உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 01

சூரியனின் வரவுக்கு கட்டியம் கூறுவது போல் சிவப்பு நிற அருணனின் கதிர்கள் வானமெங்கும் வியாபிக்க, அரஞ்சு பழம் போல் சிவந்த சூரியன் கடலிலிருந்து மெதுவாய் எழுந்து கொண்டிருந்தான். மெல்லிய சிவப்பு, செமஞ்சள், மஞ்சள் என அனைத்து வர்ண ஜாலங்களையும் முடித்து வெள்ளி நிறத்திற்கு மாறும் வரை அசையாது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

கடற்கரையருகே வானம் தொட உயர்ந்து நின்ற ஹோட்டல் ஒன்றின் மாடியின் பால்கனியில் கைகளைக் கட்டியவாறு பாத் ரோப்புடன் நின்ற அவன் கேசத்தில் அங்கங்கே ஒட்டிக் கொண்டு நின்ற நீர்த் துளிகள் சூரியனின் நிறங்களை தங்களும் உள்வாங்கி அவன் முகத்திற்கு சோபை அளித்துக் கொண்டிருந்தது. சூரியனில் இருந்து உள்ளங்கையை நோக்கித் திரும்பியது அவன் பார்வை.

மீண்டும் அதே தவிப்பு விரலடியில் ஏதோ நழுவி சென்றதைப் போல்.

உள்ளே கிங் சைஸ் கட்டிலில் படுத்திருந்த பெண் பொறுமையிழந்தவளாய் எழுந்து வெளியே வந்தாள். பின்னிருந்து அவன் இடையைச் சுற்றிக் கைகளை போட்டவள் முகத்தை அவன் பரந்த முதுகில் புதைத்தாள்.

“எகே...” தாபத்துடன் அழைத்தது அவள் குரலுடன் சேர்ந்து உடலும்.

ஒரு கணம் இறுகிப் போய் நின்றவன் அவள் கையை மெதுவே விலக்கிவிட்டான். அவனைக் குழப்பத்துடன் பார்த்த அந்தப் பெண் “என்னாச்சு ஏகே உனக்கு? லண்டன் போய் வந்ததில் இருந்து நீ நீயாவே இல்லை” அவன் முகத்தை கூர்ந்து பார்த்தவள் “என்ன அங்கே யாரையாவ...?” கேட்க எடுத்த கேள்வி பாதியில் நின்றிருந்தது.

வெறுமனவே திரும்பிப் பார்த்தவன் கண்களில் இருந்த எச்சரிக்கையில் சுதாரித்து “ச்சு... அதை விடு, இந்நேரம் வழமை போல் நீ என்னை..... நான் உறங்கியிருக்க வேண்டும்” அவன் முன்னால் வந்து அவன் பாத்ரோப்பை விலக்கி நெஞ்சில் கைகளால் ஊர்வலம் நடத்த முயன்றாள்.

அவனைத் தொட முன்னர் அவள் கையைப் பிடித்தவன் “ஆகாஷ்” எட்டி அருகே இருந்த மைக்கை தட்டி விட்டு சத்தமாய் அழைத்தான்.

அது ரிசேர்வ் செய்யப்பட்ட விஐபி அறைகளில் ஒன்று ஹோட்டல் ரூம் என்றால் சாதரண அறைகள் போலில்லை. ஆயிரத்தி ஐந்நூறு சதுர அடி, உள்ளே வந்தால் முன்னே வரவேற்பறை. இரண்டு படுக்கையறை கூடவே ஹவுஸ் கீப்பர் தங்குவதற்கான அறை, அதன் அருகே தேவையான அனைத்து வசதிகளும் கூடிய கிட்சின் என ஒரு குட்டி வீடு.

‘இந்நேரம் பாஸ் வெளியே வந்திருக்க வேண்டும் இன்னும் வரவில்லை உள்ளே போவோமா வேண்டாமா’ என வரவேற்பறையில் நின்று மனதினுள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்த ஆகாஷ் குரல் கேட்ட மறு கணம் ஏகே முன்னே நின்றான். கூடவே கையில் சுடசுடச் காபி பிளஸ் “குட் மோர்னிங் பாஸ்” உடன்.

“குட் மோர்னிங், மேடத்திற்கு கீழ் தளத்திலுள்ள அறை ஒன்றை ஏற்பாடு செய்” என்றவன் அவன் கையிலிருந்த காபியை வாங்கினான். இரு பெண்கள் தள்ளிக் கொண்டு வந்த ஹங்கரில் இருந்த ஆடைகளைப் ஒரு கையால் ஆராய்ந்தவாறே காபியை ஒரு வாய் குடித்தவன் கேட்டான் “இன்று என்ன ப்ரோக்ராம்?”.

அரை நிமிடத்திற்கும் மேல் பதில் வராமல் இருக்க நிமிர்ந்து பார்த்தான். முன்னே நின்ற  பெண்களில் ஒருத்தி முன்னே நின்றவனுக்கு தெரியாமல் கையை ஆட்டி ஆகாஷ் கவனத்தை கவர முயன்றாள். அவளைப் கேள்வியாய் பார்க்க, அவள் சிரிக்கின்றேன் என்ற பெயரில் உதட்டைப் இரு புறமும் இழுத்து வைக்கவே திரும்பிப் பார்த்தான். 

ஆகாஷ் இந்த உலகிலேயே இல்லை.

பிரமை பிடித்துப் போய் நின்றிருந்தான். அவளைப் பார்த்து உதடு பிரியாமல் மெலிதாய் புன்னகைத்தவன் அந்தப் பெண்ணிற்கு மௌனமாய் கண்ணசைத்தான். சங்கடமான புன்னகையுடன் சென்றவள் ஆகாஷ் தலையிலேயே ஒன்று போட்டாள். அதில் இந்த உலகிற்கு வந்தவன் “நிலா... நீ... பாஸ்” உளறினான்.

“நான் பாஸ்சில்லடா... என்ன செய்கிறாய், பாஸ் உன்னிடம் ஏதோ கேட்கிறார் பார்” அவனுக்கு மட்டும் கேட்கும் அடிக் குரலில் எச்சரித்தவள் “மேடம் ப்ளீஸ்” பெண்களின் ஆடைகள் தொங்கிய ஹங்கரை கை காட்டினாள்.

அவளை அலட்சியம் செய்து அவனருகே சென்றவள் “ஏகே...” என்று ஆரம்பித்தவளை மெல்லிய கையசைவில் நிறுத்தியவன் “இதோடு நிறுத்திக் கொள்வோம். இனி வரத் தேவையில்லை” சிறு மன்னிப்பு வேண்டும் குரலில் கூறினான்.

பின்னால் விழப் பார்த்த ஆகாஷைப் பிடித்து நிறுத்தினாள் நிலா.

“ஏகே... வரத் தேவையில்லை என்றால் என்னைப் பார்த்தால் காசுக்காக வரும் ***** போலவா இருக்கு” சீறினாள்.

அவனது அந்தஸ்திற்கு அந்த மன்னிப்பு வேண்டும் குரலே அதிகம். இதில் அவனிடம் விலைமாது என்பதை செந்தமிழில் கூறும் அவளை கண்ணை விரித்துப் பார்த்தாள் நிலா. இந்தப் பிரச்சனையை வேடிக்கை பார்க்கவும் மனமில்லை, அதே நேரம் பாஸை இப்படிப் பேசுவதைப் பொறுக்கவும் முடியவில்லை. ஏகே விழிகளை மட்டும் திருப்பி அவளைப் பார்க்க சட்டென தலை குனிந்தாள்.

“இப் யூ ஃபீல் அன்கம்போர்டஃபில் யூ கேன் கோ வெயிட் அவுட்சைட்” அவளைப் பார்த்து மென்மையாக கூறினான்.

ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து தலையசைத்தாள். இந்த இங்கிதம்தான் அவனிடம் வேலை செய்யும் அனைவரையும் கட்டி வைத்திருந்தது. அவள் அவனிடம் வேலை செய்பவள் அவள் உணர்வுகளைப் பற்றி அக்கறைப் பட தேவையில்லை. “ஐ வில் வெயிட் நியர் தி டோர் சேர்” மற்றப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவர்கள் செல்வதைப் பார்த்து விட்டு அருகேயிருந்த சோபாவில் காலுக்கு மேல் கால் போட்டு ஒரு கையை நீட்டி அமர்ந்தவன் “தென்” என்றவன் முகத்தில் கல்லின் கடினம்.

அவன் குரலில் நிமிர்ந்த ஆகாஷ் மீண்டும் குனிந்துவிட்டான். ‘அவர்களுடன் நானும் போயிருக்கலாமோ?’ அவன் மைன்ட் வாய்ஸ் கூச்சமின்றி கேட்டது.

அவன் முழங்காலைத் தாண்டி நின்ற வெறும் வெள்ளை நிற பாத் ரொப்பிலும் அவனின் கம்பீரமும் அழகும் எப்போதும் போல் அவளைக் கவர “ஏகே” ஓரடி எடுத்து வைக்க முயன்றவளை வெறும் பார்வையிலேயே நிறுத்தியிருந்தான்.

“சாரி ஏகே, இன்று வேண்டாம் என்றால் சரி எப்போதுமே வேண்டாம் என்றால் எப்படி நாங்கள் இருவரும்...”

“திருமணமா செய்தோம்!” ஏளனமாய்க் கேட்டான்.

முகம் கன்றி விட “வீ ஆர் இன் லீவ்வின் ரிலேசன்ஷிப்” என்றாள்.

ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் “நான் உங்கள் வீட்டில் இருக்கின்றேனா இல்லை நீங்கள் என் வீட்டிலா?” அவள் வார்த்தையில் சொன்னதை வாய் விட்டுச் சொல்லாமலே உணர வைத்திருந்தான்.

“சி மிஸ் நிஷா, இன் கேஸ் யு போர்கேட், நீங்க தான் வந்து கேட்டீங்க நான் மறுக்கவில்லை. அப்போதும் உங்களிடம் இது வெறும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட் என்று சொன்னதாய் ஞாபகம்” அவன் குரல் உயரவே தாழவே இல்லை, அவளிடம் ஏக வசனத்தில் பேசவில்லை இருந்தாலும் நாளத்தில் இரத்தம் உறைந்தது.

அவனையே பார்த்த அந்த நிஷா மெதுவாய்க் கேட்டாள் “யார்?”.

வியப்புடன் பார்த்தவன் கேட்டான் “யார் யார்?”

“யாரையோ லவ் பண்ற இல்ல”

“டோன்ட் பி ஃவுலிஷ்...” சற்று நிதானித்து மீண்டும் உள்ளங்கையைப் பார்த்து விட்டுக் கூறினான் “இந்த டைப் வாழ்கை போதும் என்று நினைக்கின்றேன்”

“கல்யாணம் செய்யப் போறீயா?”

ஆகாஷுக்கு பிபி ஏகத்துக்கும் எகிறியது. அவனுக்கு நிஷாவை கண்ணில் கூட காட்டவே கூடாது. நிதமும் விலைமாதுவிடம் செல்லும் ஆணையும் முகம் சுளிக்க வைக்கும் திறமை அவள் ஆடைகளுக்கு இருந்தது.

அவனுக்கும் பாஸின் நிலை ஆதியோடந்தாமாக தெரியும். இருந்தாலும் இது போல் தரம் குறைந்தவர்களிடம்... மனம் பொருமியது. நிஷா ஏகே அலுவலகத்தில் இருக்கும் ஒருவரைக் கூட மதிக்கமாட்டாள். ஆனால் அனைவரும் அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக பொறுத்துக் கொண்டார்கள். கடந்த ஆறு மாதமாய் அவளின் அட்டகாசத்தைப் பொறுத்துக் கொள்ளேவே முடியவில்லை.

அவன் பாஸிடம் நேராகவே கேட்டிருந்தான் “உங்களுக்கு வேண்டுமானால் வேறு பெண் பார்க்கவா?”

அதற்கு ஏகே “கல்யாணத்துக்கா எனக்கு இண்டரஸ்ட் இல்லை” என்றதற்கு “மண்ணாங்கட்டி, இந்தக் கருமத்திற்கு தான்” என்றிருந்தான். அவனோ சிரிப்பை அடக்கியபடி “நீ எனக்கு பிஏ வேலை பார்பதற்கு தானே சம்பளம் வாங்குகின்றாய்?” என்று கேலி செய்ததுடன் விட்டுவிட்டான் 

“ஏகே நானும் ஒன்றும் சாதரணப் பெண் இல்லை, கல்யாணம் செய்வதற்கு எனக்கும் பரிபூரண சம்மதம்” என்றாள்.

“சோ யு கேன் மிஸ் ட்ரீட் மை பாமிலி அல்சோ” கடுமையாகக் கேட்க ஆகாஷ் முகம் சோர்ந்தது. கடைக் கண்ணால் ஆகாஷை கவனித்தவனுக்கு முகத்தின் சோர்வுக்கு காரணம் புரிய பொங்கிய சிரிப்பை உதடு தாண்டமால் தடுத்தவன் “நீங்கள் போகலாம், இந்தப் பிழை நடந்ததுக்கு நானும் காரணம் அதனால் உங்களை எதுவும் செய்யவில்லை ஆனால்” என்று நிறுத்தியவன் கண்களில் பாறையின் கடினம் “எதிர் காலத்தில் என் ஸ்டாப்ஃபிடம் மரியாதைக் குறைவாக நடந்தால்...” முழுதாக முடிக்கவிட்டலும் நிஷாவிற்கு அதன் தற்பாரியம் விளங்கவே செய்ததது.

லேசாக தலையை திருப்பி அழைத்தான் “நிலா” அவன் முன்னே வந்தவள் முகமும் சோர்ந்திருந்தது. “மேடம் ப்ளீஸ்” மரியாதையாகவே அழைத்தாள். “ஹவுஸ் கீப்பரை அழைத்து செல்ல சொல், அதோடு அந்த ஹவுஸ் கீப்பரையும் வேலையை விட்டு நீக்கிவிடு, என் ஆடைகளை எடுத்து தா” உத்தரவிட்டவாறே எழுந்தவன் சற்றும் எதிர்பாரத வண்ணம் ஆகாஷ் கன்னத்தில் அறைந்திருந்தான்.

ஆடைகளை எடுத்து வந்த நிலா அதை கீழே விட்டு விழும் முன் பிடித்தாள். அவன் ஜீன்ஸ் சேர்ட் மட்டும் இருந்த ஹங்கரை மட்டும் கொடுக்க ஆகாஷோ எதுவும் பேசாமல் குனிந்து நின்றிருந்தான். மீதி ஆடைகளை வழமை போல் கட்டிலில் வைக்கப் போக முகத்தைச் சுளித்த ஏகே “அங்கே வேண்டாம்” என்றான்.

அவளிடமிருந்து ஆடைகளை வேண்டிக் கொண்டு அவன் உள்ளே செல்ல “ஹனி...” வெளியே பார்த்து அழைக்க “என்னையா?” என்று அருகே வந்தான் ஆகாஷ்.

“உனக்கு விழுந்தது காணாது இரு பாஸிடம் சொல்லி இன்னும் இரண்டு போடச் சொல்கின்றேன்” என்று சொல்லவும் உள்ளிருந்து கேட்ட சிரிப்புச் சத்தத்தில் இருவரும் அமைதியானார்கள். உள்ளே வந்த பெண் நிலாவின் கண்ணசைவில் கட்டிலின் விரிப்பை மாற்றிச் சென்றாள்.

ஆகாஷிடம் நிலா ஐஸ் பாக்கைக் கொடுக்க அதை கன்னத்தில் வைத்து அழுத்தினான் ஆகாஷ். சேர்ட் கை பட்டனைப் பூட்டியவாறே வந்தவன் கண்ணில்பட்டது அந்த காட்சி. அருகே வந்து அவன் கன்னத்தைத் திருப்பிப் பார்த்தவன் “பச்... பலமாய் தான் அடித்துவிட்டேன் இல்லையா என்ன செய்ய நிலா பெண் பிள்ளை இல்லையா? அடிக்க முடியாது அதான்” என்று விட்டு தலையை வாரினான்.

நிலாவோ அப்பாவியாய் ‘எதுக்கு இந்தக் கொலை வெறி இந்தத் தடிமாடிடம் என்னைக் கோர்த்து விடுவதில் என்னதான் சந்தோஷமோ’ அவள் நினைத்து முடிக்கும் முன்னேயே “உனக்கும் சேர்த்து தான் அடி வாங்கியிருக்கேன், ஐஸ் பாக்கை நீயே வைத்து விடு” கன்னத்தை நீட்டினான் ஆகாஷ். “போடா” என்று அவனைத் தள்ளிவிட்டவள் ஏகேயிடம் சென்றாள்.

“சார்...” தலையை வாரியவாறே கண்ணாடியில் பார்த்தவன் “ஹ்ம்ம்” என்றான் அவன்.

வேஸ்ட் கோட், அதற்கு மேலாய் கோட்டை என்று போட உதவியவாறே “அது வந்து நீங்கள் இந்த...” கேட்க முடியாமல் திணறினாள்.

கோட் பட்டனைப் போட்டு விட்டுத் திரும்பியவன் கைகளைக் கட்டியவாறே இருவரையும் பார்க்க இருவருமே தலை குனிந்தார்கள்.

“ஆகாஷ் ஏன் அடித்தேன்?”

“அதை விடுங்கள் பாஸ். நீங்க...” என்பதற்குள் அவன் குரல் அழுத்தமாய் குறுக்கிட்டது “ஏன்?”.

“அது நிஷா மேடம் என்னை அடித்தது...”

“நீங்கள் இருவரும் என்னுடைய நேரடியான பிஏ, ஒருவர் உங்களை அவமானப்படுத்துவதும் சரி என்னை அவமானப்படுத்துவதும் சரி” கண்டிப்பான குரலில் கூறினான். “நீ என்னுடைய தம்பி, என்னை அண்ணா என்று அழைக்காவிட்டாலும் தம்பிதான். உன் மீது ஒருத்தி கை வைத்திருக்கின்றாள். என்னிடம் ஒரு வார்தை சொல்லவில்லை” அவன் குரலில் நிச்சயமாய் கோபம் இருந்தது.

“நான் உங்களை நினைக்கும் அளவிற்கு நீங்கள் என்னை நினைக்கவில்லை இல்லையா?” அவன் காட்டிக் கொள்ளவிட்டாலும் அவன் கண்களில் மெல்லிய வருத்தம் தென்பட்டது.

“அப்படியில்லை பாஸ், உங்களுக்கு அவர்களைப் பிடித்து…. அதை விடுங்கள், இந்த டைப்…. இதை இன்றுடன் தலைமுழுகி விட்டீர்களா?” ஆர்வமாய் கேட்டான்.

இன்றைய காலத்திற்கு ஏற்ப நகரிகமாய் வாரியிருந்த தலையை கண்ணாடியில் பார்த்தவன் சட்டையின் கை டை என சரி செய்தவாறே பதிலளித்தான் “இன்று காலை கூட முழுகினேனே”

ஆறடி உயரத்தில் அதற்கேற்ற உடலவாகுடன் ஆணகழகனாய் நின்றவனை கண்ணாடியில் கண் வெட்டமால் பார்த்த நிலாவை நிலவைப் பார்த்து புருவத்தை உயர்த்த, அவள் வேகமாய் தலையை அசைத்து ஆகாஷை முன்னே தள்ளிவிட்டாள்.

அவனுக்கு அவர்கள் இருவரும் எதை அறியத் துடிக்கிறார்கள் என்பது விளங்கினாலும் அவனும் அதை இலகுவில் சொல்வதாய் இல்லை.

நிலா தள்ளியதில் அவன் முன்னால் வந்து நின்ற ஆகாஷ் “ச்சு அதில்லை அண்ணா” லேசாய் சினுங்கினான்.

சற்று அவன் புறம் குனிந்தவன் “போடா” என்று விட்டு வெளியே சென்றவாறே அழைத்தான் “மிஸ். நிலா”

“யெஸ் பாஸ்” காலைத் தரையில் உதைத்து ஆகாஷ் தலையில் ஒன்று போட்டு விட்டு அவன் பின்னால் சென்றாள்.

“இன்றைய மீட்டிங் ஷெடுள் சார், ஒன் ஹவர் ஹெட் ஆபீஸில் இருக்க வேண்டும். கைத்தொழில் அமைச்சருடன் ஒரு மீட்டிங் இருக்கு, கார்மென்ஸ் வேலைக்கு அவர் ஏரியாவில் இருந்து ஆள் எடுக்க முடியுமா என்று கேட்பது தான் பிரதான நோக்கம். ஜோசப்பிடம் சொல்லி செக் செய்து விட்டேன். முதல்வரும் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கான காரணத்தை அறிய அருண் சார் அதைப்பற்றி விசாரிப்பதற்காக சொன்னார்” வேலை மூவரையும் விழுங்க ஆரம்பித்தது.

“அவர் அனுப்பும் ஆட்கள் அனைவருமே வேலை சரியில்லை, போன தடவை எடுத்தவர்களுடன் தலையுடைக்க வேண்டியதாய் போயிற்று. கடை நிலை ஊழியர்கள் என்றால் கூட பரவாயில்லை புராஜக்ட் மேனேஜர்ஸ் வேலையை கேட்கிறார். அவர் பரிந்துரை செய்த அனைவருமே அவரின் கையாட்கள், இதற்கு முன்னும் மோசடியில் ஈடுபட்டவர்கள்” மேலதிக தகவல்களை ஆகாஷ் வழங்க கவனமாய் கேட்டுக் கொண்டான்.

மூவருமாய் லிஃப்டில் ஏற ஆகாஷ் தொமே என்று கூலிங் கிளசை ஏகேயிடம் கொடுக்க திரும்பிப் பார்த்தான். என்ன செய்தானே ஆகாஷ் கன்னத்தில் அடி வாங்கிய தடமே இல்லை “வலிக்குதா” கேட்டான்.

“அதை விடுங்கள் பாஸ்…” மேற் கொண்டு கேட்பதற்குள் லிஃப்ட் கதவு திறந்து கொண்டது.

திடீரென வேறு உலகினுள் சென்றது போல் மின்னலாய் மின்னியது. அவனை நோக்கி ஓடி வர முயன்ற மீடியாவை சுற்றிலும் நின்ற கார்ட்ஸ் தடுத்து நிறுத்த பாதுகாப்பு வளையத்தில் நடந்தவன் திடீரென்று “ஆகாஷ் பிரெஸ் மீட்டிங் ஏற்பாடு செய்” என்றான்.

நொடியில் அந்த ஏழு நட்சத்திர ஹோட்டல் வரவேற்பின் ஒரு பகுதியில் மேசை,  மேசை மீது ஒரு விரிப்பு, ஒரு பூங்கொத்து, விதவிதமாய் மைக், அதன் பின் ஒரு இருக்கை, என்று பிரெஸ் மீட் தயாராகிவிட்டது.

பிரெஸ் மீட் என மீடியா ஒரு இடத்தில் கூட கொஞ்சமே கொஞ்சம் தனிமை கிடைத்தது.

அவன் தனிப்பட்ட ஃபோன் ரிங் ஆகவே அதில் வந்த இலக்கத்தை பார்த்து புன்னகைத்தான். “ஆகாஷ் பிரெஸ் மீட் முடிய முன்னர் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள கூடாது. யாராய் இருந்தாலும் பார்த்துக்கொள்” அழுத்தமாய் கூறியவன் போனுக்கு பதிலளித்தவாறே ஒரு பக்கமாய் ஒதுங்கினான்.

இனிமையான பெண் குரல் “அது யாரோ பிசினஸ் டைனோசராம் அதாம்மா டைகூன்” என்று இனிமையாய் நகைத்தது.

“மழை வரும் போலிருக்கு இந்த திருவிழா எப்ப முடிஞ்சு நான் எப்ப வாரது. டெல்லி போகனும் லேட் ஆகுது. மழைக்குள் வந்தால் நான் சக்கரகட்டி கரைந்து விடுவேன் எல்லாம் அந்த டைனோசரால் வந்த விணை”

மறுபுறம் லைனில் இருந்த அவன் அக்கா சுபத்ரா “சொல்லுங்க பிசினஸ் டைனோசர்’” என்றாள். “அக்கா ப்ளீஸ்” சிரிப்பை அடக்கியவன் குரலை கண்டு கொண்ட சுபத்ரா “அந்தப் பெண் யார் என்று தெரியுமா விசாரி” ஆர்வமாய் கேட்டாள்.

இருவருக்கும் நடுவே தடுப்பு இருக்க அவளைப் பார்க்க முடியவில்லை, அவள் வெண்ணிற அனார்கலி மட்டும் லேசாய் தெரிந்தது. 

காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தில் ஒற்றை விரலால் தட்டி விட்டு “ஜோசப் லோஞ்ச் அருகே ஒரு பெண் நிற்கிறாள். டாக்ஸி அரேஞ்ச் செய்து கொடு. அப்படியே பப்ளிக் டிஸ்ரப் ஆகாதா மாதிரி பார்த்துக் கொள்” உத்தரவிட்டான்.

♥♥♥♥♥

“இவன் இப்போதைக்கு சரி வர மாட்டான்” ருக்மணி பெருமூச்சு விட்டார்.

“பிறகு இது சிறுகதையாகி விடும் பரவாயில்லையா” புன்னகையுடன் கேட்டான் கண்ணன்.

♥♥♥♥♥

அன்று முழுவதும் வேலைகிடையில் ‘பிசினஸ் டைனோசர்’ என்ற அவளின் குரல் காதில் ஒலிக்க முகத்தில் ஒரு புன்னகையுடன் வேலையை செய்தான் அச்சுதன். அடிக்கடி அவன் மீது பாய்ந்த ஆகாஷின் குறுகுறு பார்வையை ஒரு முறைப்பில் தள்ளி வைத்தான்.

Reply
13 Replies
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 02

வேகமாய் வீட்டினுள் வந்தவள் கைபையை தூக்கி கட்டிலில் வீசி விட்டு அறையை குறுக்கும் நெடுக்குமாய் அளந்தாள். நகத்தை கடித்துப் துப்பியவள் மேஜை மீதிருந்து தன்னைப் பார்த்து சிரித்த கண்ணனை இடுப்பில் கை வைத்தபடி முறைத்தாள்.

“உன்னிடம் நான் என்ன சொன்னேன்? நீ என்ன செய்து வைத்திருக்கின்றாய், நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உனக்கு காது கேட்குமா இல்லையா?” கண்ணனை வம்புக்கு இழுக்க அருகே இருந்த ருக்கு (அதாங்க ருக்மணி) பொங்கிவிட்டார்.

“வர வர இவளின் குழந்தைதனதிற்கு அளவில்லாமல் போய்விட்டது. இவளுக்கு அவன் தான் சரி” ஒரு விரலை காட்டி கண்டித்தார்.

“எனக்கு அவன் புருசனா வேணும்” அவள் ஒரு கணம் நிதானிக்க, ருக்கு “தாதாஸ்து” என்றார்.

“இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன், எனக்கு அவன் புருசனா வேணும் என்றா கேட்டேன், அவன் வடக்கில் இருந்தால் நான் தெற்கில் இருக்க வேண்டும் என்று தானே கேட்டேன்.” காதை தட்டி காட்டி “கேட்குதா வடக்கு தெற்கு” இரண்டு கைகளையும் எதிர் திசையில் விரித்து “இரண்டும் எதிரெதிர் திசை” என்றவள் சட்டென சோர்ந்து போய் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து “அவனைப் பார்த்தேன்” என்றாள்.

கண்ணனோ புன்னகையுடன் அனைத்தையும் பார்த்திருந்தான்.

அவளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னும் சில மாதத்திற்கு முன்னும் அவனை சந்தித்தது நினைவில் வந்தது.

♥♥♥♥♥

சில மாதங்களுக்கு முன் அந்த செவென் ஸ்டார் ஹோட்டலில் இண்டர்வியு....

மழை வேறு தூறிக் கொண்டிருக்க எப்படியோ வந்து சேர்ந்துவிட்டாள். அன்று பார்த்து கிட்டத்தட்ட பத்து கம்பனிகள் அதே ஹோட்டலில் நேர்முக தேர்வை நடத்தின.

“கண்ணா இதுக்குள்ள எங்க போய் தேடுவேன், இவங்க இண்டர்வியு நடத்துறாங்களா இல்ல கலியாண வீடு நடத்துறங்களா? ஒரு பொறுப்பு வேண்டாம். இண்டர்வியு நடத்திற என்றால் கம்பனியில் நடத்தனும். உள்ள போறத்துக்கே ஒரு கிலோ மீட்டர் நடக்கனும் போலேயே” கண்ணிடம் புலம்பித் தள்ளினாள்.

♥♥♥♥♥

ருக்கு ஆர்வமாய் யாரையோ தேட கண்ணன் குறுஞ் சிரிப்புடன் கேட்டான் “யாரை தேடுகிறாய் தேவி?”

“அவனைத் தான் வேறு யாரை”

“அது இப்போதில்லை நேரமிருக்கு”

♥♥♥♥♥

அதற்குள் ஒருவாறு அவளுக்கு இண்டர்வியு நடக்கும் இடத்தைக் கண்டு பிடித்தவள் போன் சத்தமிட அதனுடன் ஓரமாய் ஒதுங்கினாள்.

“ஹலோ அம்மா”

“என்னாச்சு எதுக்கடி போய் பத்து நிமிசத்தில் பத்து தரம் போன் நீயென்ன செவ்வாய் கிரகஹத்துக்கா போய் இருக்கிற? இதே சென்னையின் இன்னொரு பக்கம்” பொரிந்து தள்ளினார் அவள் அம்மா.

‘என்ன கண்ணா அம்மா இமேஜ இப்படி டேமேஜ் பண்றா’ மனதினுள் கண்ணனை வறுத்தவள் “அம்மா...” பாவமாய் அழைத்தாள் “உங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? ஒரு அப்பாவி பயங்கொள்ளி பிள்ளை தனியா வந்திருக்காளே என்னாச்சோ ஏதச்சோ... ஒரு அக்கறை இருக்கா?” மூக்கைச் சுருக்கினாள்.

“கரண் சொன்ன மாதிரி உன்னை நல்ல பழுதாக்கி வைச்சிருக்கோம். இண்டர்வியு முடிஞ்சு வரும் வரை போன் எடுக்க கூடாது” அதட்டினார் அவள் அம்மா.

“எங்கம்மா இடத்தைக் கண்டு பிடிக்கவே முடியல ஒரே கூட்டமா இருக்கு. அது யாரோ பிசினஸ் டைனோசராம் அதாம்மா டைகூன்” இனிமையாய் நகைத்தாள்.

“டைனோசர் இல்ல டைனோசருக்கு தாத்தா வந்தாலும் பரவாயில்ல, போய் தேடிப் பிடி புலி சிங்கமா நிக்குது. மனிதர்கள் தானே நிற்கின்றார்கள். உனக்கு கராத்தேயும் தெரியும்”

“மழை வரும் போலிருக்கு இந்த திருவிழா எப்ப முடிஞ்சு நான் எப்ப வாரது. டெல்லி போகனும் லேட் ஆகுது. மழைக்குள் வந்தால் நான் சக்கரகட்டி கரைந்து விடுவேன் எல்லாம் அந்த டைனோசரால் வந்த விணை” சிணுங்கினாள்.

“அப்படி கரைஞ்சு வந்த திரும்ப காய்ச்சி கட்டியாகிறான். நீ இண்டர்வியுவை முடி” போனை கட் செய்தார்.

போனால் தன் நெற்றியை தட்டியவள் “நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே கண்ணா” ஒரு கணம் தயங்கியவள் “சரி நாம பார்க்கதா? இந்த சரவணனுக்கு யானை கட்டி மேய்க்கும் விதியிருந்தால் அதை மற்ற யாரால் முடியும்”

மறுபுறம் ஆண்மை நிறைந்த சிரிப்பத் சத்தம் கேட்க “அச்சச்சோ கண்ணா மானம் இப்படி காற்றில் கரையுதே” என்றவாறே அங்கிருந்து நகரப் போனவளை தேக்கியது அவன் கம்பீரக் குரல். “அக்கா ப்ளீஸ், ஜோசப் லோஞ்ச் அருகே ஒரு பெண் நிற்கிறாள். டாக்ஸி அரேஞ்ச் செய்து கொடு. அப்படியே பப்ளிக் டிஸ்ரப் ஆகாதா மாதிரி பார்த்துக் கொள். இன்டர்வியூ எங்கே நடக்குது என்று ஒரு வழிகாட்டி வைக்க சொல்லு”  

உறைந்து போய் நின்றவள் இதழ்கள் மெதுவே முணுமுணுத்தது “கேசவ்...”

அதற்குள் அங்கே வந்த ஜோசப் அவள் கையிலிருந்த கோப்பு அந்த ஹோட்டலுக்கு புதிதான அவளின் தன்மை என அனைத்தையும் நொடியில் கவனித்தவன் “இண்டர்வியு அந்தப் பக்கம் மாம்” என்றான்.

அவன் குரலில் கலைந்தவள் “தாங்யூ” சிறு முறுவலுடன் அவன் கைகாட்டிய திசையில் விரைந்தாள்.

மறுபுறம் வந்த ஏகே பார்த்தது ஜோசப் கை காட்டிய திசையில் பேயைப் பார்த்தது போல் ஓடும் அவள் பின்புறத்தை தான். அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்த ஜோசப் “அவர்கள் சரவணன் சார் இண்டர்வியுக்கு வந்திருக்கிறங்க சார்” என்றவன் ‘வேறு தகவல் அவளைப் பற்றி வேண்டுமா!’ என்பது போல் பார்த்தான்.

ஏதோ யோசனையில் இருந்தவன் சட்டெனக் கலைந்து ‘வேண்டாம்’ என்பது போல் தலையாட்டினான்.

எப்படி இண்டர்வியு முடித்து வெளியே வந்தாள் என்றே தெரியாமல் வந்தவள் போனை எடுத்து யாருக்கோ அழைத்தாள் “கரண் நீ வர முடியுமா?”

மறுபுறம் மறுக்க நினைத்தவன் அவள் குரலில் “சரி வெயிட் பண்ணு ஐந்தே நிமிடத்தில் வந்திருவேன்” கட் செய்தவன் யோசனை ஓடியது ‘காலையில் விடும் போது நன்றாக தானே இருந்தாள்’ அப்படி ஒன்றும் அவளை தன்னந் தனியாய் விட்டுவிடவில்லை. தனியாக செல்ல விட்டு பின்னால் அவளைக் கண்காணித்துக் கொண்டுதான் வந்தான்.

ஹோட்டல் லாஞ்சில் நின்றவள் ஏதோ கூட்டமாய் இருக்க அங்கு இருப்பது யாரென்று பார்க்க முயன்றால் தெரியவில்லை. “பச், ஏன்தான் எல்லாவனும் இப்படி வளந்து தொலைக்கிறன்களோ” எரிச்சலுடன் முனகியவள் வெளியே வந்து ஹோட்டலின் முன்புறம் ‘சி’ வடிவில் வளைந்திருந்த பாதையின் மறுபுறம் காத்திருந்தாள்.

“ஹேய் சான்விச், என்னாச்சு” அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டான் கரண். எங்கிருந்தோ அவர்கள் முன் வந்து நின்றது கருப்பு நிற பிஎம்டபிள்யூ. இன்னொரு வாசல் மூலமாய் ஏகே, ஆகாஷ், நிலாவுடன் ஜோசப்பும் அந்தக் காரினை நோக்கி வேகமாய் வந்தார்கள்.

முன்னே வந்தவனைப் பார்த்து “அது அச்சுத கேசவன் தானே” சிறு யோசனையுடன் கேட்க ஆமோதிப்பாய் தலையாட்டியவள் முகத்தைத் திருப்பிவிட்டாள்.

ஜோசப் கார் கதவைத் திறக்க உள்ளே ஏறப் போன ஏகே ஒரு கணம் நிதானித்து முன்னே நின்ற இருவரையும் பார்த்து புருவத்தைச் சுளித்தான். அவனைப் பார்த்ததுமே அந்தப் பெண் முகத்தை திருப்பி விட அவள் முகம் தெரியவில்லை.

அவளை ஆறுதலாய் அணைத்து தோளை தட்டிக் கொடுத்தவனை பார்க்க ஏனென்றே தெரியாமல் இங்கே இவனுக்கு ரத்தம் கொதித்தது. அவர்களை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப் போனவனை தடுத்தது ஆகாஷின் குரல் “பாஸ் மீடியா..”.

அவன் உள்ளே ஏற கார் எதிர் பக்கமாய் சென்றது.

குனிந்திருந்த தலையை பார்த்தவனுக்கு காரணம் புரிய பெருமூச்சு விட்டுக் குறுக்கே தலையாட்டி “ஹ்ம் சான்விச் மோல் போவோமா, பீச் போவோமா?” அவள் மனதை மாற்ற முயன்றான்.

“பீச் போய் குல்பி குடிப்போம்” முனங்கினாள்.

“சரி வா, உனக்காக ஒருவர் வெயிட்டிங்...”

வீதியின் மறுபுறம் நின்ற காருக்கு செல்ல அதிலிருந்து வெளியே வந்த பெண்ணைக் கட்டிக் கொண்டாள் சன்விதா “அக்கா...”. அவளை அணைத்த மானசி நிமிர்ந்து கரணை என்ன என்பது போல் பார்க்க அவன் குறுக்கே தலையாட்டினான்.

அதற்குள் சுற்றிக் கொண்டு வீதியின் மறுபுறம் வந்த அச்சுதனின் பிஎம்டபிள்யூ சீறிக் கொண்டு செல்ல அதன் பின்னே வந்த ஆடி அவர்கள் அருகே சற்றுத் தயங்கி பின் வேகமெடுத்தது.

அன்று முழுவதும் ஊரைச் சுற்றி விட்டு வீட்டிற்கு செல்ல அவள் மனம் சமநிலைக்கு வந்திருந்தது. அடுத்த கிழமையே வேலையில் சேர்ந்துவிட்டாள். வேலை அவளுக்கு பிடித்தும் விட்டது. சரவணின் தொழில் வெவ்வேறு கம்பனிகளுக்கு ரிசேர்ட் வடிவமைத்து அதனைக் கட்டிக் கொடுப்பது. இந்தியா முழுவதுமிருந்து கஸ்டமர் இருந்தார்கள்.

அவர்கள் இடத்தின் கலாச்சாரம் பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு ரிசேர்ட் அமைப்பதற்கு தகவல்களை சேகரிப்பதும் இன்டெர்னல் டேக்ரேசன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வடிவமைக்கும் பொறுப்பு அவளிடம்.

வேலைக்கு வந்து மாதங்கள் கடந்திருக்க அன்று அவளும் சேர்ந்து வடிவமைத்த ரிசேர்ட் கம்பனி ஒன்றின் பார்ட்டி. அந்தமானிலும் மாலைதீவிலும் அமைத்த ரிசொர்ட் வெற்றிகரமாக அமைந்திருக்க அதற்கான பார்டி தான் இன்று.

உள்ளே சென்று சரவணனை கண்களால் தேடி அவன் தோளை தட்டினாள் “சரவண்” திரும்பிப் பார்த்தவன் கண்களில் ‘வந்துவிட்டாயா?’ என்ற ஆறுதலும் ‘ஏன் வந்தாய்?’ என்ற அங்கலாய்ப்பும் சேர்ந்தே தென்பட யோசனையாய் நோக்கினாள்.

“என்ன?”

“ஒன்றுமில்லை” என்றவன் கண்களில் தர்மசங்கடம் நன்றாகவே தெரிந்தது. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி முறைக்க, அவள் தோளை சுற்றிக் கை போட்டவன் “சரி விடு இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கே தெரியும்” என்றான்.

அங்கு வந்திருந்த மீதிப் பேருடன் போய் சேர்ந்து கொண்டவளுக்கு பிடரியில் ஊசி குத்துவது போல் தோன்ற சரியாக அந்த திசையை திரும்பிப் பார்த்தாள். இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் உணர்வு. முப்பது வினாடிகளுக்கு மேல் யாரவது நம்மைப் பார்த்தால் அந்தத் திசையை நம்மை அறியாமலே திரும்பிப் பார்ப்போம். ஆனால் இதை உணர்ந்து பார்ப்பவர்கள் குறைவு. பெண்களுக்கு இயல்பாகவே இந்த உணர்வு இருக்கும்.

திரும்பிப் பார்க்க நெடுநெடுவென உயரத்துடன், வெள்ளை நிற சேர்ட் மேலாக பிளாக் வைஸ்ட் கோட் கோட் அணிந்து, ஒரு கை போகேடினுள்ளும் மறு கையில் இருந்த வைன் கிளாசை வாயில் வைத்தபடி நின்றிருந்தான் ஒருவன். அவள் திரும்பிப் பார்க்க கிளாசுக்கு மேலாக தெரிந்த விழிகள் ஈட்டி போல் பளிச்சிட்டது.

நடுவே வந்தான் ஆகாஷ் “பாஸ்... இதுதான் காரணமா?” முப்பத்திரெண்டு பல்லையும் காட்டினான்.

பார்வையை அசைக்கமால் “நிலா...” அழைக்க “உன்னை...” அவன் தலையிலேயே குட்டிய  நிலா அவனை இழுத்துக் கொண்டு விலகிச் சென்றாள்.

ஒரு கணத்தில் அவன் யாரென்பது புரிந்துவிட்டது ‘கண்ணா இந்த அச்சுத கேசவன் இங்கே என்ன செய்கின்றான்’. இத்தனை நாள் காரில் மட்டும் பின் தொடர்ந்தான். இப்போ இங்கேயும் வந்திட்டானா? நகம் தன் பாட்டில் அவள் பற்களிடையே போய் அமர்ந்து கொண்டது. கண்ணனும் ருக்குவும் தொடங்கி வைத்த நாடகத்தை பார்க்க தயாரானார்கள்.

இந்த ப்ரொஜெக்டில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி சொல்லி பார்டியை அவனே தொடங்கி வைத்தான். கட்டிக் கொடுத்ததும் அவன் கம்பனி வாங்கிக் கொண்டதும் அவன் கம்பனி. அவன் நன்றியிலிருந்து இப்போது தான் தெரிந்து கொண்டாள். ‘இதுக்க ஏன்டா நன்றி சொல்லுறீங்க’ மனம் கவுண்டர் கொடுக்க கண்கள் சரவணனை தேடியது ‘அவனிடம் சொல்லி விட்டு எஸ்கேப் ஆவோம்’, ஏனெனில் நன்றி சொல்லும் போதும் அச்சுத்தன் கண்கள் தன்னையே பார்த்தது போல் ஒரு பிரம்மை அவள் மனதில்.

“சன்விதா” சரவணின் குரல் கேட்க “சரவணா நான் போ...” மீதி வார்தையை காற்று முழுங்கிக் கொண்டது. சரவணன் அருகே மனதை கொள்ளை கொள்ளும் மெல்லிய புன்னகையுடன் நின்றான் அச்சுத கேசவன்.

“இது சன்விதா சர்மா, இண்டேரியர் இவர்கள்தான் டிசைன் செய்தது” என்ற சன்விதாவை நோக்கி “இவர் அச்சுத கேசவன், ஏகே” மேற்கொண்டு அறிமுகப்படுத்துவதற்குள் குலுக்குவதற்கு கையை நீட்டினான் அச்சுதன்.

“ஹாய்...” அன்று போலவே ஆண்மை நிறைந்த ஆழ்ந்த குரல்.

அவளுக்கு அன்று நெற்றியை பிடித்துக் கொண்டு கை நீட்டியது மனக் கண்ணில் வர பிரமை பிடித்தது போல் அசையாமல் நின்றாள்.

அவள் அசையாது நின்றதைப் பார்த்தவன் சத்தமாய் அழைத்தான் “ஆகாஷ்...”. அவன் அழைப்புக்கு பதில் சொல்ல அவன் இந்த உலகத்தில் இருந்தால் தானே. பார்டிக்கு வந்ததிலிருந்து அச்சுதன் செய்த செயல்களில் சன்விதாவை விட பிரமை பிடித்து நின்றான் அவன்.

ஆகாஷை உலுக்கிப் பார்த்த நிலா அவன் அசைய போவதில்லை என்றதும் அவனையும் இழுத்தவாறே அருகே வந்து “சார்” என்றாள். அவளைப் பார்த்து தயங்கி ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்தவன் மீண்டும் ஆகாஷை பார்க்க, கொஞ்சமாய் தெளிந்து அருகே வந்தான். இத்தனை கலவரத்திலும் சன்விதாவிடம் நீட்டிய கை நீட்டியபடியே இருந்தது.

அவனிடம் வைன் கிளாசை கொடுத்தவன் எதிர்பாராத விதமாய் கை குவித்து வணங்க பதிலுக்கு தன்னையறியாமலே கரம் குவித்தாள் சன்விதா.

“உங்களிடம் சற்றுப் பேச வேண்டுமே!” அவனின் இதழ் பிரியா மயக்கும் புன்னகையுடன் அனுமதி கேட்க யோசனையுடன் சரவணனைப் பார்த்தாள்.

பதிலுக்கு அவஸ்தையாக அவளைப் பார்த்து வைத்தான். அவளுக்கு உள்ளே வரும் போதே அவன் ஏதோ அந்தரப்பட்டது போன்ற தோற்றம் நினைவு வர அவனை முறைத்தவளுக்கு புரிந்தது, இது ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாடு.

முகம் இறுக முன்னே செல்லும்படி கை காட்டினாள். ‘முடியாது என்று மறுத்து விட்டு போய்விடலாம்தான். ஆனால் இதை நிச்சயமாக இப்படியே வளர விட முடியாது. அவன் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தன்னை சுற்றி வருவதனை நினைத்தது முதலில் பணக்கார ரோக்கின் பொழுது போக்கு கண்டுகொள்ளாமல் விட்டால் தானே விலகி போய்விடுவான் என்று தான் நினைத்தாள். கடைசியில் பார்த்தால் அவள் அலுவலகத்தின் முதலாளியாக வந்து நிற்கிறான். போதாகுறைக்கு சக ஊழியர்கள் எல்லாம் அவன் காரை கண்டாலே உன் ஆள் வருகின்றார் என கூறி விலகத் தொடங்கினார்கள் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள். உனக்கென்று வந்து வாய்க்கிறதே விதா வைரவருக்கு டாக் வாய்த்தது போல். 

அருகேயிருந்த இன்னொரு ஹாலுக்கு அழைத்துச் சென்றவன் அவனே ஒரு கையால் கதவைத் திறந்து மறு கையால் உள்ளே சொல்லும்படி சைகை செய்தான், திகைத்து போய் நின்றாள் சன்விதா. சுற்றிலும் வண்ணத் துணிகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு நடுவில் ஒரே ஒரு மேஜையும் இரண்டு கதிரையும் அதன் மேல் ரோஜா பூங்கொத்தும் இருந்தது. சில செவென் ஸ்டார் ஹோட்டல்களில் கப்புள்ஸ் அறை பதிவு செய்தாலே இப்படி தான் அலங்கரித்து இருப்பார்கள். வேலைக்கு வந்து இத்தனை நாட்களில் அதை கவனித்து இருந்தாள். ஆனாலும் உள்ளூர ஒரு உதறல் எடுத்தது. ரோஜா மல்லிகை இரண்டின் வாசமும் ஏசியுடன் கலந்து சுவாசத்துடன் மனதையும் நிறைத்தது.

“ஹாய் சன்விதா" அவள் மோனத்தை கலைத்தவன் புன்னகையுடன் கதிரையை பின்னே இழுத்து அவள் அமர காத்திருந்தான்.

கண்களை விரித்துப் பார்த்தாள் சன்விதா ‘ராணி போல் உணர வைக்கின்றானே’.

கூடவே வேறு சில நினைவுகளும் சேர்ந்தே வர எரிச்சலடைந்தவளாய் மற்ற கதிரையை நோக்கிச் செல்ல “ம்கூம், இதில்தான் இருக்க வேண்டும்” என்றவன் குரலில் சட்டென நின்றுவிட்டாள் சன்விதா.

“எஎன்ன?” வார்தை தந்தியடிக்க ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்தது போன்ற ஒரு உணர்வு. இத்தனைக்கும் அவன் குரலை உயர்த்தவே தாழ்த்தவோ இல்லை. முகத்தைப் பார்க்க புன்னகையுடன் தான் இருந்தது. ஆனால் கண்களில் தென்பட்ட மெல்லிய கடினம் என் வார்தையை மீறாதே! என்று எச்சரிப்பது போலிருந்தது.

‘என்ன கண்ணா பயமுறுத்திறான். சரி அவன் சொன்னபடி கேட்டு நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போகின்றேன்’ மெல்லிய படபடப்புடன் அருகே வந்து அவன் முகத்தை பார்த்தாள். இப்போது அந்த கடினத்தை காணவில்லை, கற்பனையோ என்று என்னும் அளவிற்கு இருந்தது.

உள்ளே வரும் போது கோட்டையும் டையையும் கழட்டியிருக்க வைட் சேர்ட்டின் மூன்று பட்டன்கள் கழன்று ப்ளக் வைஸ்ட் கோட் அணிந்து நின்றவன் மேனியிலிருந்து வந்த மெல்லிய இதமான வாசம் அவள் நாசியை நிறைத்தது.

இது போன்ற சிக்கலான சூழ்நிலையில் சிக்கி இருக்கவிட்டால் ‘என்ன சென்ட்’ என்று கூட விசாரித்து இருப்பாள். கதிரையில் அமர்ந்ததும் எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தவன் “சோ என்ன குடிக்கிறீங்க? மில்க் ஷேக், ஹாட் சாக்லெட் ஓர் குல்பி” குல்பி என்று சொன்னவன் கண்களில் மெல்லிய குறும்பு.

திடுக்கிட்டு போய் அவனைப் பார்த்தாள் சன்விதா. தெரிந்து சொல்கின்றானா இல்லை எதிர்பாராத விதமாய் வந்ததா?

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் “நீங்கள் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னதாய் ஞாபகம்” அவனுக்கு நினைவூட்டினாள்.

“ஹ்ம்... அதற்கு தானே வந்ததே!” மீண்டும் அழகான பல்வரிசை பளீரிட புன்கைத்தான்.

‘மூஞ்சியும் முகரக்கட்டையும், பல்லை கழட்டி கைல குடுக்கணும்’ நினைக்க மட்டும் தான் செய்தாள். ஏனென்றால் அவனின் ப்ளாக் ப்ளாசாரினையும் வைட் ஷிர்டினையும் மீறி தெரிந்த உடல்கட்டு அவனை அப்படியெல்லாம் அடித்து விட முடியாது என எச்சரித்தது.

முள்ளின் மேல் இருப்பது போல் அமர்ந்திருந்தவள் சங்கடமாய் அவனைப் பார்த்தாள். உள்ளே வரும் போதே வெளியில் இருந்தவர்கள் அனைவரும் அவளை ஆர்வமாய் பார்ப்பது போல் தோன்றியது. இந்த இடம், சற்று முன் அவன் நடந்து கொண்டது கண்ணாடி மூலாமாய் அனைவருக்கும் மூலமாய் அனைவருக்கும் தெரிந்திருக்க வெளியிலிருந்த அனைவரின் ஆர்வமும் தூண்டபட்டிருந்தது. அனைவர் பார்வையும் இங்கேயே இருப்பது தெளிவாகவே விளங்கியது.

அவள் மனமோ வசைபாடித் தீர்த்தது ‘இவனுக்கு கதைப்பதற்கு வேறு இடமேவா கிடைக்கவில்லை. என் பின்னாலேயே சுத்தினான் இல்ல அப்போதெல்லாம் விட்டுட்டு இப்ப வந்து நிற்கின்றானே!’

“என்ன செய்ய இரண்டு மூன்று தரம் உன்னை நெருங்கினேன். விலகி விலகி போனாய் அதுதான் இங்கே வைத்து லோக் செய்ய வேண்டியதாய் போயிற்று” ஒரு பக்க உதட்டால் மட்டுமாய் சிரித்தான்.

‘ஆத்தி மனசில நினைக்கிறத அப்படியே சொல்றான்’

“ஷால் ஐ புல் தி கர்டைன்!”

கண்கள் விரிய ‘ஏதே வேறு வினையே வேண்டாமே!’ மனதினுள் அவனை வறுத்தவள் “வேண்டாம் வேண்டாம்” அவசரமாய் மறுத்தாள். “நீங்கள் சொல்ல வேண்டியதை சொன்னால் கேட்டுட்டு போய்ட்டே இருப்பேன்” உதட்டை இழுத்து வைத்துப் புன்னகைத்தாள்.

“சோ என்ன குடிக்கிறாய்?” மீண்டும் கேட்டான். அவன் முகத்தில் இருந்த பிடிவாதமே சொன்னது குடிக்காமல் விட மாட்டன் “மில்க் ஷேக்” என்றவள் மனது ‘இன்னொரு தரம் வாழ்கையில் மில்க் ஷேக்கே குடிக்க மாட்டேன் கண்ணா’ சபதமிட்டது.

சிறு கையசைவில் வந்த  செர்வன்டிடம் “வன் மில்க் ஷேக்” என்றான். அவளுக்கு மில்க் ஷேக்க்கும் அவனுக்கு நீண்ட கிளாசில் கபில நிறத்தில் ஏதோ கொண்டு வந்தார். குடிவகையாக இருக்குமோ என்ற எண்ணம் ஓட சிறு முறுவலுடன் மேஜையிலிருந்த பூங்கொத்தை தள்ளி வைத்தவன் சற்று முன்னே சாய்ந்து இரு விரலால் முன்னே வரும் படி சைகை செய்தான்.

கவனத்துடன் முன்னே சரிந்து மூக்கை சுருக்கி கண்களை மூடும் அழகை பார்த்தவாறே முகத்தில் வாயை குவித்து ஊதினான். மெல்லிய மின்ட் வாசனை நாசியை தாக்கியது.

சட்டென கண் திறந்தவள் “அப்போ அங்கே வாயில்...” மீதி வார்தைகளை உதட்டை கடித்து நிறுத்தினாள்.

“அப்படியானால் நீ என்னை கவனித்தாய்!” வாய் விட்டே சிரித்தவன் இரண்டு கண்களையும் சிமிட்டினான் “அது சும்மா பவ்லா”.

“அச்சோ சன்விதா மானம் போச்சு” லேசாய் முகம் சிவக்க அவன் பார்வை மெதுவே மாறியது.

அவன் மாற்றத்தை லேசாய் உணர்ந்தவள் “எஎஎன்ன?” பயத்துடன் கேட்க தன்னை சுதாகரித்தவன் “ஒன்றுமில்லை, குடி” என்றான். சில வினாடிகள் மௌனத்தில் கழிய திடிரென “சொறி” என்றவனை. மில்க் ஷேக்கின் மேலாக கேள்வியாய் நோக்கினாள்.

“இல்ல முதல் தரம் இருவரும் ஒன்றாக வந்திருக்கின்றோம், சோ ஒன்றும் கொடுக்கமால் அனுப்ப மனமில்லை. கம்பேல் செய்ததற்கு..” விளக்கமளித்தான்.  

மில்க் ஷேக்கை கீழே வைத்தவள் “நீங்கள் ஏதோ சொல்ல வேண்டும் என்றீர்கள்” கேள்வியாய் பார்த்தாள்.

நிதானமாய் தன் திராட்சை ரசத்தை உறிஞ்சியவன் “யெஸ்... முதலில் நான் சொல்வது முழுவதையும் கேள். அதன்பின் உன் முடிவைச் சொல்” திடிரென ஒருமைக்கு மாறியவனை கவனமாய் பார்த்தவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“லிசின் சன்விதா... நான் ஒன்றும் டீன் ஏஜ் பையன் இல்லை அல்லது உன்னை நேற்று சந்தித்து இன்று ப்ரோபோஸ் செய்யல” நிதானமாய் சொல்லிக் கொண்டு வந்தவன் அவள் வாயிலிருந்த மில்க் ஷேக் புரையேற நிறுத்தினான். “ஹேய் பார்த்து...” அருகே இருந்த டிஸ்சுவை எடுத்துக் கொடுத்தான்.

“யூ ஒகே...” சற்றுக் கவலையுடன் விசாரிக்க “நீங்கள் என்னை ப்ரொபோஸ் செய்கின்றீர்களா?” கண்களை விரித்துக் கேட்டாள் சன்விதா.

“ஏன் முட்டி போட வேண்டுமா? போடவா?” புன்னகையுடன் வினவினான்.

“வேண்டாம் வேண்டாம்” வேகமாக மறுத்து இரு கைகளையும் ஆட்ட வாய் விட்டே சிரித்தான். அவன் சிரிப்பு பார்க்கவும் கேட்கவும் இனிமையாய் இருக்க தன்னை மறந்து பார்த்திருந்தாள். அவள் முகத்தில் ரசனையை கண்டவன் இதழ்களில் ஒரு கர்வ புன்னகையுடன் முழங்கால் மீது பாதம் வைத்து அமர்ந்து கேட்டான் “ஷால் வீ கன்டுநியு?”

“ஹ்ம்ம்..” தலையை மேல் கீழாக அசைத்தாள்.

“என்ன சொன்னேன்... ஆஹ் கிட்டதட்ட ஆறு மாதம் காத்திருந்து. உன் அம்மா அப்பாவிடம் பேசி அதன் பிறகுதான் இங்கே உன்னிடம் பேசுகின்றேன்”.

அவளுள் யோசனை ஓடியது ‘அம்மாவிடம் கேட்டானா? ஆனால் அம்மா எதுவும் சொல்லவில்லையே?’

அமைதியாய் பார்த்திருக்க அவனே தொடர்ந்தான் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உன்னை மட்டும்தான் பிடிச்சிருக்கு. எப்போது திருமணம் செய்யலாம்” இலகுவாய் கேட்டான்.

அவனையே சிறுமுறுவலுடன் பார்த்தவள் திருப்பிக் கேட்டாள் “எனக்குப் பிடிக்க வேண்டாமா?”

“நிச்சயமாய் நீயும் யோசிக்கத்தான் வேண்டும். டேக் யுவர் டைம்” இலகுவாகவே சொன்னவன் “ப்ளீஸ் பினிஷ் திஸ்” என்று அவளின் மில்க்சேக்கை கண்ணால் காட்டினான். அவள் எடுத்துப் பருக “சோ வேலை பிடிச்சிருக்கா?” சாதரணமாய் விசாரித்தான்.

அவளுக்குத்தான் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ஒரு பக்கம் ப்ரொபோஸ் செய்தான். அவள் பதிலளிக்க முன்னர் அவள் யோசிக்க நேரம் கொடுக்கின்றேன் என்ற பெயரில் மறுப்பை தள்ளிப் போட்டான். இப்போதே ஏதோ நீண்ட நாள் நண்பர்கள் போல் அவள் வேலையைப் பற்றி விசாரிக்கின்றான்.

ஒரு கை மேசையில் இருக்க முழங்கையூன்றி ஜூசை பருகியவன் “உனக்கு கண்ணன் ராதை பிடிக்குமா?” கேட்டான். ஆமோதிப்பாய் தலையசைத்து கேள்வியாய் புருவம் உயர்த்த “இல்ல அந்த மாலைத்தீவு ஹனிமூன் ரிசெர்டில் நீ வரைந்த கண்ணன் ராதை ஓவியங்களை பார்த்தேன் அழகாய்...” சிறு இடைவெளி விட்டு “அந்த இடத்திற்கு பொருத்தமாய் இருந்தது” சிறு குறும்புப் புன்னகையுடன் மனதார பாராட்டினான்.

சட்டென முகம் சிவந்தாள் சன்விதா. உண்மையில் அவை அனைத்தும் கண்ணின் காதலில் மயங்கி நிற்கும் ராதையின் காதல் ஓவியங்கள், சற்று நெருக்கமானவை. அவள் முகச்சிவப்பை ரசனையுடன் பார்த்தான் அச்சுதன்.

இருவரும் வெளியே வரவே “சோ மிஸ். சர்மா, என்னுடைய ஒஃபரை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கள். அந்த வெளிநாட்டு கம்பனி உங்கள் ஓவியங்கள்தான் வேண்டுமென்று கேட்கின்றார்கள்” அவளை நோக்கி கையை நீட்டினான் அச்சுதன்.

இப்போதும் கை குலுக்க மறுத்தால் சாதாரண கை குலுக்ளைக் கூட தவறாக சித்தரிக்கும் ஒருத்தியாக தெரிவாள். அதோடு இத்தனை நேரம் உள்ளேயிருந்து உரையாடியதையும் வேறு விதமாய் சித்தரிக்கும் அபாயமும் வரும். நிமிர்ந்து பார்க்க அவன் கண்கள் பளபளத்தது. சட்டென மிகவும் அபாயமான ஒரு மனிதனின் முன்னால் நிற்பதனை உணர்ந்தாள் சன்விதா.

அவர்கள் உள்ளே என்ன பேசியிருப்பார்கள் என்ற அனைவரின் யோசனைக்கும் அந்த ஒரு வசனத்தில் பதிலளித்ததும் இல்லமால் தான் முதலில் கை கொடுக்க மறுத்ததற்கும் சிறு பழிவாங்கல். அதோடு உள்ளே அவள் அவன் ப்ரோபோசை மறுக்கவே இடம் கொடுக்காமல் தள்ளிப் போட்டுவிட்டான். இந்தளவு புத்திசாலித்தனம் இல்லையென்றால் பின் எப்படி இந்த தொழில் சம்ராஜ்ஜத்தை கட்டி ஆளுவான். மனம் புகழாரம் பாட அதை தூக்கி உடைப்பில் போட்டவள் பதிலுக்கு கை குலுக்கினாள்.

“என் பதிலில் மாற்றம் இருக்காது. இருந்தாலும் உங்களுக்காக யோசித்து விட்டு மறுக்கின்றேன்” பதிலளித்தாள்.

அவன் கையிலிருந்த அவள் கையை மென்மையாய் சற்று இறுக்கிப் பிடித்தவன் “நிச்சயமாய் எனக்கு சாதகமான பதிலாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்” உதடு பிரியா மென்முறுவலுடன் கூறினான்.

அவனை அலட்சியமாய் நோக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறியவளை அச்சுதனின் சிறு கண்ணசைவில் அவனது செக்யூரிட்டி கார்ட்ஸ் பின்தொடர்ந்தார்கள்.

அந்த ஹோட்டலின் இன்னொரு பக்கம் பார்க் போல் அமைத்து அதற்குள் நடந்து செல்ல அவினியு ஒன்றும் அதில் அங்கங்கே பார்க் பெஞ்சும் போடப்பட்டிருந்தது. அதிலொன்றில் போய் தொப்பென்று அமர்ந்தவள் மனம் தாளித்து கொட்டியது “அவன் மூஞ்சியும் முகரையும் ஒரு கோட்டு சூட்ட போட்டுட்டு கார்ல வந்த எல்லோரும் பின்னால் வருவாங்க என்று நினைப்பு”.

அவள் செல்லவும் பார்டியில் இருந்தவர்களை நோக்கி “ப்ளீஸ் என்ஜாய் தி பார்டி எனக்கு ஒரு வீடியோ கன்பிரன்ஸ் இருக்கு” என்றவன் அவர்களிடமிருந்து விடை பெற்று அதே ஹோட்டலின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த அவன் அலுவலகத்திற்கு சென்றான். போன் பேசியவாறே பல்கனி வந்தவன் கண்களில் விழுந்தாள் அந்த அவினியுவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த சன்விதா.

அவளை ஒருவரும் தொந்தரவு செய்யதா வண்ணம் அவனின் செக்யூரிட்டி பார்த்துக் கொள்ள அவள் தனிமைக்கு பங்கம் வரவில்லை. பல்கனியின் மதிலில் கையூன்றி சிறு முறுவலுடன் சுவாரஸ்சியமாக பார்த்த அச்சுதனுக்கு தெளிவாகவே புரிந்தது தன்னைத்தான் மனதினுள் தாளிக்கிறாள்.

அவள் போனை எடுத்து யாரையோ மிரட்ட ஐந்தே நிமிடத்தில் அந்த இடத்திற்கு வந்தான் சரவணன். அவனைப் பார்த்து அழகாய் சிரித்து அன்பாய் அருகே வர சைகை செய்தாள். “சொல்லுமா” என்றவாறு யோசனையின்றி அருகே வந்தவன் காலில் ஓங்கி மிதித்தாள் சன்விதா.

“அவுச்...” மேலேயிருந்து பார்த்தவன் ஒற்றைக் கண்ணை மூடினான்.

“ஏண்டி மிதிச்சா....?” அப்பாவியாய் கேட்டான் சரவணன்.

“மாமா வேலையாடா பார்கிறா? இருடா... உனக்கு இது போதாது” அவன் நெஞ்சிலும் முகத்திலும் கைகளால் அடிக்க இரண்டு கைகளையும் பிடித்து வைத்து கொண்டு கெஞ்சினான் “நான் சொல்றத கொஞ்சம் கேளேன்” கையை பயன்படுத்த முடியாமல் போகவே அவன் கால்களில் தன் காலால் அடித்தாள். 

சட்டென அந்த பார்க் பெஞ்சின் பின்புறம் சென்றவன் அவள் கைகளை பின்னால் வளைத்துப் பிடிக்க அவ்வளவு நேரம் சும்மாயிருந்த செக்யூரிட்டி அவர்களை நோக்கி நகர முன் மேலே நின்ற அச்சுதனைப் பார்த்தான். அவன் வேண்டாம் என்பது போல் கையையசைக்க நின்றுவிட்டான்.

ஒன்றும் செய்ய முடியாமல் நின்றவளிடம் கொஞ்சினான் சரவணன் “முதலில் நான் சொல்வதைக் கேள். அதுக்குப் பிறகு அடி” அமைதியானவள் தொப்பென்று அமர்ந்து கையைக் கட்டிக் கொண்டு கூறினாள் “சொல்லித் தொலையும்”.

அவளருகே அமர்ந்த சரவணன் “சன்விதா நான் இந்த தொழிலுக்கு புதிது, என்ன மாதிரி சிறிய தொழிலதிபர்கள் எல்லாம் அவனை போல் ஒரு பிசினெஸ் டைக்கூனை எதிர்த்து நிற்க முடியாது. அவன் இந்த கம்பெனியின் மெயின் பாட்னர். என்னை நம்பி இந்த கம்பெனியில் வேலை செய்பவர்களையும் நான் யோசிக்கனும் இல்லையா? அதோடு...”

“உன்னை பிளாக் மெயில் செய்தானா?” ஆச்சரியத்துடன் இடையிட்டாள்.

“நேரடியாக இல்ல... அவன் கம்பனிதான் இதுவும் எனது பங்கு வெறும் நாற்பது வீதம்தான். அதோடு உன்னிடம் பேச மட்டும் தான் செய்வேன் வேறு எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் என்று வாக்களித்திருந்தான்”

“பெரிய அரிசந்திர பிரபு... அவன் ப்ராமிஸ் பண்ண நம்பிருவாயா?”

“அவன் வாக்கு தவறியதாக இதுவரை கேள்விப்பட்டதில்ல” புன்னகைத்தான் சரவணன். தொழில் எத்தனையோ இடங்களில் பொய் சொல்ல வேண்டி வரும் நீக்கு போக்காய் நடக்க வேண்டி வரும். இத்தனைக்கும் நடுவில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்பது பிரம்ம பிரயத்தனமே.

“அவன் கேசவன் அச்சுத கேசவன், AK எனக்கு தெரிந்து அவனை எதிர்த்தது ஜெயித்தவர் கிடையாது".

சரவணன் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தாலும் வாய்க்குள் முணுமுணுத்தாள் “ஆடியோ ரீலீஸ்ல ஹீரோவ புகழுர மாதிரி புளுகிறானே.”

வேறு எதுவும் பேசாமல் திரும்பியவளைக் காண சரவணனுக்கு பாவமாகவும் இருந்தது அவள் குழந்தைத்தனத்தை பார்க்க சிரிப்பும் வந்தது சொல்வதை புரிந்து கொள்கிறாள் இல்லையே என்று கோபமும் வந்தது. அனைத்தையும் உடைப்பில் போட்டவன் அவளை பார்த்து ஆர்வமாய் கேட்டான். “என்ன கேட்டான்?  என்ன பதில் சொன்னாய்?”

“ஹ்ம்ம்.... கல்யாணம் செய்வோமா என்று கேட்டான். வந்து புரோகிதம் செய்து வை வா”

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 03

யோசனையுடன் கைகளைக் கட்டியவாறே ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தாள் சன்விதா. அச்சுதன் அம்மாவிடம் வந்து பேசினானா! ஆச்சரியமாய் இருந்தது. மலருக்கு மலர் தாவும் வண்டு அவன், எப்படி ஒரு மலரில் வாசம் செய்ய சம்மதிப்பான்.

இல்லை இந்தக் கதைகளில் வருவது போல் எனக்கும் அவனுக்கும் ஏதேனும் மோதல் ஏற்பட்டு அதனால் பழி வாங்க எதுவும்.... நன்றாக யோசித்து பார்த்தாள் அப்படி எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவளுக்கு சில கொள்கைகள் இருந்தாலும் அதை வைத்து மற்றவரை எடை போட்டு பேசும் பழக்கமில்லை. எனவே அப்படி எதுவுமில்லை. சிலவேளை அன்று சந்தித்ததில் இருந்தே....

குழப்பத்துடன் நடந்தவள் அருகே வந்து மோதுவது போல் நின்றது அந்த SUV. காரின் கருப்பு கண்ணாடியை பார்த்து முறைக்கவே, கண்ணாடியை இறங்கியவன் கூலரை கழட்டியவாறே “ஹாய் சன்விதா” அவளைப் பார்த்து புன்னகைத்தான். முழங்கையினை காரில் ஊன்றி விரல்களில் கூலரை வைத்து சுழற்றியவாறே கேட்டான் “வாவேன் வீட்டில் இறக்கி விடுகின்றேன்”.

பெரிய்ய்ய காதல் மன்னன் அவனிடம் பொரிந்து தள்ள வாயெடுத்தவள் அவன் காரை அடையாளம் கண்டு அங்கேங்கே நின்றவர்களின் சுவாரசியமான பார்வையில் தன்னை நிதானித்தவளாக பல்லை கடித்தவாறே “நாம் கொஞ்சம் பேச வேண்டும் மிஸ்டர் அச்சுத கேசவன்”.

ஒரு கணம் கண்களில் மின்னல் மின்னி மறைய “ஷுயர் எங்கே போவோம் கஃபே, டிரைவ் இன்ஸ், இந்த ஹோட்டலின் கஃபே கூட நல்லாய் இருக்கும் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்”

பல்லை கடித்தவள் இவன் போவதற்குள் என் பல்லெல்லாம் போயிரும் போல இருக்கே கோபத்தினை அடக்கி “இதோ பாருங்கள் மிஸ்டர் அச்சுத கேசவன் நாமிருவரும் டேட்டிங் போகல, உங்களோட கொஞ்சம் பேசணும் அவ்வளவுதான், காரிலேயே பேசுவோம்”

நெஞ்சில் கைவைத்து லேசாக தலைசாய்த்து “அப்படியே ஆகட்டும் மஹாராணி”  என்றவனுக்கு ஏனோ எல்லாம் விளையாட்டாகவே இருந்தது.  அவனுக்கு அவள் தன்னோடு வர சம்மதித்ததே தித்திக்க கூலரை ஷிர்டில் மாட்டியவன் ஒரு புறமாக சரிந்து காரின் கதவை திறந்துவிட்டான்.

காரினை போக்குவரத்து குறைந்த சாலையில் செலுத்தியவன் முகங் கொள்ளாத புன்னகையுடன் “சோ...” என்றான்.

“மிஸ்டர் அச்சுத கேசவன்....”

“அச்சுதன்”

“ஹான்...”

“என் பெயர் அச்சுதன், அச்சு, சுதன் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்”

“அப்ப கேசவன் அப்பாவின் பெயரா?” எரிச்சலுடன் கேட்டாள்.

“இல்லை அதுவும் என் பெயர் தான்” புன்னகையுடன் பதிலளித்தான்.

“இரண்டு பெயரா?”

“ம் அம்மாவுக்கு அச்சுதன் என்ற பெயர் வைக்கணும் என்ற ஆசை அப்பாவுக்கு கேசவன், அதன் இரண்டு பெயரையும் ஒன்றாக்கி வைத்துவிட்டார்கள் எப்படி...”

“ஐடியா நல்லாத்தான் இருக்கு”

அவளை ஒரு கணம் பார்த்தவன் “சோ உன் பெயருக்கு என்ன அர்த்தம்” தெரிந்திருந்ததும் கேட்டான்.

“அமைதி.... என் பெயரை பற்றி பேசவா என்னை அழைத்து வந்தீர்கள்”  எரிச்சலுடன் கேட்டாள். அவனோ புன்னகை மன்னனாக இருந்தான்.

“அமைதியை விரும்புவாள் இல்லையா?” கார் கல்யாண ஊர்வலம் போல் ஊர்ந்து கொண்டிருந்தது.

“அதோடு நம் திருமணத்தினைப் பற்றியும் பேச, எப்போது வைத்துக்கொள்ளலாம், ஹால் திருமண வேலையெல்லாம் நானே பார்த்துக்கொள்கின்றேன் எப்போது என்பதை மட்டும் சொல்லு” கண்களில் கவனத்தோடு கேட்டான்.

அவன் அழிச்சாட்டியத்தில் கண்களை முடி திறந்து பார்த்தவள் ஒரு கணம் காரில் ஏறியதிலிருந்து இருவருக்குமான சம்பாஷணையினை அசை போட்டாள் எங்காவது தன் சம்மதத்தினை சொன்னேனா என்று. அவனை பார்த்தவளுக்கு அவன் கண்களில் இருந்த கவனம் புரிய உள்ளூர ஒரு குரல் எச்சரித்தது. ‘இவன் அபாயமானவன் கவனமாய் இரு’. அத்துடன் இவ்வளவு திறமை இல்லாமல் தொழிலில் கொடிகட்டி பறக்கவும் முடியாது என பாராட்டு பத்திரத்தினையும் சேர்த்து வழங்கியது. அதை உடைப்பில் போட்டவள் 

“அடப்பாவி..... நான் எப்போது திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்.”

“இல்லையா... பெயர் விபரம் எல்லாம் கேட்க நான் நினைத்தேன் உனக்கு சம்மதமோ என்று” கள்ளச் சிரிப்புடன் பதிலளித்தான்.

“இதோ பாருங்கள் மிஸ்டர் அச்சுத கேசவன்...”

இடையிட்டவன் “அத்தான்..” அழுத்தமாக சொன்னான்.

“ஹான்....” குழப்பத்துடன் பார்க்கவே

“இல்ல என் பெயர் சொல்லி கூப்பிட விரும்பாவிட்டால் அத்தான் என்று கூப்பிடு என்று சொன்னேன்” 

அவள் குழப்பம் தீராமல் கிளிப்பிள்ளையாய் திருப்பி படித்தாள் “அத்தான்..”

சட்டென பிரேக் அடித்தவன் அவளை திரும்பி பார்த்தவன் கண்களில் தென்பட்ட வேட்கையில் பயந்து வாயினை கைகளால் மூடி கார் கதவோடு ஒன்றினாள் சன்விதா.

அவளின் பயத்தை பார்த்தவன் கையை முஷ்டியாக்கி வாயில் வைத்து கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவன் மீண்டும் காரை ஸ்டார்ட் எடுத்தவாறே புன்னகையுடன் கூறினான் “நம் திருமணம் முடியும் மட்டும் நீ என்னை அப்படி கூப்பிடாமல் இருப்பதே நல்லது”

இன்னும் அது நிலையில் இருந்தவாறே தலையை வேகமாக ஆட்டியவளை பார்த்து சிறு சிரிப்புடன் உல்லாசமாக கேட்டான் “என்ன கல்யாணம் செய்வோமா?”.

அவனது உல்லாச சீண்டலில் பழைய நிலைக்கு மீண்டவள் சட்டெனெ தன்னையும் அறியாமல் கேட்டள் “பின் எப்படி கூப்பிடட்டும்”

“வேறு எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு”

இனிமையான குரலில் “ஆடு, மாடு, எருமை, கிங்காங் டைனோசர்.....” நாடியில் கைவைத்து யோசித்தவளை நோக்கியவன் கண்களில் ரசனை வழிந்தது.   

அவனையும் மீறி அவன் கைகள் நீண்டு தலையை பிடித்து செல்லமாக ஆட்டியது. அதுவரை அவளை சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழ அவள் எதற்கு அவனுடன் வந்தாள் என்பதும் நியாபகத்திற்கு வந்தது.

“தொடக்கூடாது” சட்டென கையை தட்டிவிட்டாள்.

“சரி சரி.... தொடலை “

“மிஸ்டர் அச்சுத கேசவன்”

உதட்டை கடித்தவாறே அவளை திரும்பி பார்த்தவன் “ஹ்ம்ம்....” என்றான்.

“இதோ பாருங்கள் எனக்கு என்று சில கொள்கைகள் இருக்கு, எனக்கு வரும் கணவர் எப்படி இருக்கனும் என்று கனவும் இருக்கு”  

“ஹ்ம்ம்...”

“அதோட எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை”

“ஹ்ம்ம்....”

“என்னுடைய கணவர் ராமனாக இருக்கனும் கண்ணனாக இல்லை” கண்களில் கனவு  மிதக்க “என்னை மட்டுமே காதலித்து என்னை மட்டுமே தொடுபவராக இருக்க வேண்டும்....”

மேற்கொண்டு எந்த சத்தமும் வராமல் போகவே திரும்பி பார்த்தவன் கண்களில் விழுந்தது லேசாக சிவந்திருந்த அவள் கன்னமும் கனவு மிதந்த விழிகளும்.

அவன் புன்னகைத்தான் “இதுதான் உன் பிரச்சனையா?” அவள் கையை தன் கையில் எடுத்தவன் மென்மையான குரலில் “நான் காதலிக்கும் முதல் பெண்ணும் கடைசி பெண்ணும் நீதான்”

அவன் முகத்திலிருந்த மென்மையினை பார்த்த சன்விதா கையை விலக்காமல் மென்மையாக கேட்டாள் “நீங்கள் ராமான...”

அவள் கையை விடுவித்தவன் உதட்டை கடித்தவாறே மெல்ல இல்லை என தலையசைத்தான்.

“எனக்கு என் கணவர் ராமனாக இருக்கணும், அது நீங்கள் இல்லை” மென்மையாகவே கூறினாள்.

அவன் முகத்தில் இருந்த மென்மை மெதுவே மறைய உணர்ச்சியற்ற பாறை போலான முகத்துடன் மெல்ல தலையசைத்தவாறே கூறினான் “உன்னோட இந்த கனவை மட்டும் என்னால் நிறைவேற்ற முடியாது ப்ளீஸ்”

“இந்த தகுதி இல்லாத ஒருவரை நான் மணமகனாக ஏற்க முடியாது “ அழுத்தமாக கூறினாள்.

முகம் மேலும் இறுக “அனைத்து கனவுகளும் நனவாவதில்லை” வறண்ட குரலில் கூறினான்.

ஆழ்ந்த மூச்சினை எடுத்து விட்ட சன்விதா பொறுமையாக சொன்னாள் “கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் நான் உங்களை திருமணம் செய்ய முடியாது”

“ஏன்... மறுபடியும் அதே காரணம் வேண்டாம் வேறு எதாவது இருந்தால் சொல்” எதிரே இருந்த பாதையில் கண்களினை பதித்தவாறே கூறினான்.  

அவனை முறைத்தவள் “நான் வேறு ஒருவரை காதலிக்கின்றேன் போதுமா காரணம்” மெதுவே சென்று கொண்டிருந்த கார் இப்போது நின்றே விட்டிருந்தது.

“ஏய்ய்..” அடிக்க கையோங்கியவன் அவளது பயத்தினைப் பார்த்து ஸ்டேரிங் வீலில் ஓங்கி அடித்து அதையே இறுக பிடித்தான். ஸ்டேரிங் வீலை பிடித்திருந்த கரங்களின் முட்டி வெண்மையாக மாறத் தொடங்கியது.

“தென் போர்ஹெட் ஹிம் அண்ட் லேர்ன் டு லவ் மீ” 

சன்விதா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். இவ்வளவு நேரம் தன்னிடம் பேசியவன் முகமா இது கடும்பாறை அது போல் அவன் குரலும் எதுவித உணர்ச்சியுமற்று இருந்தது. 

“மனுஷன் பேசுவான உங்களிடம், கதவை திறங்க நான் போகணும்” கார் கதவை திறக்க முயன்றவாறே எதுவித அசைவுமின்றி அமர்ந்திருந்தவன் கையை மட்டும் அசைத்து அன்லாக் செய்ய போனவனின் விரல் இடையிலே நிற்க கேட்டான் “அவன் பெயர் என்ன?”

“அவன் பெயர்... அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு, நீங்க கதவை திறவுங்கள்” அவள் குரல் அவளையும் மீறி கெஞ்சியது.

அவன் விரல் அவனையும் மீறி கதவை திறந்துவிடவே, கைப்பையினை எடுத்தவாறு இறங்கியவள் “குட் பாய், மிஸ்டர்  அச்சுத கேசவன், நாம் இனி சந்திக்காமல் இருந்தால் நல்லது” திரும்பியும் பாராமல் நடக்க தொடங்கினாள்.

அவனது கூற்றின்படி அவன் அவளது பெற்றோரிடம் வந்து முறையாக பெண் கேட்டிருக்கின்றான். எதோ காரணத்தினால் அவர்கள் மறுத்தும் இருக்கின்றார்கள். இன்று நிச்சயமாக அம்மாவிடம் இது பற்றி பேசியே ஆக வேண்டும் தள்ளி போடுவது நல்லதில்லை. பெண்கள் இவ்வாறு வெளியில் நடக்கும் சம்பவங்களினை வீட்டுக்கு மறைப்பதனால் ஆபத்துத்தானே தவிர ஒரு நன்மையும் இல்லை. அவளது பெற்றோர்தான் அவளின் முதல் நண்பர்கள் எதை பற்றியும் அவர்களிடம் பேசலாம். அவ்வளவு சுதந்திரம் உண்டு அவளுக்கு அவர்களிடம்.

அவள் போவதையே இறுகி போய் எதுவித அசைவுமின்றி பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் கடினம் ஏற முகம் உணர்ச்சியற்று கல் போல் ஆனாது. 

♥♥♥♥♥

வீடு வந்து சேரும் வரை அவளைப் பின்தொடர்ந்த அச்சுதனின் SUV அவள் வீட்டிற்குள் செல்லவும் திரும்பிச் சென்றது. அவனது காரில் இருந்து இறங்கிய சன்விதாவுக்கு அவனது பார்வை உள்ளுர சில்லெடுக்க வைக்க திரும்பியும் பார்க்காமல் தப்பித்தால் போதும் என்று ஒரு ஆட்டோவினை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவள் கண்ணனிடம் வந்து அலப்பறையடித்துக் கொண்டிருந்தாள்.

“மிச்சம் குளிச்சிட்டு வந்து வைச்சுக்கிறேன்” கண்ணனிடம் சொல்லிவிட்டு குளிப்பதற்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

பொதுவாக கோவிலுக்கு சென்று வந்தால் தவிர மற்றும்படி என்ன வேலையாக சென்றாலும் வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு மேல் கழுவ வேண்டும் இல்லாவிட்டால் சரிப்படாது. ஆனால் இன்று இந்த யோசனையில் தலைக்கு ஊற்றியவள் வெளியே அமர்ந்து தலையை காய வைத்துக்கொண்டிருந்தாள்.

கோவிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பத்மாவதி, அவளது அன்னை அவள் கண்ணில் தென்பட்டார். வட்ட முகம், காதருகேயும் உச்சி வகிட்டிலும் லேசாக ஓடிய நரை, தலையில் சூடிய மல்லிகை நெற்றியில் குங்குமம் என்று மங்களம் என்பதன் வரைவிலக்கணமாக வந்தவரைப் பார்த்து “அம்மா அத்தை என்னை விட்டுட்டு நீங்கள் மட்டும் தனியாக கோவில் போய் வந்துடீங்க இல்லை” என செல்லமாக முகத்தை தூக்கி வைக்கவே, அம்மா அவளது கதை பிடித்து திருக்கினார் “உனக்கு எத்தனை தரம் சொல்வது, அந்தி சாய்ந்த பிறகு தலைக்கு ஊற்றதே என்று உன் தலைமுடியின் அடர்திக்கு ஜலதோஷம் பிடிக்கும், சொன்னல் சொன்ன சொல் கேட்கிறாயா?”.

அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்ட சன்விதா அத்தை ரேஷ்மாவின் பார்த்து “அத்தை....” என முக்கால் குரல் கொடுக்க அவளது சப்போர்ட்க்கு வந்தார் அத்தை.

“சரி விடு, எதோ சின்னப்பிள்ளை முழுகிவிட்டாள், நான் தலைக்கு சாம்பிராணி போட்டு விட்டால் ஜலதோஷம் பின் வாசல் வழியாக ஓடுது” அத்துடன் நில்லாமல் உள் நோக்கி குரல் கொடுத்தார் “மானு கொஞ்சம் சாம்பிராணி எடுத்து வாம்மா”

அத்தையிடம் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சியவளை அதற்கு மேல் கண்டிக்க மனமில்லாமல் அவள் அம்மா உள்ளே செல்ல சாம்பிராணி கொண்டு வந்த அக்கா மானசவினை பார்த்தவள் “அக்கா நீ உள்ளே தான் இருந்தாயா? கண்ணில் படவே இல்லை” என கேட்டவளை கோபமாக முறைத்தாள் மானசா என்கின்ற மானு. அன்று காரில் வைத்து அவளைக் கட்டிக் கொண்ட நங்கை.

பின் உள்ளே வரும் போதே அவள் முகம் சரியில்லை என்று முன்னால் வந்து என்ன எது என்று கேட்டு தொண்டை கிழிய கத்தினால் முன்னால் நின்றவளை கணக்கே எடுக்காமல் சுற்றி கொண்டு சென்றுவிட்டு இப்போது உள்ளேயா இருக்கிறாய் என்றால் கோபம் வரத்தானே செய்யும் ஜனங்களே.

அவள் முறைக்க ‘என்ன முறைக்கிறாள் வழமை போல் யோசனையில் கண்டுகொள்ளாமல் போய்ட்டமோ சரி சமாளிப்போம் நாம பார்க்காதத’ என இல்லாத தைரியத்தை வரவழைத்து கொண்டவள் “ஹிஹிஹி...” என அசட்டு சிரிப்பொன்றை சிரித்து வைத்தாள்.

“எத்தனை தரம்தான் சொல்வது? எப்போதுதான் இந்த பழக்கத்தை மாற்றப் போகின்றாயோ?” என கடிந்தாள் மானசா.

“உனக்கு தான் என் குணம் தெரியுமே, என்னை பிடித்து நிறுத்தி இருக்க வேண்டியது தானே, கையில் என்ன இருந்தது”

“ஆ... மருதாணி...” கையிலிருந்த மருதாணி கிண்ணத்தை காட்டியவள் “உனக்கு வைக்கலாம் என எடுத்து வந்தேன் உன் வாய் கொழுப்புக்கு கிடையாது போ...” முகத்தை திருப்பி கொண்டாள்.

மானஸாவின் கையை பிடித்து இழுத்து அருகே அமர்த்தியவள், அவள் கன்னத்தை வலிக்காமல் கிள்ளியவாறே “என் செல்ல அக்கா இல்ல, என் அம்முக்குட்டி, என் தங்கம் என் ரத்தினம்.... புஜுக்கு புஜுக்கு” என அவளை கொஞ்சியவாறு  கால்களினை மானசாவின் மடியில் போட்டவள் “முதலில் காலுக்கு வைத்துவிடு பிறகு கைக்கு வைக்கலாம் என்ன” என்றவளை ஆவென பார்த்தவள் “உனக்கு மருதாணி வைப்பதாக யார் சொன்னது, முடியாது போ” வாய் முடியாது என சொன்னாலும் கை தன்பாட்டுக்கு மருதாணியினை எடுக்கவே அங்கு வந்த அவர்களின் அம்மா பத்மாவதி தேநீரினை அவர்கள் புறம் வைத்துவிட்டு மருதாணியை அவள் கையிலிருந்து பறித்தார். 

“அம்மா....” என சிணுங்கிய சன்விதாவிடம் “நேரம் கெட்ட நேரத்தில் முழுகியதும் இல்லமால் மருதாணி வேறா, குளுமையாக்கிவிடும் நாளை காலை வைத்துக்கொள்” மருதாணியுடன்  உள்ளே சென்றார்.

இரு சகோதரிகளும் ஒன்று போல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “வட போச்சே” என கோரஸ் பாடினார்கள்.

அத்தை ரேஷ்மா இருவரையும் பார்த்து சிரித்தவாறு உள்ளே சென்றுவிட்டார். அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். ஆனால் இவர்களின் குறும்புகள் அனைத்தும் அத்துப்படி அவர்கள் தந்தையின் சகோதரி அவருக்கு பிள்ளைகள் இல்லை, கணவர் தேவ் ஆர்மியில் இருப்பதால் அடிக்கடி இங்கே வந்துவிடுவார் என்பதை விட கணவருக்கு லீவு கிடைக்கும் போது மட்டும் போவார் என்பது பொருந்தும்.

♥♥♥♥♥

அமாவாசை வானத்தில் மற்ற நட்சத்திரங்களின் நடுவில் ஓரியன் நட்சத்திர கூட்டம் வடக்கு திசையை அடையளம் காட்டியபடி பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.  சன்விதாவுக்கு அந்த ஓரியன் நட்சத்திர கூட்டத்தை பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம், சுட்டு விரலினால் மன கோடுகளை வரைந்து கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்தார் அவளது அன்னை. விரலை அந்தரத்தில் வைத்தபடி கழுத்தை மட்டும் திருப்பி அன்னையை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினாள்.

பத்மாவதி எதுவும் பேசாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி தலை சாய்த்து அவளை பார்த்தார்.

அம்மாவை பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்தவள் கேட்டாள்  “உங்களுக்கு எப்படியம்மா தெரியும் நான் உங்களுக்காக தான் காத்திருக்கின்றேன் என்று”

புன்னகையுடன் அவள் தலையில் வலிக்காமல் தட்டியவர் “என்னம்மா” என்றார்.

அவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் முகத்திலிருந்து மறைய “அம்மா அது....” சற்றே தயங்கினாள். அவர்கள் அவளிடம் ஒரு விடயத்தை கூறவில்லையென்றால் அதற்கு நிச்சயமாக ஒரு சரியான கரணம் இருக்கும் என ஆணித்தரமாக நம்பினாள். அதுதான் அதைப்பற்றி கேட்க மிகவும் தயங்கினாள்.

புன்னகையுடன் ஊக்கினார் அவளது அன்னை “பரவாயில்லையம்மா கேள்...”

“அந்த அச்சுத கேசவன், அவன் உங்களிடம் வந்து என்னை பெண் கேட்டது உண்மையா, அம்மா”

அச்சுத கேசவன் என்ற பெயரிலேயே அந்த அன்னையின் முகம் இரத்த பசையின்றி வெளுத்தது, மெல்லிய குரலில் தனக்கு தானே கேட்டுக்கொண்டாவர் “அவன் இன்னும் இவளை மறக்கவில்லையா?”

சன்விதாவிடம் பதட்டமாக கேட்டார் “அவன் உன்னிடம் எதாவது தப்பாக நடந்து கொண்டானா?”

அன்னையின் வெளுத்த முகத்தை பார்த்தவள், சட்டென அவரது கையினை தன் கைகளில் எடுத்துக் கொண்டு “இல்லையம்மா அப்படி எதுவுமில்லை, இன்று அவன் எண்னிடம் பேசினான், தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டான், நான் மறுக்கக் கூட இடம் கொடுக்கவில்லை” மூக்கை சுருக்கினாள்.

“ஆனால் எனக்கும் அவனுக்கும் சரி வராது என்று சொல்லிவிட்டேன்” என்றவள் கண்ணடித்து அம்மாவின் அருகே குனிந்து ரகசியமாய் கூறினாள் “நான் ஒருத்தனை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்” ராகமிட்டு சிரித்தாள்.

“யாரை காதலிப்பதாக சொன்னாய், யாரும்மா அந்த களப்பலி”  கேலியாகவே கேட்டார் அவளது அன்னை.

“வேறு யாரும்மா வீரர் தீரர் சூரர் நமது கரண் என அழைக்கப்படும் உமாகாரன் தான்”

அன்னை உடனே கேட்டார் “அவனை காதலிக்கிறாயா? சொல் அவனையே திருமணம் செய்து வைக்கிறோம்”

“ஐயோ அம்மா, நான் சும்மா பொய்க்குத்தான் கூறினேன் அவனை நான் காதலிக்கவில்லை அவன் தான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான்”

சில கணங்கங்கள் அமைதியில் கரைய “அம்மா... ஆனால் எப்போது அவன் வீட்டுக்கு வந்தான்?”

“ஹும்... அது ஒரு ஆறு மாதத்திற்கு மேல் இருக்கும்” மக்களின் முகத்தில் தென்பட்ட குழப்பத்தினை பார்த்து கேட்டார் “ஏனம்மா?”

“இல்லை, என்னிடம் கேட்பதனால் மறுநாளே வந்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாள் கழித்தும் வந்திருக்கலாம், ஏன் ஆறு மாதம் காத்திருந்தான்?”

இருவருக்குமே அந்த கேள்வி ஒரு புதிராய்தான் நின்றது.

“உனக்கு அவனை பிடித்திருக்கின்றதாம்மா, நன்றாக யோசித்து சொல். உன் விருப்பம்தான் முக்கியம்”

திடுக்கிட்டு போய் அன்னையை பார்த்தவள், நிதானமாக யோசித்தள் இன்று நடந்த சந்திப்பில் ஒரு தரம் கூட அவனை காதலிப்பதாக ஒரு உணர்வு கூட தோன்றியதாக தெரியவில்லை அவளுக்கு (நம் ஹீரோவின் லட்சணம் அப்படி) எப்போதடா தப்பி வருவோம் என்றுதான் இருந்தது. அத்துடன் அவனின் பார்வை அப்பப்பா பார்வையா அது குருதியை நாளத்திலேயே உறைய வைப்பது போல்.

தலை குனிந்தவள் பிடிவாதமாய் மறுத்தாள் “எனக்கும் அவன் குணம் தெரியும். அவனுக்கும் எனக்கும் சரியே வராது அவன் அருகில் கூட செல்ல விருப்பமில்லை” என்றவள் தாயின் மடியில் தலை சாய்த்தவாறே நிமிந்து நிலவற்ற நட்சத்திர வானத்தினை பார்த்தாள்.

மீண்டும் சில கணங்கள் மௌனத்தில் கரைய திடீரென அன்னை அவனை காதலிக்கிறாயா என்று கேட்டதில் அன்று இடை தாங்கியவனின் நினைவு வந்தது தொலைத்தது. மனம் வழமை போல் அவனுக்காக கூப்பாடு போட்டு ஏங்கியது எங்கிருக்கிறாடா மீண்டும் காண வேண்டுமே ஆனால் எப்படி, அம்மாவிடம் சொன்னால் சரி ஆனால் என்னவென்று சொல்வது கண்களில் நீர் வரும் போல் இருந்தது.

அப்படியே அச்சுத கேசவனின் கண்களினை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு ஆனால் அதே கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்த வேட்டை பார்வையின் நினைவும் கூடவே வந்து வயிற்றை ஒரு கிள்ளு கிள்ளி செல்லவே மேற்கொண்டு யோசிக்க முடியாமல் "அம்மா எனக்கு டயர்டா இருக்கு படுக்க போகின்றேன்" என்றவாறே எழுந்து உள்ளே சென்றாள். 

♥♥♥♥♥

உள்ளே சென்று படுத்தவளுக்கு இன்னும் தன் இடையினை அவனது வலிய கைகள் தாங்கி பிடித்திருப்பது போல் இருக்கவே சட்டென எழும்பியவள் அவள் மேஜையில் இருந்த கண்ணனினை பார்த்து கை கூப்பியவள் கேட்டாள் "கண்ணா ப்ளீஸ் அவன் எங்கேயிருந்தாலும் என் முன்னே கொண்டு வந்து நிறுத்தேன்"

நிறுத்தினால் மட்டும் உனக்கு அவன் தான் இவன் என தெரிந்துவிடுமா என்ன என அவன் லீலைக்கு ஆள் கிடைத்ததை எண்ணி கண்ணன் சிரித்தவாறு இருந்தான்.

♥♥♥♥♥

வெளியே அமர்ந்திருந்த பத்மாவதியின் சிந்தனை இரண்டு மாதத்திற்கு முன் சென்றது.

அன்று அலுவலகத்திலிருந்து வந்திருந்த சன்விதாவின் அப்பா அனந்தகிருஷ்ன சர்மா சொல்லிக் கொண்டிருந்தார். "அந்த பையன் அச்சுத கேசவன் உண்மையாகவே நம் சன்விதாவை விரும்புகின்றான் தான் போலிருக்கின்றது, இன்று எதோ அலுவலக வேலையாக எனது அலுவலகத்திற்கு வந்திருந்த போது ஜிஎம்மும் சேர்மானும் பேசிக் கொண்ட போது கேட்டேன். இப்போதெல்லாம் திடீரென ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறானாம் என்று அத்துடன் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும். அவர்களுக்கு நம் விதாதான் என்று தெரியாது"

"அப்படியானால் அவனையே பேசி முடித்துவிடலாம் என்கிறீர்களா?"

சிறிது குழப்பத்துடன் தலையசைத்தார் அனந்தகிருஷ்ன சர்மா. "ஆனால் விதாவுக்கும் அவனின் குணத்துக்கும் சரிப்பட்டு வராதே" என்றவரின் பார்வை குழந்தையென அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த சன்விதாவிடம் இருந்தது. "இதையெல்லாம் இப்போதைக்கு அவளிடம் சொல்லாதே கொஞ்ச நாள் பொறுத்து பார்ப்போம்" என்றவருக்கு தனது ப்ரோமோஷனுக்கும் இடமாற்றத்திற்கும் காரணம் அச்சுத கேசவனோ என்ற சந்தேகத்தினை மனைவியிடம் கூறவில்லை. அவருக்கே உறுதிபட தெரியாத ஒன்றினை எவ்வாறு கூறுவது என எண்ணி விட்டுவிட்டார்.

இரவு பறவையின் சடசடப்பில் நினைவில் இருந்து கலைந்த பத்மாவதி நீண்ட பெருமூச்சினை விட்டு தன்னை சமன் செய்ய முயன்ற போது அன்று அச்சுத கேசவன் கடைசியாக சொல்லி சென்றது நிழலாடியது. மிக தாழ்ந்த மென்மையான குரலில் "Believe me Aunty next time I come in to this house you will welcome me as your Son in law"

அவருக்கு அந்த குரலும் அவன் கண்களில் தென்பட்ட வேட்டை பார்வையும் எதோ செய்தன. சொல்வதை செய்தே தீருவான் என்பதை போல், அத்துடன் அவரது அனுபவத்தில் அவன் தன் மகளை உண்மையாக நேசிக்கின்றான் என்பதும் புரிந்தது ஆனால் மகளின் மனமும் அதைவிட முக்கியம் இல்லையா, மனதை வருத்திவிட்டால் என்ன செய்வது பேசாமல் அவளை லண்டன் அனுப்பிவிடலாமா அங்கே அவரது தம்பியும் அவரது குடும்பமும் இருக்கிறது சிறிது நாளைக்கு அச்சுத கேசவன் கண்களில் படமால் இருப்பதே சன்விதாவுக்கு நல்லது.

ஆனால் பத்மாவதி ஒரு முக்கியமான கேள்வியினை சன்விதாவிடம் கேட்க மறந்துவிட்டிருந்தார் அது சன்விதாவுக்கு அச்சுத கேசவனை பற்றி எப்படி தெரியும் என்பது தான் அவரும் கேட்கவில்லை சன்விதாவும் கூறவில்லை.

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 04

சந்திரனில்லா அந்த அமாவாசை இரவின் வானத்தில் எங்களிடமும் வெளிச்சம் உள்ளது என நட்சத்திரங்கள் மினுமினுக்க அந்த வானத்தினை அப்படியே பிரதிபலித்தது அந்த சிறிய நீர் தடாகம். சில்லென்று வீசிய மெல்லிய காற்று உருவாக்கிய அலை அந்த வானமே அசைவது போல் தோன்றவே கைகளினை மார்புக்கு குறுக்காக கட்டியவாறே சற்று அண்ணாந்து வானத்தினை நோக்கினான் அச்சுத கேசவன்.  வானத்தினை போன்ற அவன் மனத்தினையும் அசைத்தது அவள் குரல், சன்விதா, முதல் முதலாக அசையாத அவன் மனதினை அசைத்து பார்த்த பெண்.

 

"நான் உங்களை கல்யாணம் செய்ய முடியாது இன்னொருத்தரை காதலிக்கிறான் Mr. அச்சுத கேசவன்..." மீண்டும் மீண்டும் சன்விதாவின் குரல் மனதில் எதிரொலித்தது.  AK ஒருத்தியை பைத்தியம் போல் காதலிக்கின்றேன் என்று சொன்னால் இன்னொருத்தனைக் காதலிப்பதாக சொல்வதற்கு அவளுக்கு எவ்வளவு தைரியம்.

 

சிறுவயதில் விபத்தொன்றில் அச்சுத கேசவனின் பெற்றோர் இறந்துவிட தனியாக நின்ற அக்காவையும் தம்பியையும் மனைவியை இழந்த மாமா கவனித்து காலாகாலத்தில் அக்காவுக்கு தன் மகனை திருமணமும் செய்து கொடுத்திருந்தார். ஆனால் அச்சுத கேசவன் பிடிவாதத்தின் மறுவடிவமாக வளர்ந்தான். அவன் ஒன்று நினைத்தால் சாதித்தே ஆகவேண்டும். நினைத்ததை முடிக்காமல் உறங்கவேமாட்டான். நூறு வீதம் தொழிலில் வெற்றியீட்டித் தந்த இந்த குணம் அவன் தனிப்பட்ட வாழ்வில் நூறு வீதம் சரிவினையே கொடுத்தது. 

 

மாமாவின் பின்னர் அக்கா சுபத்ரா கண்டித்து பார்த்தாள். தோளுக்கு மேல் வளர்ந்தவனை ஓரளவிற்கு மேல் அவளாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் விளையாட்டு பிள்ளையாகவே இருந்தான். (அதாங்க play boy).

 

அவளை சந்திக்கும் நாள்வரை அவனுக்கு அது தப்பாக தெரியவில்லை. அவனை கண்டிக்கும் போது அக்கா கேட்ட கேள்வி இப்போது அவன் காதில் எதிரொலித்தது "உன் எதிர்கால மனைவி நீ ராமனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால், அப்போது எதையும் மாற்ற முடியாது கண்ணா". அக்காவின் சொல்லினை ஒரு கணமாவது கேட்டிருந்தால்.... இனி வருத்தப்பட்டு எதுவும் ஆகப் போவதில்லை.

 

அதுவும் பெண்கள் விரும்பும் அழகன், பணம் மிடுக்கு என அத்தனை கொட்டிக் கிடக்க அவனறிந்த பெண்கள் அனைவரும் அவன் கண் பார்வைக்காக தவம் கிடந்தனர். ஆனால் அவள்... சன்விதா..... முதல் முதலாக அவனை மறுக்கும் பெண்.

 

கண்களினை ஒரு கணம் மூடி திறந்தவன் அவ்வளவு நேரம் மார்பு கூட்டினுள் அடைத்திருந்த காற்றினை வாய் வழியே வெளியே ஊதினான். 

 

அவன் விரும்பிய நேரம் விரும்பிய பெண்ணுடன் நாளினை கழித்தான் ஆனால் குடும்ப பெண்களினையும் தன்னிடம் பணிபுரியும் பெண்களினையும் தன் எல்லைக்கு வெளியே வைத்திருந்தான். ஆனால் எந்த பெண்ணையும் வற்புறுத்தியதும் இல்லை இது போல் பின்னே அலைந்தும் இல்லை.

 

அவளை முதன் முதலாக பார்த்த கணம் அவன் நியாபகத்தில் நிழலாட, முகத்தில் புன்னகை நிழலாடியது. அது அவள் நினைவுக்கு மட்டும் இருக்கும் ஒரு தனித்துவம் எப்போது அவளைப் பற்றி நினைத்தாலும் அவன் முகத்தில் புன்னகையின் சாயல். 

 

♥♥♥♥♥

 

கம்பெனி வேலை சம்பந்தமாக டெல்லி சென்றிருந்த போது டெல்லியில் உள்ள லஷ்மி கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்று சுபத்ரா ஒற்றைக்காலில் நிற்க, பத்தினி சொல் தட்டாத கணவனாய் அர்ஜுன் மனைவி பின்னே சென்றுவிட்டான். அக்காவும் அத்தானும் இழுத்த இழுப்புக்கு அச்சுதனும் கூடவே சென்றான்.   அதில் எல்லாம் நல்ல பிள்ளைதான்....

 

அக்காவையும் அத்தானையும் முன்னே அனுப்பிவிட்டு காரை பார்க் செய்துவிட்டு படியேறி வந்தவன் கண்களில் விழுந்தது அந்த  சுவாரஸ்யமான சம்பவம் இல்லை இல்லை குரல்.

 

அந்த குரலுக்கு சொந்தக்காரியின் முகம் மேல் இருந்த மணியை நோக்கி அண்ணாந்து இருந்தது. இடுப்பில் கைவைத்து "நீ எனக்கு எட்ட மாட்டியமே, அந்த குரங்கு கரன் சொல்றான், இன்று உன்னை அடிக்கல, என் பெயரை மாற்றி வைக்கிறான்" மணியுடன் சண்டைக்கு தயாராக பின் புறமாக சில அடிகள் எடுத்து வைக்க தொடங்கினாள் அந்த பெண்.

 

சிறுமுறுவலுடன் அவளுக்கும் கோவில் மணிக்கும் இடையேயான சண்டையை வேடிக்கை பார்த்த வண்ணம் ஏறியவன் மூளையில் அவள் செய்ய போகும் காரியத்தின் விபரீதம் உறைக்க படிகளினை வேகமாக கடந்தவனுக்கு அவளை தடுப்பது முடியாதது என தெளிவாக புரிய அவளை காப்பாற்ற முடியுமா என பார்த்தான். அவன் படி முடிந்து நிலத்தில் கால் வைக்கவும் அந்த பெண் ஓடி வந்து மணியை அடித்து பலன்ஸ் இன்றி முன்புறமாக விழவும் சரியாக இருந்தது.

 

பூமாலையாய் தன் மேல் விழுந்தவள்  இடையை சட்டென இறுக பற்றி தன்னுடன் தூக்கி இரண்டு சுற்று சுற்றி இருவரையும் பாலன்ஸ் செய்தவாறு நின்றவன் அவனின் சட்டையினை இறுக பிடித்தபடி நெஞ்சில் பதிந்து இருந்த அவள் முகத்தினை சற்றே ஒரு புறமாக குனிந்து பார்த்தான்.

 

வெற்றிடயை இறுக பற்றியிருந்த உள்ளங்கையின் கீழ் கூசி சிலிர்த்த அவளின் சருமம் அவன் நரம்புகளின் ஊடே  மின்சாரத்தை கடத்தி இரத்த நாளங்களில் பரவுவதினை உணர்ந்தவன் நம்ப முடியாது மீண்டும் அவள் முகத்தினை பார்த்தான். அவள் கைகள் மார்பில் இருக்க, குங்கும நிறத்தில் சிவந்திருந்த அந்த முகம் அவன் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிய எட்டாவது உலக அதிசயமாக அவளையே வைத்த கண் வாங்காது பார்திருந்தான் அச்சுதன்.

 

எத்தனை பெண்களிடம் பழகினான் என்ற கணக்கு அவனுக்கே தெரியாது. ஆனால் எந்த பெண்ணிடமும் இது போல் கூசி சிலிர்ப்பதை, ரத்த நாளங்களில் மின்சாரம் பாய்வதை  எல்லாம் உணர்ந்ததில்லை. இந்த புதிய உணர்வு அவனுக்கு பிடித்திருந்ததுடன் எப்போதும் வேண்டும் என பேராவல் அவனுள் எழுந்தது. அவளது சிவந்த முகம், தாறுமாறாக போய் வந்த மூச்சு, சிவந்த மூக்கு நுனி, துடித்த அதரங்கள், முன் உச்சியில் விழுந்த முடிகற்றை என அவள் முகத்தில் அவன் தொலைந்து, தன்னை மறந்து வேட்கை வழியும் கண்களால் அவளை கொள்ளையிட்டான்.

 

மான் குட்டியாய் துள்ளி மணியை அடித்து முன்னே விழும் போதுதான் தான் செய்த முட்டாள்தனம் புரிய இறுக கண்களினை முடிய கொண்ட அந்த பெண் கீழே விழவில்லை  என்பதுடன் யாரோ தனது இடையினை இறுக பற்றியிருக்க வெட்கத்திலும் இது வரை அறியாத புதிதான உணர்விலும் உடல் சிலிர்க்க முகம் சிவக்க நின்றவள், அதிர்விலிருந்து வெளியேறி அவன் அணைப்பிலிருந்து மெதுவே விலகினாள். அவனை தவிர அனைத்து இடத்தையும் பார்த்தவள் முகம் தக்காளியுடன் போட்டியிட்டது.

 

அவனை பொறுத்த மட்டில் பெண்கள் முகம் சிவப்பது தொட்டால் கூசி சிலிர்ப்பது எல்லாம் கடந்த நூற்றாண்டில் முடிந்த சமாசாரம். இதை வைத்து நண்பர்களுடன் கேலி செய்து சிரித்தும் இருக்கின்றான். ஆனால் உண்மை  கண் முன்னே நிற்க நடப்பது கனவாய் தோன்றியது.  அவளை காலம் முழுவதும் அப்படியே கைகளுக்குள் வைத்திருக்க  மனம் ஏங்கியது.

 

நிமிர்ந்து அவனை தன் பெரிய கருவிழிகளால் ஒரு கணம் அவனை நோக்க, அக்கணத்தில் அச்சுத கேசவன் இறந்து மீண்டும் பிறந்தான்.  ஓர் கையினால் தலையை அழுந்தக் கோதியவன், இந்த ஒரு கணதிற்காகவே இவ்வளவு நாளும் காத்திருந்தது போல் உணர்ந்தவனாய் சற்றே முன்புறமாக குனிந்து அவள் முத்தினை பார்க்க முயன்றான். அவளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க, பயந்தவாளய் ஓரடி பின்னே சென்றவள் மறுபடியும் நாடி நெஞ்சை தொடும் என்பது போல் தலையை குனிந்து கொண்டாள்.

 

சரண்டர் என்பது போல் கைகளினை உயர்த்தியவன் சற்றே கரகரத்த புன்னகை நிரம்பிய குரலில் "Hey.. hey..... relax" என்றவாறே ஜீன்ஸ் பொகெட்னுள் கைகளினை நுளைத்தவன் ஒருபுறம் நன்றாக சரிந்து குனிந்து அவள் முகத்தை பார்க்க முயற்சித்தான்.

 

"த... தா... தாங்யூ"

 

அது அவன் காதில் மெல்லிசையாய் ஒலிக்க ஆழ்ந்த குரலில் அவளை அழைத்தான்.

 

"Hi"

 

வெறுமே தலையை மட்டுமாய் அசைத்து வைத்தாள் பாவை.

 

ஆவலும் உற்சாகமும் நிரம்பிய முகத்துடன் அச்சுத கேசவன் மீண்டும் கேட்டான் "உன் பெயர் என்ன, பெண்ணே?"

 

அந்த இடத்தை விட்டு செல்ல திரும்பியவள், ஆழ்ந்த குரலில் வந்த அந்த கேள்விக்கு சிறிதே நடுங்கும் குரலில் பதிலளித்தவள் அங்கிருந்து திரும்பியும் பார்க்காமல் ஓடிவிட்டாள்.

 

"ச.. சச சன்விதா"

 

அவள் போன திசையை நோக்கி தடுப்பது போல் கை நீட்டியவன் அப்படியே மடக்கி பின் கழுத்தில் வைத்தவாறு சிறு பையனாய் தனக்கு தானே சிரித்தான்

 

அங்கிருந்து ஓடிய அந்த பெண்ணின் பின்னுருவத்தையே பார்த்துக் கொண்டிருந்த  அச்சுதனுக்கு தான் தனியாக சிரித்து கொண்டிருப்பது அவனுக்கே தெரியவில்லை. யாரோ தோளினை தொட திரும்பியவன் கண்களில் விழுந்தார்கள் அவனது அக்காவும் அத்தானும்.

 

"என்னாச்சு, உன்னை கூப்பிட்டுட்டே  இருக்கின்றோம், திரும்பி கூட பார்க்கல" அவன் பார்த்திருந்த திசையை ஆராய்ந்தவாறே கேட்டாள் அக்கா சுபத்ரா.

 

புன்னகையை உதட்டுக்குள் ஒளித்தவன் தலையசைத்தான் "ஒண்ணுமில்லக்கா, ஐ ஆம் பைன்".

 

♥♥♥♥♥

அன்றிரவு நண்பர்கள் பார்ட்டி ஒன்றிற்காக அழைக்க வழமை போல் சென்றிருந்தான். அது ஒரு வகையான பார்ட்டி, அங்கு வரும் அனைவரின் கருத்தும் ஒன்று மதுவும் மாதும்.

 

கையில் மது கின்னத்துடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தாலும் மதுவில் ஒரு துளிகூட உதடு தாண்டி செல்லவில்லை. பெண்களின் பக்கம் பார்வை மட்டுமல்ல மனமும் செல்லதிருக்க தனக்கு என்ன ஆச்சு என புரியாமல் விழித்து கொண்டிருந்த அச்சுதன் தன்பாட்டில் அமர்ந்து தன்னை சுற்றி நடப்பதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் நிலைமை புரியாமல் ஒரு பெண் வந்து அவன் மடியில் அமர்ந்ததுடன் கழுத்திலிருந்து கன்னம் வரை உதட்டால் கோடு இழுத்து தன் செய்கையால் அவனை வெளிப்படையாகவே அழைத்தாள். ஒரு கணம் தன் கைகளில் பூமாலையாய் ஏந்தியவளின் உடல் கூசி சிலிர்த்ததும் தன் உடலில் ஓடிய உணர்வும் நினைவில் வர அடுத்த கணம் சலீர் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது கிடந்தாள் அந்தப் பெண்.

 

அவன் கையிலிருந்த வைன் கிளாஸ் உடைந்து தரையெங்கும் சிவப்பு வண்ணமாக இருந்து.

 

திடீரென அவ்விடமே நிசப்தமானது. அனைவரும் அதிர்ந்து அவனையே பார்த்தவாறு இருக்க, பின் கழுத்தை கையினால் தேய்த்தவன் ஒரு கட்டு பணத்தை அந்த பெண்ணை நோக்கி வீசிவிட்டு அருகில் அதிர்ந்து நின்ற பேரர் கையில் இருந்த ட்ரேயில் இருந்த  இன்னொரு வைன் கிளாஸ்சினை எடுத்தவாறு வெளியே இருந்த நீச்சல் குளத்தின் அருகே சென்றான்.

 

அங்கிருந்த நீண்ட இருக்கையில்,  முழங்கால் மீது முழங்கையினையுன்றி ஒரு கையில் மது கோப்பையுடன் மறு கையை தொங்கப் போட்டபடி அமர்ந்து சற்று குனிந்து சிறு அலையாய் அசைந்த நீரினை பார்த்து கொண்டிருந்தாவனுக்கு புரியவேயில்லை ஏன் எந்த பெண்ணை தொட்டாலும் மரக்கட்டையை தொட்டதை போல் உணர்கின்றான் என்று ஏன்  அவளை தொட்ட போது வந்த உணர்வே வேண்டுமென்று மனம் ஏன் அடம் பிடிக்கிறது என்று.

 

பெண்கள் வெறுமனே பணத்திற்காக மட்டும் அவன் பின் சுற்றவில்லை, அவனது அழகு கம்பீரம் என்பதை தாண்டி ஆறுபத்து நான்கு கலைகளில் காம கலையிலும் வல்லவனாக இருந்தான்.

 

இப்போதெல்லாம் அவன் ஆண்மை அவளை தவிர வேறு யாருக்கும் பதிலளிக்க மறுப்பது ஏன் என புரியாமல் குழம்பினான் அந்த பிசினெஸ் டைகூன். பிஸினசில் எந்த பெரிய பிரச்சனையும் இமைக்கும் நொடியில் முடிக்கும் அவனால் இந்த குழப்பத்திற்கு தீர்வு காண முடியாத இயலாமை அவன் மீதே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

 

கையிலிருந்த மது கோப்பையை ஆத்திரத்துடன் நீச்சல் குளத்தில் எறிந்தவன் மதுவின் கோல்டன் பிரவுன் நிறம் நீரில் கலந்து மறைவதை ஆழ்ந்த யோசனையுடன் அசையாமல் பார்த்தபடி இருந்தவனுக்கு புரிந்தது இனி தான் என்னதான் முயற்சித்தாலும் வேறு பெண்ணை தொட தன்னால் முடியாது.

 

"உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளதினாலும் தொடமாட்டேன்....."

 

யாரோ உள்ளே தண்ணியை போட்டு விட்டு பாட மெலிதாக கசிந்த வார்தைகளில் இருந்த உண்மை புரியாமல் உள்ளங் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டான். ஒரு கணம் ஆழ காற்றை சுவாசித்தவன் பெருமூச்சுடன் அவள் பெயரையும் வெளியேற்றினான்

 

"சன்விதா..."

 

அணிந்திருந்த பிளாக் ஜாக்கெட் தோளில் அலட்சியமாக வீசப்பட்டிருக்க, வெள்ளை நிற போலோ நெக் டீஷிர்ட்டின் கைகளிணை முழங்கை வரை இழுத்து விட்டு கைக்களினை பண்ட் பாக்கெட்டினுள் விட்டவாறு ஆழ்ந்த சிந்தனையில் தலையை குனிந்தடி தனது SUV யினை நோக்கி நடந்தான் அச்சுத கேசவன்.

 

நிலவின் ஒளி போன்ற  மெல்லிய வெள்ளை நிற மின்விளக்கின் ஒளியில் அந்த ஹோட்டலின் அவெனுயுவில் அச்சுத கேசவன் நடந்து போவதை திருப்தி கலந்த புன்னகையுடன் பார்த்தது ஒரு ஜோடி கண்கள். அங்கிருந்த அனைவரும் முதல் தடவையாக அச்சுத கேசவன் பார்ட்டி வேண்டாம் என போவதற்கு சட்சியானர்கள்.

 

♥♥♥♥♥

 

அதன் பிறகு வந்த இரவுகளில் இது போன்ற பார்ட்டிகளினை சுத்தமாக தவிர்த்துவிட்டான். ஆனால் போகும் இடமெல்லாம் மனம் ரகசியமாய் அவளின் சாயையை தேடியது.

 

இரவுகளில் அவனது அறையின் அருகே அமைந்திருந்த குட்டி குளத்தின் அருகே நட்சத்திர வானத்தினை பார்த்தபடி உறக்கமின்றி நிற்பதை பார்த்த  அவனது அக்கா சுபத்ரா "இவன் திருந்திட்டனா இல்லை பொண்ணு கிடைக்கலயா?" என்று நினைத்தவள் "சீ..சீ.. என்ன பெண் நீ இப்படியா யோசிப்பாய், உன் நினைப்பை தூக்கி உடைப்பில் தான் போடணும் போடி" என்று தன்னை தானே திட்டியவள் "இல்லையே தூக்கமின்றி தவிக்கிறானே.... அப்ப என்னோவோ இருக்கு..."

 

"அப்படியே உன் மைண்ட் வாய்ஸ்சையும் போடுறது"

 

திடீரென காதருகே கேட்ட குரலில் துள்ளி திரும்ப கண்ணில் காதலுடனும் முகத்தில் கேலி புன்னகையுடனும் நின்றான் அவள் கணவன் அர்ஜுன்.

 

"அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு" என சிரித்தவள் கண்களில் கவலையை கண்டு சிறு முறுவலிலுடன் கேட்டான் "என்னம்மா..."

 

"இல்ல அர்ஜூ, கண்ணா ஒரு மாதத்திற்கு மேல ஒரு மாதிரி, இருக்கிறான் அதான்"

 

"கேட்டு பார்க்கிறது"

 

"கேட்டனே.... "

 

அதிர்ந்து போய் பார்த்தான் "என்னது கேட்டியா?"

 

அப்பாவியாய் தலையாட்டினாள். பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவன்  கேட்டான் "என்....ன சொன்...னான்".

 

"வேறு என்ன, ஐ ஆம் பைன்க்கா" அச்சுதன் போலவே சொல்லி காட்டியவள் முக்கை பிடித்து திருகியவன் கேட்டான் "நான் பேசிப் பார்க்கவா?"

 

சுபத்ரா வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாள். அச்சுதனின் பெண் தொடர்பு சம்பந்தமாக ஏற்கனவே இருவரும் பேசியதை பார்த்து சண்டை பிடிப்பர்களோ என பயந்து போய் கனவனுக்கு அன்புக் கட்டளை போட்டு விட்டாள் இனி இது சம்பந்தமாக இருவரும் பேசக் கூடாது என்று. உண்மையில் சண்டை போடும் அளவில் எல்லாம் அவர்கள் இல்லை ஆனால் இதுதான் சாக்கு என்று அச்சுதன் அப்படியே அதையே மெயின்டைன் செய்துவிட்டான்.

 

அர்ஜுன் கலகலவென சிரித்தான். அவனுக்கு ஓரளவு அச்சுதனின் பிரச்சனை புரிந்தே இருந்தது. அவனது பிரச்சனையை அக்காவிடம் சொல்ல முடியாது என்பதும் தெரிந்தே இருந்தது ஆனால் சுபத்ரா அவனிடம் கேட்டது தெரியாது. அன்று அந்த பார்ட்டியின் பின் வேலை விடயமாக வெளியூர் சென்றவன் இன்று காலை தான் வந்திருந்தான். அச்சுதனின் அதிர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவனின் உடல் குலுங்கியது. பின் அக்காவிடம் சொல்லவா முடியும் பெண்களை தொட முடியவில்லை என்று.

 

அவள் தோள்களில் இரு கைகளையும் போட்டு தன்னை நோக்கி திருப்பியவன் “என் மீது நம்பிக்கை இருக்கின்றது தானே” எனக் கேட்கவே  தயக்கமின்றி தலையாட்டினாள்.

 

“இதை பற்றி மேற்கொண்டு நீ எதுவும் பேச வேண்டாம், நானே கண்ணனுடன் பேசுகிறேன் சரியா?”

 

ஒரு கணம் உதட்டை கடித்தவள் சரி என தலையசைத்தவளின் இதழை ஆள்காட்டி விரலால் விடுவித்தான் "அது என் வேலை".

 

எது என்பது போல முழித்தவளின் இதழை கடிப்பது போல பாவ்ல செய்தபடி குனிய "ஐயோ இது ஹால்" என்றவாறு மார்பில் கைவைத்து தள்ளி விட்டு ஒடியவளை துரத்தியது அவனின் சிரிப்பொலி.

 

♥♥♥♥♥

வழமை போல் அறை அருகே இருந்த சிறிய குளத்திற்கு அருகே நின்றாவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தான் அச்சுத கேசவன். டெல்லி என்ன பத்தடிக்கு பத்தடி ஊரா சட்டென அவளை கண்டுபிடிக்க, இந்தியாவின் தலைநகர், வெறும் பெயரை மட்டும் வைத்து ஒரு பெண்ணை தேடுவதற்கு வைக்கோல் போரில் ஊசியை தேடிவிடலாம். ஒரு நாளைக்கு வந்து போவோரின் எண்ணிக்கையே தலை சுற்ற வைத்தது. அதையும் மீறி கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றால் அவனால் முடியாதது இல்லை. சரி தேடி பிடித்தாகிவிட்டது அதற்கு பின் என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவனை பைத்தியம் பிடிக்க வைத்தாள் அந்தப் பெண் சன்விதா.

 

"யார்... அந்த நிலவு....."  யாரோ அச்சுதனின் காதில் பாட திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தான்.

 

எப்போதும் போல் புன்னகையுடன் நின்றான் அவனது அத்தான் அர்ஜுன்.

 

"என்ன அத்தான் பாட்டு எல்லாம் பலமா இருக்கு அக்காவோட ஏதாவது சண்டையா"

 

"சண்டையா..... நான...., அதுவும் உன் அக்கவுடனா.... சே சேச்சே.."

 

"அதுதானே அக்கா தோப்புக்கரணம் என்று சொன்னாலே உடனே எண்ணிகொள் என்பீர்கள், இதுல சண்டை வேறா" அத்தானின் காலை வாரினான்.

 

"சரி சரி இன்னும் கொஞ்ச நாள் தானே பிழைச்சு போ மச்சான்" ஏதோ பாவம் போனால் போகட்டும் என்பது போல் பதிலளித்த அத்தானை குழப்பத்துடன் பார்த்தான்.

 

அவனைவிட குழம்பி போய் பார்த்தான் அவனது அத்தான், நாமதான் பிழையா நினச்சிட்டோமா இவன் காதலிக்கவில்லையா அப்ப வேற ஏதாவது பிரச்சனையா? எதுக்கும் நேரவே கேட்டுருவோம்.

 

"மச்சான்... கொஞ்ச நாளாவே நிறைய வித்தியாசம் நான் ஏதாவது உதவ முடியுமா?"

 

"....."

 

"அக்காவுக்கும் எனக்கும் சந்தோசம்தான், இருந்தாலும் வழமைக்கு விரோதமானது சந்தேகத்துக்குரியது"

 

"....."

 

"உனக்குள் ஏதோ ஒரு குழப்பம், எல்லாத்துக்கும் விடை நாமே கண்டு கொள்ள வேண்டும் என்று எந்த விதியும் இல்லை இன்னொருவரையும் கேட்கலாம்"

 

தலையசைத்த அச்சுத கேசவன் ஏதோ சொல்ல வர அதை இடைமறித்தான் அர்ஜூன் "பிளீஸ் இல்ல அத்தான் ஐம் பைன் என்று மட்டும் சொல்லாதே, இப்பெல்லாம் எவன் சொன்னாலும், அத கேட்டாலே கடுப்பாகுது".

 

வாய்விட்டே சிரித்தான் அச்சுத கேசவன் "இல்ல அத்தான், அப்படி சொல்லல ஆன எப்படி சொல்றது என்றும் தெரியல" பின் கழுத்தை கைகளால் அழுத்தியவன் ஒருவாறு வார்தைகளை தேடி பிடித்து கோர்த்து அவளை சந்தித்தது முதல் அத்தானிடம் சமர்ப்பித்தான்.

 

புரியாத குழந்தையாய் அத்தானின் முகம் பார்த்த அச்சுதன், அர்ஜூன்க்கு ஒரு குழந்தையாய் தோன்றினான். "ஹூறே........" என கத்தியவாறு அவனை அணைத்துக் கொண்டான் அர்ஜூன்.

 

"அத்தான்...." குழப்பத்துடன் அழைத்தான். அவனுக்கு புரியவில்லை தான் சொன்னதை கேட்டதும் அத்தானின் முகம் ஏன் மகிழ்ச்சியில் விகசித்தது ஏன் தன்னை கட்டிகொண்டு மகிழ்ச்சியில் குதிக்கின்றார் என்று.

 

அச்சுதனை தள்ளி நிறுத்திய அர்ஜுன் காற்றையக காற்றை வாய் வழியே ஊதியவன் "நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுடா" என்றவன் கேட்க தொடங்கினான்.

 

"வாட் எவர்" திடிரென அத்தானுக்கு என்ன நடந்தது என்பது புரியவேயில்லை அச்சுதனுக்கு.

 

"காலையில் எழும் போதும் படுக்க போகும் போதும் அவள் நினைவு வருகின்றதா?"

 

"ஹம்ம்...."

 

"எதையாவது சாதிக்கும் போது வெற்றி பெறும் போது அவள் நினைவு வருகின்றதா?"

 

"ஆம்...."

 

"அவள் நினைவில் வேறு பெண்களை தொட முடியவில்லையா....?"

 

முகம் சிவந்துவிட்டது அச்சுதனுக்கு "Yeah.."

 

"உன்னோட வேலைக்கு இடையூறாக இருக்கும் அவளின் நினைவே உனக்கு அமைதியும் தருகின்றது சரியா..."

 

"நம்பவே முடியாத ஒன்று ஆன அதுதான் உண்மை"

 

"அவளை பார்த்த அணைத்த கணம் எப்போதும் வேண்டுமென்று தோன்றுதா?"

 

"யெஸ்..."

 

"நீ விரும்புவது எல்லாம் அவளை பார்ப்பதும் அவளுடன் இருப்பதும்தான் சரியா?"

 

அச்சுதன் வெறுமே தலையசைத்தான்.

 

"டேய் மச்சான் ஒரு வழியா காதல் கடலில் தொபுகடீர் என்று விழுந்ததிட்டடா...."

 

கண்தட்டி விழித்த அச்சுதன் மென்மையாக கேட்டான் "காதல்..."

 

"காதலே தான்.... அந்த பெண்ணின் பெயர்...."

 

தன்னை மறந்த மயக்கத்தில் இருந்தவன் மென்மையாக உச்சரித்தான் அவள் பெயரை "சன்விதா...."

 

"அடடா பெயர் பொருத்தம் கூட நல்ல இருக்கே..."

 

"ஹம்... " என புரியாமல் பார்த்த அச்சுதனிடம் "சன்விதா லக்ஷ்மியின் பெயர், அர்த்தம்..."

 

"அமைதியானவள்...." எதிர்பாரா விதமாக அச்சுதனே சொன்னான். வேற லெவல் என்பது போல் கை விரித்து காட்டிய அர்ஜுன் "சரி... நான் அக்காவிடம் சொல்கின்றேன்" என்றவன் கேட்டான் "அந்த பெண் எங்கேயிருக்கின்றாள்"

 

இன்னும் மயக்கத்தில் இருந்த அச்சுதன் புன்னகையுடன் தலையசைத்தான் "தெரியாது... ஆனா சீக்கிரம் கண்டுபிடிச்சிருவன்"

 

சிரித்தவாறே தோளில் தட்டிவிட்டு சென்றான்.

 

அதே கிறக்கத்துடன் மெல்ல ஆங்கிலத்தில் தனக்குதானே கூறினான் "If it is love then I love this love"

 

Reply
Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 05

திடீரென அடித்த ஃபோன் அவனது நினைவுகளை கலைக்க எடுத்து காதில் வைத்தவன்

"எஸ் சரவணன்..."

அந்த பக்கம் அவன் சொன்னதை கேட்டு கண்களில் ஒரு கணம் பாறையின் கடினம் தென்பட "Do as I say...." அவ்வளவுதான் போனை கட் செய்தவன் மனம் மீண்டும் அவளின் நினைவுகளை சரணடைந்தது.

♥♥♥♥♥

அடுத்த நாள் காலை டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்தவாறு அவனது அக்கா சுபத்ரா பாட்டு பாடி கொண்டு இருந்தாள் "கொக்கு சைவ கொக்கு..... கொண்டை மீனை கண்டு...."

"அக்கா....." அச்சுதன் சிறிது வெட்கத்துடன் அழைத்தவன் அத்தானுக்கு அருகில் மேசையில் அமர்ந்து கொண்டான்

அவனை பிடித்து கொண்டாள்.

"யாருடா அந்த பெண், கண் இமைக்கும் நொடியில் இவ்வளவு மாற்றதை உன்னில் கொண்டு வந்தது. அவளை சந்திக்கணும், என்ன செய்கிறாள், எப்படி இருப்பாள், கருப்பா சிவப்பா பொது நிறமா, குண்டா ஒல்லியா, உன் உயரத்துக்கு இருப்பாளா, அழகா இருப்பாளோ, எப்படி இருந்தாலும் பிடிக்கும் ஆன எப்படி இருப்பாள் என்று தெரிய வேண்டுமே....  ஹ்ம்ம்... ஆ... ஃபோட்டோ இருக்கும்ல, காட்டு காட்டு...."

இருவரும் ஒரு கையினை கன்னத்தில் ஊன்றி மறு கையை மேசைக்கு குறுக்காக வைத்து  சிரிப்பை கன்னத்துக்குள் அடக்கியபடி பார்த்துக் கொண்டு இருந்தனர். அவள் ஒரு வழியாக கேட்டு முடிந்து என்று இருவரையும்  நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன என்ன ஆச்சு ஏன் பதில் சொல்லல" என கேட்டாள்.

"எங்க சொல்றது, பதில் சொல்றதுக்கு கொஞ்சமாவது டைம் கொடுக்கணும்ல" அவளது கணவன் அர்ஜுன் சமயம் பார்த்து காலை வாரினன்.

"பதிலை நானே சொல்லட்டுமா அல்லது அதையும் நீங்களே சொல்லிக் கொள்கிறீர்களா?" திருவிளையாடல் சிவாஜி பாணியில் கேட்டான் அச்சுத கேசவன்.

"இதுக்கு மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துடுங்க" என சிணுங்கியவள் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கிடையாது என்றவாறு எடுத்த கரண்டியை வைப்பது போல் நடித்தாள். அருகே எழும்பி வந்த அச்சுத கேசவன் அவளது தோளை தொட்டு "அக்கா.... அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்கு இன்னும் தெரியாது"

"நீ அவளை பார்த்து எவ்வளவு காலம்"

"சரியாக அறுபது நாட்கள்"

இப்போது கணவன் மனைவி இருவரும் சிரிப்பை உதடுக்குள் மறைத்தனர்.

"இன்னும் உன்னால கண்டுபிடிக்க முடியல,"

"அப்படியில்ல....,"

"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" திருப்பி கேட்டாள் சுபத்ரா.

"அப்படி இல்ல அக்கா அத்தான் சொல்றதுக்கு முதல் எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியல அதான்...." என்று தயங்கியவன் மேற்கொண்டு கூறினான் "இப்பதான் தெரிஞ்சிட்டே இன்னும் இரண்டு வாரத்தில் அவளை தூக்கிட்டு வந்து உங்கள் முன் நிறுத்துகின்றேன்" புன்னகையுடன் கூறினான்.

"ஏது தூக்கிட்டு வர்றியா...." அதிர்ந்து போய் பார்த்தாள் சுபத்ரா "கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாரேன் என்று சொல்லு" செல்ல கண்டிப்புடன் கூறினாள்.

"என்ன கல்யாணம்....." இப்போது அதிர்வது அவனது முறையாயிற்று.

அவ்வளவு நேரம் இருவர் முகத்திலும் இருந்த சந்தோசம் ஊசி குத்திய பாலுன் போல வெடித்துவிட்டது.

கணவனை நோக்கி கேட்டாள் "சுபத்ரா, நீங்கதானே சொன்னீங்க இவன் காதலிக்கிறான், கல்யாணம் செய்வான்." விட்டால் அழுதுவிடுவாள் போல இருந்தது அவள் குரல்.

"இல்லையே, நான் எப்பவும் அவளோட இருக்கனும் என்றுதானே..........." அச்சுதன் குழப்பத்துடன் அத்தானை பார்த்தான்.

வாய்க்குள் வைத்திருந்த நீரை விழுங்காமல் கன்னம் உப்பியபடி இருக்க இருவரையும் டென்னிஸ் மாட்ச் பார்ப்பது அங்கும் இங்குமாய் பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

"கல்யாணம் செய்யாமல் எப்பிடிடா எப்போதும் ஒன்றாக இருக்கிறது..." சுபத்ரா தலையை பிய்த்து கொள்ளாத குறையாக கேட்டாள்.

"கல்யாணத்துக்கும் அதுக்கும் என்ன அக்கா... சம்பந்தம்"

"அப்ப துரை என்ன ஐடியல இருக்கிறீங்க?"

"யூ நோ அக்கா, எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்ல" தோளை குலுக்கியவாறே "அவள் ok சொன்ன கையோட கூட்டிட்டு வந்துடுவேன்"

"கூட்டிட்டு வந்துவிடுவாயா.."

"ஹம்..."

"நீ என்னடா கூட்டிட்டு வாரது, நானே அவள் அம்மா அப்பாட்ட போய் பேசி நல்லா மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறான். மறந்தும் உன்னை பக்கதில விட கூடாது என்றும் சொல்றன்" உச்சகட்ட கடுப்பில் சுபத்ரா ‘டங்க்’ என்று கரண்டியை மேசையில் வைத்தாள்.

"அக்கா நோ...",

"என்னடா நைநை... "

"அவள் எப்போதும் என்னோட தான் இருக்கணும்" அதைச் சொன்ன அச்சுதனையின் கண்களில் அப்படி ஒரு தீவிரம்.

"கல்யாணம் பண்ணாமல் அந்தப் பெண் உன்னுடன் வருவாளா?" எரிச்சலுடன் கேட்டாள் சுபத்ரா.

"கல்யாணம் செய்து கொண்டால் என்னுடன் இருப்பாளா?" கண்களில் ஆவலுடன் கேட்டான் அச்சுதன்.

தம்பியின் அப்பாவித்தனத்தில் சுபத்திராவுக்கு சிரிப்பு வந்தது, புன்னகையுடன் கூறினாள் "நிச்சயமாக"

"சரி அப்படியானால் அவளையே கல்யாணம் செய்து கொள்கிறேன்" இன்று மழை பெய்யும் என்பது போல் இலகுவாக பதிலளித்தான்.

அவளைப் பார்த்து உதட்டை சுழித்தவாறு ராகமிழுத்தாள் "நீ சம்மதித்தால் மட்டும் போதுமா அச்சு கண்ணா அந்த பெண் சம்மதிக்க வேண்டாமா"

கர்வத்துடன் சொன்னான் அச்சுதன் "சம்மதிப்பாள் அக்கா சம்மதித்தே ஆக வேண்டும்" வெட்கத்தில் ரோஜாவாய் சிவந்த அவள் முகம் நினைவில் நிழலாட புன்னகை உதட்டில் உறவாடியது.

"எனக்கு அவள் சம்மதம் முக்கியம் எங்கு இருக்கிறாள் என்று கண்டுபிடிடா, நீ போய் பேசுவதற்கு முதல் நாங்கள் சென்று பேசுகின்றோம்" அவன் சிகையை கலைத்துவிட்டு சென்றாள் சுபத்ரா.

முகம் கொள்ளா புன்னகையுடன் தலையசைத்த அச்சுதன் போனை எடுத்து அனைத்து விடயங்களிலும் வலது கையாக இருக்கும் தன் நண்பன் அருணுக்கு அழைத்தான்.

♥♥♥♥♥

அச்சுதகேசவன் ஒன்றை நினைத்து அது நடக்காது என்ற பேச்சே இல்லை எண்ணி 48 மணித்தியாலத்தில் அவளது மொத்த விபரங்களும் அவனது கையில் இருந்தது.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் அவன் வசிக்கும் அவன் நகரில் மறுபுறத்தில் வசித்தாள். கைகளால் பின் கழுத்தை அழுத்தியவன் "நீ இவ்வளவு பக்கத்திலேயே இருக்கிறாய் நான் எப்படி உன்னை கண்டு கொள்ளாமல் விட்டேன்" தனக்குத்தானே பேசியவன் அவள் வழமையாக செல்லும் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்துக்குச் சென்றான்.

அந்த கோயிலின் கண்ணின் சந்நிதி முன்னே நின்றிருந்த சன்விதா “கண்ணா ப்ளீஸ் எப்படியாவது அவனை கண்ணில் காட்டேன். நான் சின்ன பொண்ணு இல்ல எங்க போய் தேடுவேன்” கண்ணனிடம் மனு போட்டுக் கொண்டிருந்தாள்.

ஏனோ அருகே செல்லாமல் தூரத்தில் இருந்தே அவளை ரசித்துக்  கொண்டிருந்தான் அச்சுதன். இன்று சாதாரண சுடிதார் அணிந்து வந்திருந்த அவன் தேவதை கண்களில் ஒரு மயக்கத்துடன் கண்ணனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

அவளை நெருங்கி பேச காலெடுக்க யாரோ அவன் தோளில் கைவைத்தனர். அவனது அந்த வகை பார்டி நண்பர்களில் ஒருவன் "என்ன மச்சான் புது ஆள் போல, இதுதான் பார்ட்டி எல்லாத்தையும் அவாய்ட் பண்ற ரீசனா நம்பர் இருந்தா எனக்கும் தா.. சூப்பர் ஹோம்லி பிகர், உனக்கு மட்டும் எங்கே இருந்து தான் மாட்டுதோ" அச்சுதனின் வயிற்றெரிச்சலை கொட்டியவாறு கோவிலை விட்டு வெளியே சென்றான்.

‘இவனெல்லாம் கோவில் வரல என்று யார் அழுதா....’ எரிச்சலுடன் நினைத்தவன் அவளருகில் செல்ல முன் ஒரு கணம் நிதானித்தவனின் புருவம் முடிச்சிட்டது. அவனுக்கு தான் எடுத்து வைத்திருக்கும் பெயரின் வீரியமும் ஓரளவு புரிந்தது.

அவள் கோவிலை விட்டு வெளியே செல்வதை தூணில் மறைவில் இருந்து வெளியே வந்து நின்று பார்த்தவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு தூணில் சாய்ந்து நின்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

♥♥♥♥♥

உதட்டை பிதுக்கியபடி அச்சுதனின் அறைக்கு வந்தாள் அவன் அக்கா சுபத்ரா, "அச்சு கண்ணா, எனக்கு அந்த பெண்ணை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, அவளும் அவ குண்டு கண்ணும் பாக்கவே சகிக்கல" என்றவாறு அவனது அருகில் இருந்த கதிரையில் 'தொப்' என அமர்ந்தாள்.

அச்சுதன் தன் முன் இருந்த லேப்டாப்பில் போய் கொண்டிருந்த கான்பரன்ஸ் மெம்பர்சை பார்த்து "ஐ வில் கால் யூ லேட்டர்" என்றவாறு லேப்டாப் ஸ்கிரீனை மூடியவனின் கண்கள் திடீரென கடினமாகி அக்காவை ஆழ்ந்து நோக்கின.

"என்ன நடந்தது அக்கா...  அவர்கள் அத்தானையோ உங்களையோ ஏதாவது மரியாதை குறைவாக நடத்தினார்களா?"   ஒவ்வொரு வார்த்தையிலும் ஆத்திரம் எதிரொலித்தது.

"எப்ப பார் கோபத்தை மூக்கு மேல வச்சிட்டு இரு." சுபத்ரா அவனது கவனத்தை திசை திருப்ப முயற்சிதாள்.

அச்சுதன் அழுத்தம் திருத்தமாக கேட்டான் "அக்கா... அங்கே என்ன நடந்தது"

"பிடிவாதம் பிடிக்காதே அச்சு, எனக்கு அந்தப் பெண்ணை பிடிக்கல, நம் ஸ்டேட்டஸ்க்கு பக்கத்தில கூட வர இயலாது" பிடிவாதமாகச் சொன்னாள். கை விரல்கள் முஷ்டியாக இறுக கேட்டான் "கடைசி தடவையாக கேட்கின்றேன் அங்கு என்ன நடந்தது"

"அது வந்து....." தயங்கினாள்.

அவன் அமைதியாக பார்த்து கொண்டிருந்தான். "அவங்க அந்த பெண் சன்விதாவை உனக்கு தர முடியாது என்று மறுத்துவிட்டார்கள்." தலையை மேலும் கீழுமாக ஆட்டியவன் "அந்த பெண்..,.." என இழுத்தான்.

"அந்த பொண்ணு அம்மா அப்பா முடிவுதான் தன்னுடையதும் என்று சொல்லிட்டாள்." சுபத்ராவின் நீண்ட விழியோரம் மெலிதாய் கண்ணீர் துளி விழவ வேண்டாமா என்று நின்றது.

அவன் அக்காவை பக்கவாட்டில் தோளோடு அணைத்தவனிடம் "ஒரு வழியா நீ கல்யாணத்துக்கு சம்மதித்தாய், ஆன அவள்......" மேற்கொண்டு தொடர முடியாமல் தொண்டை அடைத்துகொண்டது.

"ஷ்ஷ்.... அக்கா, இது முடிவு இல்ல" அவள் தலையை வருடினான்.

"இல்ல அச்சு, தனியா அவளோட பேசினேன், அவள் ஒரு வுமானஷைர கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாள்."

யாரோ இதயத்தை இறுக கிள்ளியது போல் ஒரு வலி, தன் வலியை திரையிட்டவன் அக்காவுக்கு ஆறுதல் அளித்தான். "எல்லாம் சரியாயிடும் இதற்கு எல்லாம் அழுவார்களா?" நிமிர்ந்து அவனை பார்த்த சுபத்ராவுக்கு அவன் கண்களில் தெரிந்த வேட்டை பார்வை இதயத்தை கிள்ளியது போல் இருந்தது.

"நீ இதை சரி செய்ய முடியுமா?" சந்தேகத்துடன் கேட்டவளுக்கு பதிலாக கண்மூடி தலையசைத்தவனிடம் மீண்டும் ஏதோ கேட்க வாயெடுக்க "ஐம் பைன்க்கா" என்றவனிடம் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தவள் அறை வாசலை நோக்கி நடந்தாள்.

நிலையருகில் நின்றவள் லேசாக திரும்பி கேட்டாள் "தம்பி நீ இத யாருக்கும் தீங்கு இல்லாமல் செய்வாய்தானே" அவன் பதிலளிக்கவில்லை தலையில் மட்டும் கண்டு கொள்ளா முடியாத அளவு ஒரு மெல்லிய அசைவு. அது ஆம் என்றும் இல்லாமல் இல்லை என்றும் இல்லாமல் இருந்தது.

தனது ஃபோன் ஸ்கிரீன்னை பார்த்தான் அதில் சன்விதா பலவகையான பூக்களை கைகளில் ஏந்தி தானும் ஒரு பூவாய் சிரித்து கொண்டிருந்தாள். கடந்த காலத்தை அவன் விட்டாலும் அது அவனை விடுவதாய் இல்லை. கைகளை பாக்கெட்டில் விட்டு அண்ணந்தவன் நீண்ட மூச்சினை வாய் வழியாக விட்டான்.

"வுமனைசர்...." அந்த வார்த்தைகளை மெதுவே முணுமுணுத்தவன் அசைவின்றி சில கணங்கள் அப்படியே நின்றான். மூன்று மாதங்களுக்கு முன் யாராவது வெறும் ஒரு வார்த்தை உயிரை கொல்லும் வலியை தரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டான் தன் அனைத்து சொத்துகளினையும் பந்தயமாக வைத்திருப்பான்.

"நீ பார்க்க ரோஜா பூ மாதிரி மென்மையாதான்டி இருக்கிறாய், ஆன குத்தும் மூள் நிறைந்த ரோஜா பூ"

குனிந்தவனின் கண்கள் பனித்திருந்தது.

Reply
Page 1 / 3
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”