்தது தெரியும் ஆகையால் வர சொல்லி வற்புறுத்த முடியவில்லை. நிமிர்ந்து முன்னிருந்த AK வை பார்த்தான். அவன் எதையோ எழுதி பேப்பரை அவன் பக்கம் திருப்ப விடுமுறை என்று எழுதி கேள்விக்குறி போட்டிருந்தான். "சன்வி ஏன் விடுமுறை நேற்றைய பிரச்சனையில் உடல்நிலை ஏதும் சரியில்லையா?"

"ஹ்ம்ம் கொஞ்சம் அதுவும் தான் எனக்கு கொஞ்சம் யோசிக்கனும் அதோட கரண் வந்திருக்கான்"

எதிரில் இருந்தவன் பல்லை கடித்த சத்தம் அவளுக்கு கேட்டுவிடுமோ என பயந்தவன் சட்டென கேட்டான் "எதை பற்றி AK கல்யாண மேட்டரா? கரண் இப்பதானே கனடா போனான். அதற்குள் ஏன் வந்தான்?"

"நான்தான் வர சொன்னான் "

இங்கே அச்சுதன் கைகளில் பென்சில் முறிந்தது.

"எதுக்கும்மா......!"

"ச்சு நானே குழப்பத்தில் இருக்கேன், நீ வேற கேள்வி கேட்காத நேற்று நடந்தது இன்னும் வீட்டில் சொல்லல அது வேற டென்ஷன் ஏறுது"

அச்சுதன் மீண்டும் பேப்பரில் ஏதோ எழுதி அவனை நோக்கி திருப்பினான், அதை பார்த்தவன் "இன்று எங்காவது போக பிளான் இருக்கா? நானும் ஜோயின் பண்ணலாமா?"

"பேசாதடா, உனக்கும் எனக்கும் பகை பகைதான் உன் பிரன்ஷிப் கட்"

"சரி கரண் எனக்கும் பிரண்ட் தா நான் அவனிடமே கேட்கிறேன் போடி"

அச்சுதன் புருவத்தை நெற்றி மேட்டுக்கு உயர்த்தினான்.

"போடா டால்டா"

"ஹலோ ஹலோ... கட் பண்ணிட்டாள்" சிரித்தவாறே போனை வைத்தவன் நிமிர்ந்து அச்சுதனை பார்த்தன். அவன் போடி சொன்னதில் முறைத்தவனுக்கு பதிலாக "உங்களுக்கு லவ்வர் ஆக முதல் எனக்கு பிரண்ட்" கெத்தாகவே சொன்னான்.

அச்சுதன் சற்று ஏளனமாக பார்க்க அதற்கு பதிலாய் "என்ன பிரென்ட்க்கு எதிரா ஹெல்ப் பண்ணுறான் என்று ஏளனமா? உங்க கண்ணுல ட்ரு லவ் பார்த்தன் அதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறன். உங்களோட அந்த பழக்கம் மட்டும் தான் மைனஸ் இல்லாட்டி இந்நேரம்...." மீதியை வாய்க்குள் முழுங்கினான்.

"ஆனாலும் ஜித்தண்டா நீ" சொன்னவனை கோபப்படுவதா வேண்டாமா என அச்சுதன் புரியாமல் பார்க்க அவனே தொடர்ந்தான் "கரணையே வர வைக்க வச்சுட்டா இல்ல"

தலை சாய்த்து ஊன்றி பார்த்தது ‘அவன் வாரத்துக்கும் நான் ஜித்தனாவதற்கும் என்ன சம்பந்தம்’ என்பது போல் இருக்க பதிலளித்தான்.

"அவளை யோசிக்க வைச்சு குழப்பி விட்டுட்ட இல்ல அநேகமா அவன் திரும்பி போறதுக்குள்ள உன் விஷயமா சன்வி ஒரு முடிவு எடுத்திருவாள்"

அச்சுதனுக்கு சுத்தமாய் பிடிக்கவேயில்லை. வேண்டாம் என்று சொல்வதை ஏற்க போவதில்லை அது வேறு விடயம் ஆனால் வேண்டுமோ வேண்டாமோ அதை அவள் தானே சொல்ல வேண்டும். அந்த கரணை ஏன் கேட்க வேண்டும் அவன் மனம் முரண்டி சிணுங்கியது.

நேற்று இரவு அவர்களை நேரடி காட்சியில் பார்த்ததிலிருந்து மனதை எதுவோ அரித்துக் கொண்டிருந்தது.  அவள் கரணை கட்டி கொண்டதை விட அவனை பார்த்ததில் அவள் உடல் மொழியில் வெளிப்பட்ட சந்தோசம்தான் அவனை தூக்கமின்றி தவிக்கவிட்டு நிம்மதியில்லாமல் செய்தது. ஒரு தரம் கூட அவனை பார்க்கையில் அப்படி ஒரு சந்தோசம் அவளிடம் தென்படவில்லை என ஆட்களை ஒரு பார்வையில் எடை போடும் அந்த பிசினெஸ்மானுக்கு தெளிவாகவே புரிந்ததது. ஆனால் மனதில் ஏற்படும் உறுத்தல் என்னவென புரியாமல் மனம் சொல்லும் திசை புரியாமல் இரவு முழுதும் உறக்கமின்றி தவித்தான் அச்சுதன்.

விடிய விடிய கோபத்தில் நடந்து, உள்ள வேலைகளை எல்லாம் ஓரம் கட்டி விடிந்தும் விடியாததுமாய் அலுவலகம் வந்தால் ஆற அமர அவள் லீவு சொல்வதை கேட்டு எரிச்சல் வர சரவணனை போகும்படி சைகை செய்தவன், டையை லூசாக்கி கழுத்து பட்டனை கழட்டி இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தான்.

கையில் வைத்து சுழற்றிக்கொண்டிருந்த போனை ஒரு கணம் பார்த்தவன் சிறு யோசனையின் பின் கான்டாக்டில் இருந்து ஒரு நம்பருக்கு அழைத்தவனுக்கு பதிலாக "திரும்ப படுத்துவிட்டாள், ஆரோக்கியம் நன்றாக இருக்கு, டயர்ட் என்று நினைக்கிறன்" தந்தி மொழியில் பதில்வர "ஹ்ம்ம்" என்ற பதிலை கேட்டதோடு லைன் கட்டானது.

ஏனோ இன்று அவளை வற்புறுத்தி அழைக்க மனமின்றி பெல்லை அழுத்தினான். எப்படியும் இன்று இங்கே ஒரு இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது அத்தனை வேலைகள் வரிசைகட்டி நின்றன. அதையாவது சரியாக பார்ப்போம் என கிளம்பிவிட்டான்.

♥♥♥♥♥

அலுவலகத்துக்கு விடுமுறையினை அறிவித்தவள் மீண்டும் விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.  நேற்றைய அலைச்சல், அதன் பிறகான ஓட்டம் பயம் அதிகாலை வரை விழிப்பு என அனைத்தும் அவளின் சக்தியை இரண்டு எக்ஸ்ட்ரா ஸ்ட்ரோ போட்டு உறிஞ்சி எடுத்திருக்க கிட்டத்தட்ட நண்பகல் பதினோரு மணிவரை நல்ல உறக்கத்திலிருந்தாள்.

ஆனால் அவள் படுத்த சிறிது நேரத்திலேயே எழுந்த கரண் மானஸாவை அழைத்து கொண்டு அருகேயிருந்த காபி ஷாப் சென்றான். அச்சுதன் வீட்டிற்கு வந்தது பின் தான் அவனை சந்திக்க சென்றது. சன்விதா தான் குழம்புவது புரியாமலே குழம்பி தவிப்பது பின் டெல்லியில் பார்த்தவனை தேடுவது இப்போது தேடாமல் இருப்பது கடைசியில் நேற்று உறக்கமின்றி தவித்தது என மானசா அனைத்தையும் அவனுக்கு கூறினாள்.

அனைத்தையும் கேட்டவன் அந்த கோவிலில் வேலை செய்யும் தன் நண்பனுக்கு போன் செய்து குறித்த தினத்தில் கோவிலில் உள்ள சிசிடிவி பூட்டேஜ், நான் வேறு யாருக்கும் தர வேண்டாம் என்று சொன்னேனே அந்த பூட்டேஜ் எடுக்க முடியுமா அவசரம் என கேட்க அவனும் இன்று மாலைக்குள் அனுப்பி வைப்பதாக கூறி வைத்தான்.

புரியாமல் பார்த்த மானாஸாவிடம் "அவன் யாரென்றும் தெரிந்து வைக்க தானே வேண்டும்" பூடகமாக உரைத்தான்.

"அப்படியென்றால் அன்றே அதை கொடுக்க வேண்டாம் என்று ஏன் தடுத்தாய்? அன்றே  எடுத்திருக்கலாம் தானே நீயும்தானே நின்றாய்?" அவனை கூர்ந்து நோக்கியவாறே கேட்டவளின் கண்கள் வட்டமாய் விரிந்தது "அவன் யாரென்று உனக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா? அன்றே நீ கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஆக இருந்த இல்லையா?"

முறுவலை பதிலாய் தந்தவன் "இன்று மூவருமாக வெளியே போவோம்" என்றான்.

"போகலாம், ஆனால் சன்விச் எதையோ மறைக்கிறாள் நேற்று ஏதோ சம்பவம் நடந்திருக்கு" யோசனையுடன் பதிலளித்தாள் மானஸா.

"ச்சு.. இன்று சொல்லுவாள் நேற்று சந்தர்ப்பம் அமையல, நான் அவனை சந்திக்க வேண்டும் இதுதான் சரியான வழி"

"நாம் வெளியே சென்றால் அவரை எப்படி சந்திக்க முடியும்"

"நேற்றைக்கு பின் சன்வி எப்படியிருக்கின்றாள் என்று அறிய முயலுவான், நிச்சயம் எப்படியும் இன்று பார்த்தே தீருவான், வீட்டிற்கு வர மாட்டான் எனவே நாம் செல்லும் இடத்திற்கு வருவான்"

"அவனுக்கு யார் சொல்வது"

"அதைத்தான் நானும் யோசிக்கின்றேன் பார்ப்போம் ஆனால் நிச்சயமாக வருவான்"

அவர்கள் வீடு திரும்பிய போது அத்தையின் மடியில் தலைவைத்து படுத்து மூக்கால் ராகமிட்டு கொண்டிருந்தாள் சன்விதா "பூவாஜி அவர்கள் வந்தால் அருகில் கூட சேர்த்து கொள்ளாதே என்னை விட்டுட்டு வெளிய போயாச்சு ஹ்ம்ம்"

ஒருவரை ஒருவர் பார்த்து சத்தமின்றி சிரித்தவர்கள் "சரி அப்ப நாங்க மட்டும் தனியா போவம் மால் போய் பீச் போய் சாப்பிட்டு மெயினா குல்பி சாப்பிட்டு வருவோம்" சொல்லியவாறே வந்து அத்தையின் மறுபுற தோளில் சாய்ந்து அமர்ந்தான் கரண்.

சிறுபிள்ளையாய் அவனை தள்ளிவிட்டவள் "பூவாஜி, என்னை விட்டுட்டு போய் குல்பி குடித்தால் பாத்ரூம்க்கு தான் அல்லடனும் சொல்லிவைங்க" மறைமுக எச்சரிக்கையாய் சாபம்விட்டாள்.  

"இந்த பத்மாவதி.... " இவர்கள் பேச்சை காதிலேயே எடுக்காமல் எழுந்து உள்ளே போனர் அத்தையம்மா பின் சண்டை முடிய மூவரும் சேர்ந்து அவர் மேல் அல்லவா பழி போடுவார்கள். புருஷன் பொண்டாட்டி சண்டையில் மட்டுமல்ல இவங்க சண்டையிலும் தலை போடக்கூடாது. அனுபவம் சிறந்த ஆசானாய் வழிகாட்ட பத்மாவதியிடம் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார் அவர்.

"என்னடா என்ன நடந்தது" பரிவுடன் கேட்டான் கரண். அவன் தோளில் தலைசாய்த்து மயங்கியது வரை ஒன்று மிச்சமில்லாமல் கூறியவள் "ஆனா எனக்கு அந்த ரவுடி கும்பலை விட வேறு யாரோவும் பின்தொடருற மாதிரியே இருக்குடா" என்றாள்.

"சரி என் பயப்புடுறா அதன் உன்னோட பாடி கார்ட் இருக்கானே"

"அவனை கண்டா தானே இன்னும் பயமா இருக்கு"

"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, அது சரி பிளைட்ல வந்தது நானு தூங்கி வழியுறது நீயா ஏன்"

"இரவு முழுக்க தூக்கம் வரலடா, ஏன் என்றே தெரியல"

"சரி நாலு மணிக்கு மால் பீச் போவோம் ரெடியாகு" என்றவனிடம் “ம்ம்ம்” என்று உற்சாகமாக தலையாட்டியவள் சோபாவின் மறு பக்கத்தில் தலை சாய்த்து மீண்டும் உறங்க தொடங்கி ஆவென அலறி அடித்து பிடித்து எழும்பியிருந்தாள். ஒரு வாளி தண்ணீரை தலையிலேயே கவிழ்த்திருந்தான் கரண். 

"அடேய்" என்றவாறு அடுத்த தண்ணீர் வாளியை எடுத்து கொண்டு துரத்த மானஸாவின் பின் ஒழிய கங்கா அபிஷேகம் மானஸாவுக்கு நடந்திவிட்டு இருவரும் மீண்டும் துரத்து பட "சிவனேன்னு தானே போயிட்டு இருந்தேன்!" என்றவாறு இருவரையும் சேர்த்து துரத்தினாள் மானஸா.

ஹாலுக்கு வந்த பத்மாவதி "இது மூன்றும் வளர்ந்தது தான் மிச்சம்" சிரித்தவாறே தலையில் அடித்தபடி அவ்விடத்தை துடைத்துவிட்டார்.

♥♥♥♥♥

அச்சுதனின் போன் அதிரவே இலக்கத்தை பார்த்துவிட்டு முன்னிருந்தவர்களிடம் ஒரு நிமிடம் என்றவன் கைபேசிக்கு பதிலளித்தான்.

"எழும்பிட்டாங்க பின்னேரம் நாலு மணிக்கு பிறகு வெளிய போறாங்களாம்" ஒரு குரல் கைபேசியில் கூற "எப்படி இருக்கிறாள் இப்ப" சுருக்கமாய் கேட்டவனுக்கு பதிலாக "மோர்னிங் கொஞ்சம் டல்லா தான் இருந்தாங்க இப்ப சரியாயிட்டாங்க" பின்னணியில் சன்விதாவின் குரல் “அக்கா வேண்டாம் மீ பாவம்” சிரிப்பை சுமந்தபடி கேட்க புன்னகையுடன் தொடர்பை துண்டித்தான்.

திரும்பி அருகேயிருந்த ஆகாஷை பார்த்து "ஈவினிங் நாலு மணிக்கு பிறகு உள்ள மீட்டிங் எல்லாம் ரிசேடுயூல் பண்ணிடு" என்றவன் மீட்டிங்கை தொடர்ந்தான்.

♥♥♥♥♥

மீண்டும் AS மால்...,

"மூன்று குல்ஃபீ" என்றவள் திரும்பாமல் "உன் கார்ட் தாடா" என்று கேட்டவள் முன் கருப்பு நிறத்தில் வெள்ளி எழுத்துக்களுடன் ரோமன் சோல்ஜரின் படத்தை தாங்கிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சுரியன் கார்டு வர "என்னடா கார்டு மாத்திட்டியா" என்றவாறே அதை வாங்கி முன்னே இருந்த கேஷ் கவுண்டரில் கொடுத்தாள்.

பின்னேயிருந்தாதவன் விரல்களை குவித்து விரித்து ஐந்து என காட்ட அவன் ஐந்து குல்ஃபீ கொடுத்தான்.

"என்னடா மூன்று கேட்ட ஐந்து தாரான் இந்த கார்ட்க்கு டிஸ்காவுண்ட்டா இருக்குமோ" (அமேக்ஸ் பிளாக் கார்டுக்காம்மா? இருக்கும் இருக்கும்). ஒன்றை தான் எடுத்து கொண்டு மீதியை திரும்பி கூட பார்க்காமல் அவனிடம் கொடுத்தவள் கவனம் வேறொங்கோ இருந்தது.

சற்று தூரத்தில் எஸ்க்கலேட்டர் அருகே மானஸா முகம் மலர்ந்து விகசிக்க அருணுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவர்களை பார்த்தவாறே "என்னோடு வா" அவன் சட்டையை பிடித்து இழுத்தவாறே ஓரமாய் ஒளிந்தாள்.  குல்ஃபீ கவரை பிரித்து வாயில் வவைத்து உறிஞ்சியவாறே "அவரை எங்கேயோ பார்த்திருக்கின்றேன் ஆனா எங்கே அந்த ஜித்தன் கூடவா" நெற்றி தட்டி யோசித்தாள்.

"ஜித்தன்.....?"

"ஆஹ் அவன்தான் என்னோட பாடி கார்ட், ராஜராஜசோழன்" 

"அவர் யாரு எப்படி கண்டுபிடிக்கிறது அவளை கேட்ட சொல்லமாட்டாள், பாரு எப்படி ஆள ஆள் விழுங்கிற மாதிரி பார்க்கிறாங்கன்னு" மூக்கை சுருக்கி சுட்டு விரலால் தேய்த்தாள்.

அவளருகே இருந்தவன் குனிந்து அவன் ஷர்ட்டை பிடித்திருந்த கைகளை நோக்கி நெருக்கத்தில் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். மானஸா இவளை தேட கண்களை சுழற்றி பார்ப்பதை பார்த்து அருகே இருந்தவனையும் இழுத்து கொண்டு மூலையில் பதுங்கினாள். இரண்டாம் தரம் இழுத்ததில் பட்டன் கழன்று கழுத்தடியில் அவன் சருமத்துடன் புறங்கை பட்டும் படாமல் உரச அருகேயிருந்தவன் உணர்ச்சியில் கண் பாவை பெரிதாகி அதன் கபில நிறம் தெளிவாக தெரிந்தது.

சட்டென கையை எடுத்துக் கொண்டவள் கேட்டாள் "என்னடா ட்ரன்ஸ்போமார் வைச்சிருக்கியாடா கரண்ட் அடிக்குது....!"

Reply
Page 3 / 3
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”