யாசகம் ♥ 06
அன்றிரவு பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டவாறு நின்றவனிடம் வந்து நின்றான் அவனது நண்பன் அருண். எதுவும் பேசாமல் பார்த்தவன் பார்வையிலேயே பெண் பார்க்கும் படலத்தில் நடந்தது அனைத்தையும் விபரித்தான். புருவங்களில் முடிச்சுடன் அருண் முகம் பார்த்தவன் " சோ அவங்க அக்கா அத்தானை மரியாதையாக தான் நடத்தி இருக்கிறார்கள்.... ஆனா....." என இழுத்தவன் கேட்டான் "ரோஸ்.. ஐ மீன் சன்விதாவை அக்கா எப்போ எப்படி பார்த்தாங்க, உன்னோட கதைப்படி அந்த டைம் அவள்தான் வீட்டில் இல்லையே"
ஒரு கணம் தயங்கியவன் "அன்று கோவிலில் ஏதோ விசேஷம் என்று அக்கா தங்கை இருவரும் சென்றுவிட்டார்கள், அக்கா அவர்களை கோவிலில் சந்தித்தார்கள்"
"ஆனால், என்னை அவள் எப்படி அடையாளம் கண்டு கொண்டாள் நான் பழகிய எந்த வட்டத்துள்ளும் அவள் வர சாத்தியமே இல்லையே" அச்சுதன் முகத்தில் குழப்பத்தின் ரேகை ஓடியது.
"இல்லாட, அக்கா உன்னோட போட்டோ காட்டினார்கள், போட்டோ பார்த்ததும் தான் உன்னை அடையாளம் கண்டு....... " இப்போது குழப்ப ரேகை அருண் முகத்திற்கு ஒரே தாவாக தாவியது.
"இதை பற்றியும் கொஞ்சம் இன்வெஸ்டிகஷன் செய்ய சொல்லு அருண்" என்றவனிடம் விடை பெற்று திரும்பியவன் வாசலில் போய் நின்றவாறு அழைத்தான் "மச்சி.... தங்கச்சி சூப்பர் அதோட ஜோடி பொருத்தம் பிரமாதம்" பெரு விரலையும் சுண்டு விரலையும் சேர்த்து காட்டினான்.
சட்டென சிரித்தவன் அருகே இருந்த காற்றடைத்த ஜிம் பந்தை அவனை நோக்கி உதைக்க சிரித்தவாறே அங்கிருந்து ஓடிவிட்டான்.
♥♥♥♥♥
அடுத்த நாள் காலை.....
காலை நேர வாக்கிங் ஜாக்கிங் முடிந்து வரும் சீனி வந்த சீனியர்களும், கணவனுக்கு சாப்பாடு கொடுத்து விடும் மனைவிகளும், அப்படியே கணவன் பைக் பின் வேலைக்கு செல்ல தொத்தி கொண்ட பத்தினிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளை ஏற்றி செல்லும் பஸ்களும், பஸ் யன்னலூடே எட்டி பார்த்து குறும்பு செய்யும் குழந்தைகளும் அவர்களுக்கு டாடா காட்டும் அம்மாக்களும் என காலை நேர சுறுசுறுப்பை தத்துக்கு எடுத்தது போல் இருந்தது அந்த தெரு.
அந்த சாதாரண தெருவில் சற்று ஓரமாய் தள்ளி மர நிழலில் நின்ற BMW கார் மட்டும் அசாதாரணமாக தெரிந்தது. அதன் உரிமைக்காரன் அதன் மீது சாய்ந்தவாறு போனை கையில் வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அவ் வழியே சென்ற பெண்கள் யாருடா இந்த ஹீரோ என்பது போல் பார்த்து வைக்க ஆண்கள் அரவிந்தசாமி மட்டும் இல்லடா நீயும் எங்களுக்கு வில்லன் தாண்டா என்று மனதுள் தாளித்தவாறு சென்றனர்.
அருகில் இருந்த வீட்டிலிருந்து பெண் தனது அம்மாவுக்கு பை காட்டிவிட்டு அவனது காரை தண்டி சென்றாள். அவளது ஸ்கூட்டி தெரு முனையை தாண்டுவதை கார் பக்க கண்ணாடியில் பார்த்தவன் அந்த வீட்டை நோக்கி நடந்தான்.
டொக்..... டொக்.....
இப்ப தானே போனாள் எதையாவது மறந்திட்டளோ.... மனதினுள் நினைத்தவாறே கதவை திறந்தவர் முன் நின்றான் அவன்.
அலையலையாய் கருகருவென அடர்ந்த ஆரோக்கியமான கேசம், பரந்த நெற்றி, அடர்ந்த புருவங்களின் கீழ் ஈட்டி போல் பளிரிட்ட தீர்க்கமான கண்கள், நீண்ட நேரான நாசி, வரைந்தது போன்ற உதடுகள் ஒரு அழுத்தத்துடன் மூடியிருந்தது அவனது சதுர முகவாயை இறுக்கமாய் காட்டியது. களையான முகத்துடன் ஆறரை அடிக்கு அந்த வாசலை சிறிதாக்கி கொண்டு கறுப்பு நிற ஷர்ட்டும் சாம்பல் வண்ண பான்ட் அணிந்து நின்றவன் கரம் குவித்தான்.
"வணக்கம்.... உள்ளே வரலாமா..?"
அவனது உடையின் தரமும் நின்ற விதமும் கூறியது நான் சாதாரணமானவன் இல்லை என்று.
உள்ளே வருமாறு தலையசைத்த பத்மாவதி அவனது காலைப் பார்த்தார். அதில் சோக்ஸ் மட்டும் இருக்கவே நிமிர்ந்தவர் கண்களில் பட்டது துளசி மாடத்துக்கு அந்த பக்கம் வைக்கப்பட்டிருந்த காலனி. இது மாதிரியான பழக்க வழக்கங்கள் நல்ல பண்பான வளர்ப்பிலேயே சாத்தியம் இடையில் வராதது யோசனையுடன் தலை சாய்த்து பார்த்தார்.
"நான் கேசவன் அச்சுத கேசவன், AK இன்ஸ்ட்ராரீஸ் சேர்மன்" கர்வமின்றி சொன்னவன் அளவாய் புன்னகைத்தான்.
"உள்ளே வாருங்கள்" என அழைத்தவர் நீதானே வந்தாய் நீயே பேசு என்பது போல் அவன் எதிரே சோஃபாவில் அமர்ந்தவர் அமைதியாக இருந்தார்.
"நீங்கள் மறுத்ததாக அக்கா...... "
அவன் தொடர்வதற்கு முன்னே இடையிட்ட பத்மாவதி "இதை பற்றி தான் பேச வந்தீங்க என்றால் கதவு திறந்தே தான் இருக்கு" அவரது சட்டென்ற முகத்தில் அடித்தால் போன்ற பதிலில் அச்சுதனின் கண்களில் ஒரு கடினம் கண்ணிமைக்கும் நொடியில் கடந்தது மறைந்தது. AK இன்ஸ்ட்ராரீஸ் ஏகபோக உரிமையாளனினை இதுவரை அவமதிக்க துணிந்தவர் எவருமில்லை அல்லது அப்படியானவர்களை அவன் விட்டு வைத்ததில்லை என்று கூற வேண்டுமோ.
ஒரு கணம் கை விரல்கள் முஷ்டிகளாய் இறுக கண்ணை மூடி நிதானித்தவன் "உங்கள் கணவர் வேலை செய்வது என்னோட இன்னொரு கம்பெனில தான் சோ என்னை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்"
"பணம் மட்டுமே வாழ்கை இல்லை"
"AK இன்ஸ்ட்ராரீஸ் என்னோட அடையாளம், பணத்தையோ அந்தஸ்த்தையோ காட்டுவதாக இருந்தால் என் பரம்பரை கம்பெனியை தான் சொல்லி இருப்பேன்" அவன் தாத்தா காலத்தில் இருந்து வரும் அந்த கம்பனி பேர் சொன்னான். உப்பில் இருந்து கார்களின் பாகம் வரை தயாரிக்கும் ஒரு கம்பெனி.
அதிர்ந்து போய் இருந்தார் பத்மாவதி. AK இன்ஸ்ட்ராரீஸ்சே அவரது எண்ணங்களுக்கு அப்பால் நிற்க அவன் பரம்பரை பரம்பரையாக வந்த கம்பனியின் பெயர் அவரது கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் நின்றது. இவ்வளவு பெரிய நபர்களா தன் மகளை பெண் கேட்டு நேற்று வந்தது. அவர்கள் அந்தஸ்துக்கு வந்ததே பெரிது இதில் அவ்வளவு சாதாரணமாக வந்தது அதிர்ச்சியாக தான் இருந்தது. பணத்தில் மட்டுமல்ல பெயர் புகழிலும் உச்சத்தில் இருக்கும் குறித்து கூற கூடிய பரம்பரை அதன் வாரிசாக அவன். சட்டசபைக்கு யார் போவது என்பதை கூட எதிரில் இருப்பவன் நிர்ணயிக்க கூடும் என்பதனை நம்புவது சற்று கடினமாகவே இருந்தது பத்மாவதிக்கு. யார்தான் நம்புவார்கள் முப்பதுகளில் இருப்பவன் இவ்வளவு பெரிய ஆளாக இருப்பான் என்று. ஆனால் வெறும் பின்னணி மட்டும் இவனை இந்த நிலைக்கு கொண்டு வராது என்பது தெளிவாக புரிந்தது.
பத்மாவதி பேச்சின்றி அமர்ந்திருக்க ஒரு கணம் அவரை ஆழ்ந்து நோக்கியவன் அவனே தொடர்ந்தான் "அது என்னோட கடந்த காலம் மட்டுமே, இனி எப்போதுமே அப்படி நடக்காது இதை நீங்க நம்பலாம். இதுவரை அச்சுத கேசவன் சத்தியத்தை மீறியதில்லை இனியும் மீறமாட்டான்." கூறியவனின் கண்களில் தென்பட்ட உறுதியும் நேர்மையும் பத்மாவதியினை அசைத்துதான் பார்த்தது.
மெல்ல தலையசைத்தவர் "இப்போது பிரச்சனை உங்களின் கடந்தகாலமோ அல்லது நீங்கள் மாறிவிட்டிர்களா என்பதோ இல்லை, என் மகளுக்கு பிடிக்குமா இல்லையா என்பது தான், திருமணத்தினை பற்றி அவளுக்கு என்று ஒரு கனவு இருக்கு அதை எந்த காரணத்திற்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது, அவள் எங்களிடம் மல்டி மில்லியனேர் வேண்டும் என்றெல்லாம் கேட்கல அவள், ஒழுக்கமான ஒருத்தன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கை உள்ளவன் அவளை காதலிப்பவன் என்று ஒருவனை கேட்டாள் அதை மறுக்க எங்களால் முடியாது."
தன் கடந்த காலத்தை மனதார சபித்தவன் "நான் மாறிவிட்டேன், இனி எந்த சந்தர்ப்பத்திலும் அந்த பாதைக்கு போக மாட்டேன் என்னால் போகவும் முடியாது அதுக்கு காரணமும் அவள்தான்"
பத்மாவதி அவனை பரிதாபமாக பார்த்தார். அவனது சிவந்த முகமும் அதில் தடக்கி விழுந்த தடுமாற்றமும் கூறியது இவன் யாரிடமும் இது போல் கெஞ்சாத குறையாக கேட்டதில்லை.
"மகன் இப்ப பிரச்சனை நீங்க மாறிட்டீங்களா இல்லையா என்பது இல்லை உங்களால் கடந்த காலத்தினை மாற்ற முடியாது "
"சோ இது தான் உங்கள் முடிவு.... " கண்முடி நிதானித்தவனாய் கேட்டான். அவன் கண்முடி சோபாவில் இருந்த கம்பிரத்தினை பார்த்தவாறு பத்மாவதி அமைதியாக இருக்கவே ஒரு கணம் யோசித்தவன் "ஒருவேளை சன்விதாவுக்கு பிடித்த்திருந்தாள், அவள் என்னை காதலித்தாள்....." கண்களினை திறந்து அவரை ஊடுருவியவன் கேட்டான் "ஒருவேளை சன்விதா என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தால் நீங்கள் இதே காரணத்தினை கொண்டு மறுப்பீர்களா?"
முகத்தில் வருத்தமான ஒரு புன்னகை படர "நாங்க மறுப்பதுக்கு காரணமே அவள்தானே... நடக்கவே முடியாதது" உறுதியாக சொன்னார்.
"அப்படி நடந்தால்......."
"அப்படி நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" தாயறியாத சூல என அலட்சியமாக கூறினார். அப்படியும் ஒரு காலம் வரக்கூடும் என அறியாது, காலம் வந்தது ஆனால் இருவரும் நினைத்து போல் அல்லாமல் வேறு விதத்தில்.
தலையசைத்தவன் எழுந்து கதவினை நோக்கி நடந்தான். "மகன் நிச்சயமாக உன்னை காதலிக்கும் ஒருத்தியை சீக்கிரமே சந்திப்பாய்" பத்மாவதியின் குரல் பின்னிருந்து கேட்டது. அச்சுதன் திரும்பாமலே நடந்தவாறே சிறுநகையுடன் பதிலளித்தான் "நிச்சயமாக ஆனால் சந்தித்துவிட்டேன், அவள் பெயர் சன்விதா, எனக்கு அவள் மட்டும் தான் வேணும், பொறுத்திருந்து பாருங்கள் யார் ஜெயிப்பது என்று" மறுப்பாய் தலையாட்டிய பத்மாவதி பதிலாய் "அவள் ஒருவரை நேசிக்கிறாள் என்று நினைக்கின்றேன்" என்றார்.
கதவருகே நின்றவன் திரும்பாமலே கேட்டான் "எப்படி சொல்கின்றீர்கள்?"
"நான் அவளது அம்மா என்னை நம்புங்கள்" வருத்தத்துடன் சொன்னார்.
கதவை தாண்டி சென்றவன் திரும்பி சொன்னான் "என்னை நம்புங்கள் அத்தை அடுத்த முறை இந்த வீட்டிற்கு வரும் போது உங்கள் மருமகனாய் என்னை ஆலம் சுற்றி வரவேற்பிங்க" அவன் அந்த வார்த்தைகளை சொன்னபோது அவன் கண்களை பார்த்த பத்மாவதியின் கண்களில் இரையை வேட்டையாட குறி வைத்த புலியின் கண்கள் தான் நிழலாடியது.
வெளியில் சென்று ஷூ அணிந்தவனை பார்த்து கொண்டிருந்தவருக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது இப்படி ஒரு மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்காது. அவன் கண்களில் உண்மையையும் காதலையும் கண்டார் அந்த அனுபவமிக்க பெரியவர். அவன் சொன்னால் சொன்ன சொல் தவற மாட்டான் என்பதும் புரிந்தது ஆனால் அதற்காக மகளின் ஆசையை தூக்கி எறியவும் முடியாதே சத்தமின்றி வந்த பெருமூச்சினை வெளியேற்றியவர் கேட்டை கடந்து போகும் அவனது கம்பிர தோற்றத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.
வெளியே சென்ற அச்சுத கேசவனின் முகத்தில் ஒரு வெற்றி புன்னகையின் சாயல். அவன் அவருடன் பேசிய போதும் வெளியே வரும் போதும் அவரது உடல் மொழிகளை கவனித்து கொண்டுதானே இருந்தான். இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தினை கட்டியள முடியுமா. ஒன்று புரிந்தது சன்விதாவின் சம்மதம் இவர்களின் சம்மதம்.
இந்த திருமணம் முறைப்படி நடக்க வேண்டும் என அவனது அக்காவின் உத்தரவு மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்நேரம் சன்விதா அவனது வீட்டில் இருந்திருப்பாள் ஆனால் இந்திய பிரதமரின் வார்த்தையை விட அவனுக்கு அவன் அக்காவின் ஒரு சொல் வேதம். அவனுக்கே வலி தரும் விடயம் எவ்வாறு அக்காவின் வார்த்தையை அந்த ஒரு விடயத்தில் மட்டும் கேட்க மறுத்தான் என்பது தான் ஆனால் எல்லாம் அந்த பாழாய் போன பழக்கத்தால் வந்த வினை, அந்த பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு இந்த பெண்கள் பழக்கத்தினை தேர்தெடுத்ததன் விளைவு இது.
♥♥♥♥♥
மறுபடியும் இரவில் தூக்கமின்றி நின்ற தம்பியை பார்த்த சுபத்ராவுக்கு துக்கம் பொங்கி கொண்ட வந்தது கணவன் அர்ஜுன் தோளில் சாய்ந்து கொண்டவள் தன் வருத்தத்தினை அவனிடம் பகிர்ந்தாள் "கண்ணா காதலிக்கிறான் என்று சொன்னப்ப நான் ரொம்ப சந்தோசப்பட்டேன் ஆனா அவனை என்னால எப்படி பார்க்க முடியல இதுக்கு அவன் முன்ன மாதிரியே இருந்து இருக்கலாம் "
அவளை நெஞ்சொடு அனைத்துக்கொண்டவன் "ஸ்ஸ்... கவலைப்படாதம்மா எல்லாம் சரியாகும்"
அவனது நெஞ்சினுள் மறுப்பாய் தலை அசைத்தவள் "ஆனா நீங்க அவளுடைய கண்ணை பார்க்கல, அவ்வளவு வெறுப்பு இருந்திச்சு. அவன் இப்ப அதை ஏற்றுக்கொள்ளமால் இருக்கிறான். ஆனா அவனுக்கு புரியும் போது....." அழுகையை உதட்டை கடித்து அடக்கினாள்.
அர்ஜுன் தன்னோடு இன்னும் அவளை இறுக்கிக் கொண்டான் "அது இறுதியான முடிவு இல்ல சுபத்ரா, அச்சு கண்ணுல தெரியும் காதல் உண்மையானது அது நிச்சயமா அந்த பெண்ணுக்கும் ஒரு நாள் புரியும் ம்ம்... ஓகே ஆனா நான் யோசிக்கிறது சிலவேளை அதிரடி முடிவுகளால் அந்த பெண்ணுக்கு வலிக்க செய்து இவனும் வேதனைப்படுவான் ஆனா எல்லாம் சரிவரும் சரியா?" கனிவாக அவளை ஆறுதல்படுத்தி உச்சந்தலையில் முத்தமிட்டவன் போலியாக ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.
சுபத்ரா அவன் நெஞ்சிலிருந்து நிமிர்ந்து கேட்டாள் "என்ன.... " சற்று குனிந்து பார்த்தவன் "என்ன செய்ய அவனுக்கு அடுத்தவர்கள் அனுபவத்தை பார்த்து படி என்று சொன்ன கொஞ்சம் கூட புரியவேயில்லையே..... "
குழப்பத்துடன் கேட்டாள் "என்ன படிக்கல..... "
படு சோகமான முகத்துடன் சொன்னான் அர்ஜுன் "இல்ல என்னை பார்த்து என்னோட நிலைமையை பார்த்த பின்பும் அவன் லவ் பண்ணியிருக்கான் தானே என்று நினைத்தேன்."
அவனை தள்ளிவிட்ட சுபத்ரா “ஓ அப்படியா.... நான் நினைக்கிறன் இன்று நீங்க வெளியில தான் படுக்கணும்” போலி அதிர்ச்சியுடன் சொன்னான் “டார்லிங்... நான் உன் கணவனம்மா இப்படியெல்லாம் சொல்ல கூடாது, மீ பாவம்...”
கையை தூசு தட்டியவள் “இந்த நிலைமையில் இருப்பவரை பார்த்து சொல்லலாம்” என்றவாறு அவனிடமிருந்து விலகி நடந்தாள்.
அர்ஜுனுக்கும் அச்சுதனை நினைத்து கவலையாக தான் இருந்தது இந்த பிடிவாதம் வெற்றி பெறா விட்டால் என்னவாகும் என்பது இன்னும் புரியாமலே இருந்தது ஆனால் மனைவியின் மனதினை மாற்றும் பொருட்டு நடித்து கொண்டிருந்தான். அவளது மனநிலை மாறியது மகிழ்ச்சியளிக்க முகத்தை சோகமாக மாற்றி அருகே இருந்த பூச்சாடியில் இருந்த பூவை கையில் வைத்தவாறு அவள் முன் மண்டியிட்டான்.
“நோ நெவெர் நோ சான்ஸ்”
“ப்ளீஸ்....” அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டான் அர்ஜுன். அதை பார்த்தது சிரிப்பை அடக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பின்னே அவன் ஓட கைபட்டு பூச்சாடி கீழே விழுந்தது.
அந்த சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்ட அச்சுதன் நீண்ட பெருமூச்சினை வெளியேற்றினான். அவள் இன்னொருவரை காதலிக்க கூடும் என்ற நினைவிலேயே மனம் கசந்து வழிந்தது “பரவாயில்ல சன்விதா நீ என்னை காதலிப்பாய், காதலிக்க வைப்பேன், இந்த அச்சுத கேசவனிடமிருந்து அவ்வளவு எளிதாக தப்ப முடியாது” தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டவனுக்கு சிறிது பயமாகவும் இருந்தது.
அவனது டிடக்டிவ் ஏஜென்சி கடந்த ஒரு வருடத்தில் அவள் யாரையும் காதலித்ததாகவோ அல்லது சந்தித்ததாகவோ எந்த தகவலும் தரவில்லை அவர்கள் நம்பகமானவர்கள் ஆனால் அவளது அம்மாவும் கூறினார் அவளும் ஏதோ தொடங்கிவிட்டு நிறுத்திவிட்டாள்.
தலையை உலுக்கிவிட்டு திரும்பிய அச்சுதன் கண்களில் விழுந்தார்கள் அவனது அக்காவும் அத்தானும், அவர்களது நோக் ஜோக் அவனுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.
மனைவியை அப்படியே அலாக்காக ஒரே தூக்கில் தூக்கியவனின் கழுத்தை கட்டி கொண்டு “விடுங்கள் என்னை” என்றவளுக்கு பதிலாக “ம்ம் விடுறானே ரூமுக்கு போனதும்” என்றான்.
“ஐயோ அங்க பையன் தூங்கிறான்”
“பரவால்ல உன்னையும் தூங்கதான் விடுறன் என்று சொன்னான் நீ என்ன நினைத்தாய்”
“ஹான்....” என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த சுபத்ராவை பார்த்தது கொண்டிருந்த அச்சுதன் அடக்க முடியமால் சிரிக்க, அந்த சத்தத்தில் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்து “ஐயோ, மானம் போகுது இறக்கி விடுங்கோ, ப்ளீஸ் நான் எதுவும் நினைக்கல” என்று கெஞ்சிய மனைவியை பார்த்து சத்தமாக சிரித்தவன் மச்சானுக்கு கண் அடித்துவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தான்.
அந்த திருமணமான காதலர்களை பார்த்தவனுக்கு அவனையறியாமலே சன்விதாவுடன் தான் இவ்வாறு செல்ல சண்டை போட்டால் எப்படி இருக்கும் என காட்சி மனக்கண் முன் விரிய வந்த சிறு புன்னகையை உதடு கடித்து அடக்கியவன் மீண்டுமாக வானத்தை பார்த்தவனுக்கு இன்று அம்மாவசை ஆனால் நாளை நிலவு வரும் என்ற நம்பிக்கை வர அவள் காதலையும் வெல்லலாம் என்ற லேசான மனதுடன் உறங்கச் சென்றான்