உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 88
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 5 months ago

யாசகம் ♥ 43

மேலே நின்று அவர்களையே பார்த்து கொண்டிருந்த அச்சுதன் புருவத்தை உயர்த்தி போனில் ஆகாஷுக்கு அழைத்தான்.

ஆகாஷ் பதிலளிக்க முன்னர் அதை பறித்த சன்விதா “ஆகாஷிடம் ஒரு வேலை கொடுத்திருக்கின்றேன். அவன் இப்போ வர மாட்டான்” அவள் குரலில் அனலடிக்க ஒற்றை கண்ணை மூடி “அவுச்” என்றான். 

உள்ளே வந்தவள் கீழே இறங்கி வந்தவனை கணக்கே எடுக்காமல் அழகுபடுத்த வந்த பெண்ணிடம் சென்றுவிட்டாள். அவனோ அவள் கோபத்தை கணக்கெடுக்கமால் அவளை ரசிக்கும் பணியினை மட்டுமே மேற்கொண்டான். 

அழகு கலை நிபுணர் அவளை பார்த்துவிட்டு அவள் அளவுகளை குறித்து கொண்டவர், நகைகள் தலை அலங்காரத்திற்கு குறிப்பு எடுத்தார்.  கன்னத்தை தடவி பார்த்து “உங்கள் ஸ்கின் நன்றாகவே இருக்கு நாளைக்கு ஏர்லி மோர்னிங் ஓரு கிளீனிங் மட்டும் செய்திருவோம்” என்றார். 

“உங்கள் கல்யாண ஆடைகள்..... அதையும் பார்த்தால் நகைகளையும் ரெடி பண்ணலாம்” என்றவரை அச்சுதன் குரல் இடையிட்டது “அதை நான் பார்த்து கொள்கின்றேன், ரிசெப்ஷன்க்கு உள்ளதை மட்டும் பாருங்கள்” 

“எஸ் சார்” என்று பணிவாகவே கூறியவள் “உங்கள் எங்கேஜ்மென்ட் அன்ட் ரிசெப்டின் ஆடைகள்...” என்று கைகாட்ட அந்த பக்கம் முழுவதும் லெஹெங்கா தொங்கவிடப்பட்டிருந்தது. குறைந்த விலையே ஐந்து லட்சத்தை தாண்டும் போல் இருந்தது.  அவளோ எதை எடுக்க என்று தெரியாமல் விழித்தவள் திரும்பி அச்சுதனை பார்த்தாள். ஏனோ அவன் முகம் இறுக்கமாய் இருப்பது போல் தென்பட்டது. அன்று நகை கடையில் போன்று கோபமில்லை ஆனால் ஏதோ டென்ஷன்....

சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு போனை பார்த்து கொண்டிருந்தவன் உதட்டுக்குள் புன்னகைத்தான். அவளுக்கு உடை தேர்ந்தெடுப்பது எப்போதுமே அலர்ஜி. பொதுவாக மனாஸாவும் அம்மாவும் அவளுக்கு வேண்டியதை தெரிவு செய்து கொடுத்து விடுவார்கள்.     

“வேறு ஏதாவது வேலை....” அவன் அழகு கலை நிபுணரை பார்த்து கேட்க “இல்லை சார் டிரஸ் செலக்ட் பண்ண அதுக்கு ஏற்றால் போல் நகையும் பைனல் செய்திரலாம்” பவ்யமாக பதிலளித்தார். 

“சரி இதையும் நானே பார்த்து கொள்கின்றேன். நீங்கள் போகலாம்” உத்தரவிட்டான். 

அவர் சென்றதும் அருகே வந்தவன் “சரியான சோம்பறி... டிரஸ் எடுக்கவுமா சோம்பல்” செல்லமாய் திட்டினான். 

அவளோ அந்த ஆடைகளையே கவலையுடன் பார்த்து கொண்டிருந்தாள் “என்ன” என்றவனிடம் “இல்ல இதெல்லாம் குறைந்தது ஒரு பத்து கிலோ இருக்கும் போலயே” அவள் முகத்தை பாவமாய் வைத்து கொண்டு சொன்ன விதத்தில் உள்ளே அரித்து கொண்டிருந்த உணர்வையும் மீறி பக்கென்று சிரித்துவிட்டான்.

அவன் சிரிப்பையும் மீறி அவன் கண்ணில் இருந்த கவனமும் சஞ்சலமும் தெளிவாக விழ “என்ன..” என்றாள். 

அவள் கண்ணை பார்ப்பதை தவிர்த்து தலைக்கு மேல் பார்த்தவன் விரல் நுனியால் அவள் கேசம் ஒதுக்கினான். கரகரத்த குரலை செருமி சரி செய்தவன் “உன்னிடம் சற்று பேசவேண்டும்” என்றான். 

“சொல்லுங்கள்” அவன் அலைப்புறுதலை உணர்ந்து ஆதரவாய் அவன் புஜத்தில் கை வைத்தாள்.  

நீண்ட மூச்செடுத்து தன்னை நிதானித்தவன் “உன் முதல் காதலன் யார்?” 

அவன் கேட்ட விதத்தில் இருந்த வித்தியாசம் சட்டென புரிந்தது. இத்தனை நாள் போல் குறும்பு விளையாட்டுதனமின்றி சீரியஸாக... தவிப்புடன் ‘என்னாச்சு’ தனக்குள் யோசித்தவள் அவனையே கூர்ந்து பார்த்து “ஏன் திடிரென்று...”

போக்கெட்டினுள் கைவிட்டு நின்றவன் மனமோ ‘இத்தனை நாள் கேட்டும் பதில் சொல்லல சிலவேளை அக்காவிற்காக தான் திருமணத்திற்கு சம்மதித்தாளோ... அருணிடம் வேறு இன்னும் கோபமாய் இருக்கின்றாள், அது... வேறு யாருமாய் இருந்தால்...’ அந்த நினைவிலேயே உடல் எஃகாய் இறுகி விறைக்க அவன் இறுக்கத்தையம் உடல் விறைப்பையும் குழப்பத்துடன் பார்த்தாள். இத்தனை நாளும் என் வாயால் கேட்க வேண்டும் என்றுதானே... இல்லை நான்தான் தவறாக நினைத்து விட்டேனா. 

“நா நான் போயிறன்...” 

சன்விதாவுக்கு இன்னும் குழப்பம் மேலோங்க “எங்கே ஏன்.. ஏதாவது அவசர வேலையா” உள்ளே சென்ற குரலில் கேட்டாள். நாளை இரவு எங்கேஜ்மென்டை வைத்து கொண்டு போகின்றேன் என்றால்.  

“நீ....” அந்த வார்தைகளை உச்சரிக்கவே அவனுக்கு தொண்டையில் முள் சிக்கியது போல் வலித்தது “நீ காதலி...  காதலிச்சவனையே” தொண்டை அடைத்து கொள்ள செறுமி சமாளித்தான் “க... க... கல்...கல்யாணம் செய்து கொள் நான்.... நான் போ...” அவன் வாயில் வார்தைகள் சிக்கி தவிக்க.... அவனோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தான். இடது பக்க மார்பினை நீவி கொண்டான். 

அதுவரை இதழில் இருந்த புன்னகை விடைபெற அதிர்ந்து போய் பார்த்து கொண்டிருந்தாள் சன்விதா.

அச்சுதானா இது...

லேர்ன் டு லவ் மீ என்று மிரட்டியவனா இவன்...

முகத்தில் இத்தனை வேதனை....

விரிந்திருந்த கண்களில் குண்டு குண்டாய் கண்ணீர் வழிந்தது கூடவே கோபமும் வழிந்தது.

அதற்குள் ஆகாஷ் “அண்ணி...” என்றவாறு வர சட்டென திரும்பி கண்ணை துடைத்து  “உங்களுக்கு அது யாரென்று தெரிய வேண்டுமில்லையா?” கேட்டவளை முகத்தில் அடி வாங்கியவன் போல் பார்த்தான். ‘இல்லை அப்படி எதுவுமில்லை’ என்ற பதிலை அவளிடமிருந்து எதிர்பார்த்த மனம் வலியில் சுருண்டுவிட்டிருந்தது. 

“சரி சொல்கின்றேன் ஆனால் ஒரு நிபந்தனை” 

‘என்ன’ என்பதை போல் பார்த்தான். 

“ஆகாஷ் சொல்வதை செய்யுங்கள்” 

ஆகாஷோ இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். போகும் போது நல்லாதானே இருந்தார்கள் அதற்குள் என்னாச்சு. அச்சுதனோ மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஆகாஷை பார்க்க ஆகாஷ் தன்னுடன் அழைத்து வந்திருந்தவனை பார்த்து கண் காட்டினான். அச்சுதன் அவருடன் செல்ல தலையை தாங்கி கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

ஆகாஷ் திரும்பி வந்து பார்க்கும் வரை அப்படியே தான் இருந்தாள். “அண்ணி...” தயக்கத்துடன் அழைக்க ‘என்ன’ என்பது போல் நிமிர்ந்து பார்க்க ஆகாஷ் அழைத்து வந்த நபர் வாசலை தாண்டி சென்று கொண்டிருந்தார். 

வெற்றி என்பது போல் கட்டைவிரல் உயர்த்தி காட்டினான். புன்னகையுடன் தலையாட்டியவள் கொண்டு வந்த பாக்கிலிருந்து சில மருந்துகளை எடுத்து கொண்டு மேலே சென்றாள்.    

ஷவரிலிருந்து வெளியே வந்த அச்சுதன் முகம் இன்னும் தெளிவில்லாமல் யோசனையில் ஆழ்ந்திருக்க கட்டிலில் அவனது த்ரீ பீஸ் கோட் சூட். ஜீன்ஷை மட்டும் போட்டவன் தலையை துவட்ட துவாயை எடுக்கவும் அறைக்கதவு தட்டுப்படவே போய் திறந்தான். 

அவன் ஈரத்துடன் நிற்பதை பார்த்ததும் “எப்ப பார்த்தாலும் ஈரமாகவே நிற்பது உடம்ப என்னத்துக்கு ஆகும்” கடிந்தவாறே கையில் இருந்த டவலை வாங்கி நெஞ்சில் இருந்த காயத்தின் மீது இருந்த ஈரத்தை வலிக்காமல் ஒத்தி எடுத்தாள். அவனோ குழப்பம் நிறைந்த முகத்துடன் அவளையே பார்த்திருந்தான். அவன் தலையில் இருந்து சொட்டிய நீர் அவள் கன்னத்தில் விழவே நிமிர்ந்து பார்த்தவள் “ம்பச்....” என்று கட்டிலில் அமர்த்தி தலையையும் துவட்டிவிட்டாள். 

அவன் அவள் கையை பிடித்து ஏதோ சொல்ல வர “எதுவாய் இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் பொறுங்கள்” என்றாள். 

கையோடு கொண்டு வந்திருந்த மருந்தை எடுத்து அவன் காயங்களுக்கு போட்டுவிட்டாள். அதிகளவில் அனைத்தும் காய்ந்து இருந்தாலும் சிலது கயர் படிந்து இருந்தது. அவற்றையும் துடைத்து போட வலியில் முகம் சுளித்தான். “ஒழுங்காய் மருந்து போட்டிருந்தால் இந்நேரம் காயம் ஆறியிருக்கும்” அவனை திட்டியாவாறே மருந்தை போட்டு முடித்தாள். 

அச்சுதனுக்கோ மண்டை காய்ந்து போனது. 

ஒருவனை காதலிக்கிறேன் என்றாள்.

மணமுடிக்க கட்டாயபடுத்தினால் வீட்டில் உள்ள அனைத்து சாமான்களையும் போட்டு உடைத்தாள். 

பின் தன்னை பிரிய மனமின்றி தவித்தாள். 

அருணுடன் இன்னும் கோபமாக இருக்கின்றாள். 

இப்போதோ தன் காயத்தை பற்றி கவலை படுகிறாள். 

மருந்தை போட்டு முடித்து கடைசியாக கழுத்தடியில் பல் பதிந்திருந்த இடத்தை நுனி விரலால் தொட கண் மூடி அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தி கட்டிலில் இருந்து எழுந்தான். ‘என்ன’ என்பது போல் பார்க்க “உன்னிடம் சற்று பேச வேண்டும்” என்றான். 

அவன் கேட்க போவது புரிய புன்னகையுடனே தலையாட்டினாள். “அதற்கு முன் நான் ஒன்றை சொல்லிவிடுகிறேன்” கூறியவளை முறைக்க கூட முடியவில்லை அவனால். 

“நான் ஒருத்தரை டெல்லியில் சந்தித்தேன். அதுக்கு ஒரு இரண்டு மாசம் கழிச்சு டெல்லியில் மீண்டும் பார்த்தேன். வாழ்ந்தால் அது அவரோடு தான் என்று இதயம் சொல்லிச்சு” சொல்லி நிமிர்ந்து அவனை பார்க்க அவன் உடலின் ஒவ்வொரு தசை நாரிலும் இறுக்கம் பரவுவதை உணர்ந்து அவன் கையை கட்டி கொண்டவள் “அவன் எப்படி எப்போது என் இதயத்தில் வந்தான் என்று தெரியாது ஆனால் அவனின்றி நானில்லை” அவள் சொல்ல சொல்ல உதறி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தடுக்க முடியாமல் மூச்சு முட்டி போக ஜன்னலருகே சென்று கதவைத் திறந்தான். 

அவள் மனநிலையை தெளிவாக கூறுவது போல் காற்றில் தவழ்ந்தது அந்த கீதம். 

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா கிருஷ்ணா.....

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல

இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல் (4)

சில கணங்கள் கண் மூடி நின்று பாடலில் கரைந்தவள் “ அப்போ என்னால அவர் கூட பேச முடியல திரும்பவும் ஒரு ஆறு மாதம் கழித்து அவரை பார்த்தேன் ஆனால் எனக்குதான் அவரை அடையாளம் தெரியல ஏன்ன அன்று அவர் முகத்தை சரியா பார்க்க முடியல அதால அவரிடம் என் காதலை சொல்ல முடியல அவர் யாரென்று உங்களுக்கு தெரிய வேண்டாமா?” அருகே சென்று கேட்க வேண்டாம் என்று தலையசைத்தான். 

“ஆனால் நான் சொல்லியே ஆகவேண்டும் ஏனென்றால் உங்களை இது போல் இன்னொரு தரம் நான் பார்க்க கூடாதே” கையை பிடித்து தன்னோடு அழைத்து செல்ல கீ கொடுத்த பொம்மை போல நடந்தவன் என்னை விட்டுவிடேன் என்பது போல பார்த்தான். 

“நான் முதன் முதலாக பார்த்தது ஒரு விபத்தில்....” இதுவரை ஜீவனற்ற உடல் போல் நின்றிந்தவன் கண்களில் ஒளியெழ சட்டென திரும்பி அவளை பார்த்தான். அவன் கண்களை பார்த்தவாறே “இரண்டு மாதம் கழித்து கோவிலில் பார்த்தேன் அதை விட அவர் மேல் விழுந்தேன் என்று சொன்னால் சரியாக இருக்கும்” கண்ணில் மெல்லிய நீர் படலத்துடன் சிரிப்புடன் குருவியாய் தலை சாய்த்து சொன்னாள். 

அவள் புஜங்களை வலிக்க பிடித்த அச்சுதன் நம்ப முடியாமல் பார்க்க தலையாட்டி ஆமோதித்தாள். ஆர்வம் மேலிட அவள் கன்னத்தை பிடித்து கொண்டவன் சற்று தலையை சரித்து குழப்பத்துடன் பார்க்க “அன்று கோவிலில் அவர் முகம் பார்க்கவில்லை, ஆனால் அவர் என்னிடம் விட்டு சென்ற உணர்வு...” சில கணங்கள் அமைதியாய் கண்மூடி நின்றவள் மெதுவே கண் திறந்து அவன் கண்ணுடன் கண் கலந்தவள் “என்னோட முதலும் கடைசியுமான ஒரே ஒரு காதல் அவர் தான்” என்று கை காட்ட யாரை காட்டுகிறாள் என்று புருவம் நெரித்து  திரும்பிப் பார்த்தான். 

முன்னே இருந்த கண்ணாடியில் அவன் பிம்பம். அவன் கன்னத்தை பிடித்து தன் புறம் திருப்பி கூறினாள் “ஐ லவ் யூ கேசவ் அத்தான்” 

அவள் கன்னத்திலிருந்து கை எடுத்தவன் அவளிடமிருந்து விலகி அவளை பார்த்தவாறே அப்படியே பின்னோக்கி நடந்தான். 

மீதி பாடல் ஜன்னல் வழி கசிந்தது. 

உடலணிந்த ஆடை போல்

எனை அணிந்து கொள்வாயா

இனி நீ இனி நீ கண்ணா

தூங்காத என் கண்ணின்

துயிலுரித்த கண்ணன் தான்

இனி நீ இனி நீ

இது நேராமலே நான்

உன்னை பாராமலே நான்

இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்

என்று அதை எண்ணி

வீண் ஏக்கம் ஏங்காமலே

உன்னை மூச்சாகி வாழ்வானேடா


Reply
Posts: 88
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 5 months ago

யாசகம் ♥ 44

அவன் விலகி செல்ல அவளுக்கு ஏதோ போலாகிவிட்டது. கண்ணை விரித்து பார்த்தாள்.

சந்தோஷத்தில் பேச முடியவில்லை அவனால் அவளை பார்த்தவாறே பின்னோக்கி நகர்ந்தவன் காலில் கட்டில் தட்டுப்பட தளர்ந்து போய் அப்படியே அமர்ந்துவிட்டான். கால் முட்டியில் கை முட்டி ஊன்றி நம்ப முடியாமல் பார்த்திருந்தான்.   

எத்தனை நாள் காத்திருப்பு .... 

கோடி ருபாய் டீலை முடிக்கும் போது கூட இத்தனை சந்தோசம் இல்லை.

கண்களில் நீர் கோர்க்க கோர்த்திருந்த கைகளில் நாடி ஊன்றி சிரிப்புடன் அவளை பார்க்க போன உயிர் சன்விதாவிடம் திரும்பி வந்தது. சட்டென ஓடி வந்து அவன் முன் மண்டியிட்டவள் தோளில் அடித்தாள் “பயந்திட்டேன்”. அவனோ சிரிப்பு இன்னும் பெரிதாக குறுக்கே தலையசைத்து அவளையே பார்த்திருந்தான். 

குனிந்து அவன் கைகளுக்கிடையே நுழைந்தவள் அவன் கழுத்தை சுற்றி கையை போட்டுக் கொண்டு முகம் பார்த்தாள். அழகன் மனதினுள் கொஞ்சி கொண்டாள். மெதுவே அவள் தோளில் நெற்றியை வைத்தவன் ஆழ்ந்து சுவாசித்து மூச்சை சத்தமாக விட்டான். தீடிரென அவன் பலமெல்லாம் வடிந்து லேசாகி பறப்பது போல் இருந்தது. உடம்பு உள்ளதா என்றே தெரியாதது போல்.... அவன் நிலை புரிய கேசம் கோதி தோளில் முத்தமிட்டாள். 

நிமிர்ந்தவன் மறுத்து தலையசைத்து மார்பை ஒரு விரலால் தொட்டு காட்டினான். கன்னம் சிவக்க அவன் நெஞ்சில் ஒளிந்து கொண்டவள் அவன் கேட்டதை மறுக்கவில்லை. காதுக்கும் கண்ணுக்கும் இடையில் இதழ் பதித்தவன் குறும்பாய் அவள் காதுக்குள் கேட்டான் “அப்ப அன்று தெரிந்தே தான் கொடுத்தியா?” 

அன்று கோவிலில் அவன் மேல் விழும் போது அவளை அறியாமலே அவன் நெஞ்சில் தன் முத்திரையை இதழால் பதித்திருந்தால் அவனின் ரோஸ்.

“ம்கூம்” நெஞ்சக்குள் தலையாட்டி மறுத்தாள். 

குனிந்து அவள் முகத்தை பார்த்து “பின்....” என்றான். 

“வீடியோவில் பார்த்தேன்....” பாதி சத்தம் அவன் நெஞ்சுக்குள் அமுங்கிவிட்டது. 

“வீடியோவா...? ஒற்றை புருவம் உயர்த்தியவன் “இதையெல்லாமா டிவியில் போடுகின்றார்கள்” கேலியாக கேட்டான். 

“ச்சு அதில்லை.....” அவன் மார்பின் உரோமங்களை விரலில் சுற்றியவாறே சொன்னாள் “கோவில் சிசிடிவி....” அப்போது தான் கவனித்தான் அவள் தரையில் முட்டி போட்டு இருப்பதை  சட்டென தூக்கி கட்டிலில் இருத்த பயத்தில் கால்களை தொங்க போட்டவாறே அப்படியே பின்னால் சரிந்து படுத்துவிட்டிருந்தாள். அவளருகே தானும் ஒரு புறம் சரிந்து ரங்கநாதர் போல் ஒற்றை கையில் தலையை தாங்கி படுத்தவன் விசாரித்தான் “அதை எப்போது எடுத்தாய்? அப்படியானால் உனக்கு கோவிலில் சந்தித்தது நான்தான் என்று தெரியாதா?” 

குழந்தையாய் இல்லை தலையாட்டியவள் “அன்று நீங்கள் அடித்த கிஸ்ஸில் உங்கள் முகம் பார்க்கல....” 

“ம்கூம்..” அவன் கண்களில் மிளிர்ந்த குறும்பில் ஒரு கையால் அவன் கண்களை மூடி “இப்படி பார்க்காதீங்க..” சிணுங்கினாள். அவள் கையை எடுத்து உள்ளங்கையில் இதழ் பதித்தவன் “பின் எப்படி தெரியும்” ஆர்வமாய் கேட்டான். 

“ஆரம்பத்திலேயே உங்கள் கண்ணை எங்கோ பார்த்தது போல் ஒரு எண்ணம் வந்து கொண்டே இருந்தது. பிறகு நீங்க மதுரை போறேன்னு சொல்லி போகும் போதே ஒரே குழப்பம்.... இருவரையும் காதலிக்கின்றேனா? இல்லையா? இல்லை உங்களை அருகே பார்த்து மனசு தடுமாறுதா? ஒரே குழப்பமாய் இருந்துச்சு. அன்று உங்களுக்கு வெட்டு பட்ட நேரம் எனக்கு உங்களுக்கு ஆபத்து என்று உள்மனதில் ஏதோ....” என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் இதைப்பற்றி  யாருமே அவனிடம் சொல்லவில்லை. அவள் தனக்கு காயம் பட்டதை அவள் உணர்ந்தாள் என்று யாராவது சொல்லி இருந்ததால் நிச்சயமாக பலவந்தமாகவேனும் அவளை கல்யாணம் செய்திருப்பான். ஆனாலும் இதுவும் நன்மைக்குதான் என நினைத்தவன் ஆர்வத்துடன் அவளை பார்க்க அவள் தொடர்ந்தாள். 

“ஜி....” ஜிஜு என்று அழைக்க எடுத்துவிட்டு பின் மாற்றி “உங்கள் நண்பர் உடனடியாக மதுரை வந்து அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் உரையாடும் போது தற்செயலாக கூறினார். உங்களுக்கு வெட்டுப்பட்டு.... எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணனிடம் சென்று தியானத்தில் அமர்ந்து விட்டேன். அங்கு நான் உங்களை பார்த்தேன்” என்றவள்  கண்களை அகல விழித்து அவன்  முகத்தையே பார்த்தாள். 

“என்னை பார்த்தாயா....? எனக்கும் அது போல் ஒரு தோற்றம் அல்லது கனவு அல்லது நிஜமா எதுவென்றே தெரியவில்லை” குழப்பமாக கூறினான் அச்சுதன். “சுற்றிலும் இருட்டில் நின்று கொண்டிருந்த போது ஒளியிலிருந்து நீ வந்து வரச் சொல்லி கேட்டாய் பின் ஜோதியில் கலந்து விட நான் உன் பின்னே ஓடி வந்தேன்”

உலகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் லாஜிக் மூலமாக தீர்வு காண முடியாது.  சிலவேளைகளில் நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வதே நன்று. அது போல் ஒரு மனநிலையில் தான் அச்சுதனும் சன்விதாவும் இருந்தார்கள். 

“அதன் பிறகு நான் நன்றாக களைத்து விட்டேன். ஃபோனில் நீங்கள் எழுந்து விட்டீர்கள் என்று தகவல் வர அப்படியே மயங்கி விட்டேன் என்று நினைக்கின்றேன்” என்றாள் சன்விதா.

சில கணங்கள் மௌனத்தில் கழிய “நீங்கள் மதுரையிலிருந்து எப்போது வருவீர்கள் என்று பார்த்து கொண்டே இருந்தேன். உங்களை பார்க்கும் வரை மனம் அமைதியின்றி இருந்தது அப்போதும் எனக்கு குழப்பம் தான் எப்படி இருவரையும் ஒன்று போல் காதலிக்க முடியும் என்ன மாதிரி பெண் நான் என்று.....” சற்று தடுமாற சட்டென எழுந்து அமர்ந்தான் அச்சுதன்.

ஏற்கனவே குழப்பத்தில்  இருந்தவளை இன்னும் தடுமாற வைத்தது அவன் பேச்சுதானே. 

அவன் எழுந்ததை பார்த்து அவளும் எழுந்த அமர்ந்த தொடர்ந்தாள் “ஆனா நீங்க வருத்தப்படுறதையும் என்னால சகிக்க முடியல அதான் யாரென்றே தெரியாத ஒருத்தனுக்காக உங்களை கஷ்டப்படுத்துவதா என்று அம்மாவிடம் உங்களை கல்யாணம் செய்ய அனுமதி கேட்டேன் அப்புறம் நீங்கள் தான் வேண்டுமென்று உங்களிடம் வந்தேன்” அவன் முகத்திலிருந்து பார்வையை கீழே விலக்கி நிலம் நோக்கினாள். 

“நான் ரெம்ப கூடாத பெண் இல்லையா?” முகம் கன்ற கேட்க “ஷ்...ஷ்...” சட்டென அச்சுதன் அவள் உதடுகளில் விரல் வைத்து அவள் பேச்சை தடுத்தான். “ஐயாம் சாரி.... அன்றைக்கு நீ கிடைக்க மாட்டியோ என்ற பயத்தில்.... சாரி” கண்கள் அவளிடம் இறைஞ்சியது.

“உன்னை அறியாமலே என்னை காதலித்ததால்தான் நீ அன்று என்னிடம் வந்து காதலை சொல்ல துணிந்தாய் இல்லாவிட்டால் யாராய் இருந்தாலும் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டாய் எனக்கு தெரியும்” கண்களை நேராக நோக்கி நம்பிக்கையுடன் கூறியதில் மெலிதாய் புன்னகைத்தவள் தலையாட்டினாள். 

நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் “அன்றே அம்மாவிடம் சொல்லிவிட்டாயா?” ஆச்சரியத்துடன் கேட்டான்

அதை தலையாட்டி ஆமொதித்தவள் “அதுக்கு பிறகு எனக்கு தெளிவு வந்தே ஆகணும் போல் ஒரு வெறி, அன்று கடற்கரையிலிருந்து வீட்டிற்கு போகவே அக்கா, உங்களை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்ய சொல்லி மிரட்டினாள்” சொல்லி கொண்டே வர தூக்கிவாரி போட கேட்டான் “எது”

அவன் அதிர்ச்சியில் சிரித்தவள் “நான் உலகமே இடிந்து போன மாதிரி இருந்தேனா... அது அவளுக்கு பிடிக்கவில்லை. இந்த லட்சனத்தில் நான் இங்க இருந்து கொண்டே யோசிக்கின்றேன் என்று அழுது வைத்தேன் என்னை கையை காலை கட்டியாவது யாருக்காவது கல்யாணம் பண்ணி வைத்திருவார்கள் அதான் சந்தும் வர அதை பயன்படுத்தி கொண்டு டெல்லி ஓடிட்டான்” என்றவளையே கண் வெட்டாது புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான். 

இத்தனை நாள் தவற விட்ட அந்த புன்னகையை பார்த்து மயங்கி போய் நின்றவள் “என்ன...” என்றாள். 

“இல்ல நீதான் என்னை காதலிக்கவே இல்லையே பின் ஏன் கல்யாணத்தை நினைத்து பயந்தாய்?” அவன் கேட்க விழித்தாள் “அப்படியில்ல இருவரையும்....” வாய்க்குள் முனகினாள்.

சற்று நேரம் விட்டு பார்த்தவன் தலையை பிடித்து ஆட்டினான் “பின் எப்படி தெளிந்தது?”

“அதுவா நான் அமர்நாத் போனேன்ல அப்ப தெளிவாயிட்டேன், அங்கே போய் வந்த பிறகு ஸ்ரீநகர் டால் லேக் பக்கத்தில இருந்து யோசித்தேன் எல்லாம் தெளிவாகியது. அதைதான் தெளிவு பெற மலைக்கு போ என்று சொல்கிறார்களே. கோவிலில் பார்த்த நபர், டெல்லி விபத்து என் பின்னாலேயே சுற்றிய ரோமியோ எல்லாம் ஒரே ஆள்தான் என்று புரிஞ்சுது. சந்தோசத்தில் யாரென்றே தெரியாமல் உங்கள் கையை பிடித்து சுற்றி விட்டு நீங்க தான் என்று தெரிந்து திருப்பி பார்க்க முன் நீங்கள் காணாமல்  போயாச்சு” உதட்டை சுழித்தாள். 

“உனக்கு தெரியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டான். மண்டையை உருட்டியவள் “என்னை யாரென்று நினைத்தீர்கள்” இல்லாத காலரை இழுத்துவிட்டாள். 

அவள் நெற்றியில் விளையாட்டாய் சுண்டியவன் “அமர்நாத்தில் இருந்தே உன் பின்னால் வந்தேன் தெரியுமா?” நெற்றியை தடவி அசடு வழிய சிரித்தாள்.

“அது நான் யோசனையில் இருந்தேன்” மெலிதாய் சிணுங்கினாள்.

சிணுங்கியவளையே கண் இமைக்காமல் பார்த்தவன் அப்படியே மல்லாந்து படுத்தான். அச்சுதன் முகம் தெளிவின்றி இருக்க அவன் அருகே முழங்காலை கட்டிக் கொண்டு அருகே அமர்ந்தவள் “என்னாச்சு” வினவினாள். 

“உன்னிடம் பேச வேண்டும்” இறுகி போய் ஒலித்தது அவன் குரல்.

“இன்னுமா...?” ஆச்சரியத்துடன் கேட்க “என் கடந்த காலம் பற்றியது” என்றவனை சற்று இறுக்கத்துடன் பார்த்தவள் “சொல்லுங்கள்” என்றாள்.  அவனுக்கும் புரிந்தது அவளுக்கு பிரியமில்லத ஒன்றை பற்றி பேசுகின்றோம் என்று ஆனால் சிலது சொல்லியே ஆகவேண்டும். தலை குனிந்து உதட்டை கடித்தபடி இருந்தவளை பார்த்து உதடு பிரியாமல் புன்னகைத்தான் அச்சுதன்.

“பெண்கள் தொடர்பான பழக்கத்தைச் பற்றி இல்லை. சிறிது அதுவும் தான் ஆனால் இது வேறு” என்றான். ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் சன்விதா.

♥♥♥♥♥

அருண் அர்ஜுன் இருவரும் ஒரு வித பதட்டத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்தனர். அச்சுதன் அவர்களிடம் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் அவன் செயல்களில் இருந்தே இன்று அனைத்தையும் சன்விதாவிடம் சொல்லிவிடுவான் என்று புரிந்திருந்தது. சன்விதா என்ன முடிவு எடுப்பாளோ என்ற பதட்டத்தில் சன்விதாவின் வீட்டில் காத்திருந்தனர்.


Reply
Posts: 88
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 5 months ago

யாசகம் ♥ 45

தலையின் கீழ் கை கோர்த்து கண்மூடி ஒரு கால் மடித்து படுத்திருந்தவன்   “என் அம்மா அப்பா சிறு வயதிலேயே  இறந்து விட்டனர் அனைவரும் அதை ஒரு விபத்து என்று நினைத்தனர் ஆனால் திட்டமிடப்பட்ட கொலை. அப்பா இறந்ததும் சித்தப்பா வீட்டு பொறுப்பை எடுக்கிறேன் என்ற பெயரில் என்னை போதை மருந்துக்கு அடிமை ஆக்கிவிட்டார். போதை மருந்தை ஏற்றி கொள்ளாவிட்டால்  அக்காவை பம்பாய்ல உள்ள ரெட்லைட் ஏரியாவில் விற்று விடுவேன் என்று மிரட்டினார். அப்பா இறந்து பிசினஸ் கொஞ்சம் டவுன் ஆக போய்க் கொண்டிருந்தது வீட்டிலும் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை, நான் வேறு சிறுவன் வேறு வழி இன்றி போதை மருந்துகளை எடுத்துக் கொள்ள தொடங்கினேன்”.

“அப்போது எனக்கு பதினாறு வயது. என் நடவடிக்கைகளில் மாற்றங்களை பார்த்த பள்ளித் தோழனான அருண் என்னை அந்த பழக்கத்திலிருந்து மீட்க முயற்சி செய்தான்”.

“ஒரு நாள் அவனிடம் பேசும் போது நானே விரும்பினாலும் இதிலிருந்து மீள முடியாத நிலைமையை எடுத்துச் சொன்னேன். அருண்தான் என் மாமாவிற்கு தொடர்பு கொண்டு என் நிலையை எடுத்துக் கூறினான். அதன் பின் மாமா, என் சித்தப்பா கடம்பவனத்தின் மனைவியின் அண்ணா வீட்டின் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு கடம்பவனத்தை வெளியேற்றி என்னையும் அக்காவையும் காப்பாற்றினார். அவரது மகன் தான் அர்ஜுன் அத்தான். ஆனால் கொஞ்சம் காலம் கடந்து விட்டிருந்தது. நான் அந்த பழக்கத்திற்கு அடிமை ஆக தொடங்கியிருந்தேன்” நீண்ட பெருமூச்சை வெளியேற்ற அவனையே முகம் வெளிற பார்கததிருந்தாள் சன்விதா.

அவன் தொடர்ந்தான் “அக்கா என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தாள் இந்த பழக்கத்தை தொடர கூடாது என்று நானும் விட்டுவிடுவதாக கூறி விட்டேன். ஆனால் போதை மருந்து எடுக்கவில்லை என்றால் என்னை நானே காயப்படுத்தி கொண்டேன். மறுபடியும் அந்த பழக்கத்திற்கு செல்ல எனக்கும் மனமில்லை. கவுன்சிலிங் எல்லாம் போனாலும் அந்த நேரத்தில் என்னை அடக்குவது பெரும்பாடக இருந்தது.” கண் மூடி இருந்தாலும் அந்த நேரத்து வேதனை முகத்தில் பிரதிபலிக்க உடலில் மெல்லிய நடுக்கம் ஓடியது.

அவனை நெருங்கி அமர்ந்து தலையை கோதியவள் “ஷ்ஷ்.... வேண்டாம் உங்கள் கடந்த காலத்தில் என்ன நடந்து இருந்தாலும் அது கடந்த காலம் விட்டு விடுங்கள்” என்றவள் மடியில் தலை வைத்து வயிற்றில் அழுந்த முகம் புதைத்தவன் இடையை இறுக கட்டிக் கொண்டான்.

முகத்தை எடுக்கமால் அப்படியே மீதி கதையை தொடர்ந்தான். “நான் அப்படி காயப்படுத்தி கொள்வதை பார்த்த அருண் மருத்துவரிடம் பேச எதிலாவது முனைப்பாக எண்ணத்தை செலுத்தினால், அந்த நேரங்களில் மூளையை வேறு விடயங்களில் ஈடுபடுத்தினால் குறையக்கூடும் என்றார். பதினேழு வயதிலேயே தொழிலை கையில் எடுத்தேன். இருந்தும் சில சமயங்களில் என்னை கட்டுப்படுத்த முடியாது போக ஒரு நாள் பெண்கள் பழக்கம் ஏற்பட்டது.” அவள் மடியிலிருந்து சற்று விலகி அவள் முகம் பார்த்தவன் “இதற்காக நீ அருணை வெறுக்க கூடாது. அந்த நேரம் அவன் இல்லையென்றால் நான் உயிரோடு இருந்திருப்பேனா என்றே தெரியாது. ஏனென்றால் அது போன்ற சமயங்களில் அவ்வளவு வயலன்ட் ஆக நடந்து கொள்வேன். எனது நிலையை மருத்துவரிடம் கூற இந்த மாதிரி நிலையில் யாரையாவது திருமணம் செய்தால் சரி வரக்கூடும் என்றார். என்னவென்றால் கணவன் மனைவி உறவின் போது மூளையில் வெளிப்படும் dopamine, endorphins and oxytocin என்ற கெமிக்கல்ஸ் மூளையை ஃபீல் குட் என்ற நிலையில் வைத்திருக்கும். அது என்னை நானே காயப்படுத்தி கொள்ளும் தன்மையை குறைக்க கூடும் முயற்சி செய்து பாருங்கள் என்றார். ஆனால் நான்தான் திருமணத்திற்கு மறுத்துவிட்டேன். என்னுடைய நிலையே சரியாக கணிக்க முடியாத போது இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் இதற்குள் இழுத்து விடுவதா என்று” 

அவன் மார்பிலிருந்த தழும்புகளை பார்த்தவள் யோசனை அது பாட்டில் ஓட கை மெதுவே தழும்புகளை வருடிவிட்டது. அப்படியானால் அவை புதிதாக வந்தவை இல்லையா? பதினாறு வருடம் கழிந்தும் தழும்புகள் இருக்கின்றன என்றால் காயம் எப்படி இருந்திருக்கும்... கண்கள் நீரில் நிறைய சில துளிகள் அவன் முகத்தில் விழுந்தது. அவள் கண்களையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு கண்ணை மூடிக் கொண்டு தொடர்ந்தான். அவள் கண்ணை பார்த்து சொல்லும் தைரியம் அவனிடமில்லை.

“அந்த மாதிரி எந்த நேரமும் வராது ஆனா வரும் போது என்னை கட்டுப்படுத்துவது பிரம்ம பிரயத்தனமாய் இருக்கும். அப்போது எனக்கு பதினெட்டு வயது அன்றும் இதுபோல் திடிரென்று போதை வேண்டும் போல் இருக்கவே தாங்க முடியாமல் கையை வெட்டிக் கொண்டேன்.” ஏங்கி போய் வாயில் கைவைத்தாள் சன்விதா. 

கண் திறக்கமாலே அவளை உணர்ந்தவன் மறுத்து தலையசைத்தான் “தற்கொலை எண்ணம் எல்லாம் இல்லை. மைண்ட் டிஸ்ரக்ட் பண்ண தான் வெட்டினேன். அந்த வலி என்னை ஒரு நிலைக்கு கொண்டு வரும். அதுக்கு தான் ஆனா அன்று ஆழமாய் வெட்டு பட்டுட்டு. நல்ல நேரமோ கெட்ட நேரமோ அருண் என்னை தேடி வந்திருந்தான். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க அன்று ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பிவிட்டேன். ஆனா அருண் பயந்துவிட்டான். திரும்ப இன்னொரு தரம் அப்படி இருக்கும் போது எனக்கு கொஞ்சம் மயக்க மருந்து கொடுத்து.... ஒரு பெண்....” அதுவரை ஒரு தடையுமின்றி இலகுவாக கூறி வந்தவன் மேற் கொண்டு சொல்ல முடியாமல் தடுமாறினான்.

அவள் மடியில் தலை வைத்திருந்தவன் கைகளை முஷ்டியாக்கி உதட்டை கடித்து அவதிபடவே அவன் கேசம் கோதி நெற்றியில் முத்தமிட்டு விலக சட்டென கண் திறந்து பார்த்தான். அவள் விரல்கள் கேசத்தினூடே அலைய மென்மையாக கூறினாள் “கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும். நீங்களே சொன்னது போல உங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டேன்” என்றவளிடம் நெற்றியை தொட்டு காட்ட மீண்டும் முத்தமிட்டு அவன் நெற்றியில் கன்னம் பதித்து கூறினாள் “உங்களை நீங்களே வருத்தி கொள்ளாதீர்கள்”

“என்னுடைய பெண்கள்..... அதுதான் ஆரம்பம் ஆனால் மருத்துவர் சொன்னது போல் என்னிடம் அந்த போதை மருந்துக்கான தவிப்பும் எண்ணமும் மெதுவே குறைய ஆரம்பித்தது. முன்பெல்லாம் ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை என்று இருந்தது மெதுவே குறைந்து வருடத்தில் சில முறை என்பது போல் மாறி இருந்தது. ஐந்து வருடத்தில் முற்றாக குணமாகிவிட்டேன். ஆனால் பெண் பழக்கத்தை முற்றாக விடவில்லை.” முகம் கன்ற கூறினான். 

“உண்மையில் அதன் பின் அதிக அளவில் பெண்கள் பழக்கம் வைத்து கொள்ளவில்லை. ஆனால் ஆரம்பத்தில் மாதத்தில் பல தடவை என்று..... பெயர் கெட்டு விட்டது. அந்த பழக்கமே இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தரம்.... அந்த நேரம் ஏன் விட வேண்டும் ஒரு எண்ணம் அதோடு மாடலிங் துறையில் இருந்த சில பெண்களின் மூலம் பரப்பப்பட்ட வதந்தி...” சிறிது நேரம் மௌனத்தில் கரைய “எனக்கும் திருமணத்தில் நாட்டம் போய் விட்டது. நான் இன்னொரு பெண்ணை மணந்தால் அது அவளுக்கு செய்யும் துரோகம் என்ற ஒரு உணர்வு. அதற்காக உனக்கு துரோகம் இல்லையா என்று கேட்காதே.... நீ இல்லாமல் என்னால் எதுவும் முடியவில்லை. இந்த ஒரு மாதத்தில் நான் உணர்ந்தது. எப்படி எப்போது என்று தெரியவில்லை. ஆனால் என் வாழ்வின் ஜீவ சக்தியாகி போனாய். உன்னை சந்திப்பேன் என்று தெரிந்திருந்தால் என்ன வேதனை என்றாலும் இந்த பழக்கத்தை பழகியிருக்கவே மாட்டேன். அதிலும் கடந்த ஒரு வருடத்தில் உடலாலும் சரி மனதாலும் சரி எந்த பெண்ணையும் தீண்ட என்ன வேறு விதமாக நினைக்க கூட முடியவில்லை” அனைத்தையும் சொல்லி முடித்தவன் கண் திறந்து அவள் முகம் பார்த்தான். அவள் முகத்தில் தென்பட்ட உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியவில்லை அவனால். 

“உனக்கு கஸ்டமாய் இருந்தால் நீ விலகிப் போ.....” வார்தை முடிவதற்குள் அவன் இதழ்களில் தன் இதழ்களை புதைத்திருந்தாள் அவனின் ரோஸ். அவள் மடியில் தலை வைத்து ஒரு கால் மடித்து படுத்திருந்தவன் கையை அவள் பின் தலைக்கு கொண்டு சென்று முத்தத்தை ஆழமாக்கினான். 

நீண்ட நேரம் கழித்து பிரிந்தவள் “நாளைக்கு உங்கள் வீட்டில் நிச்சயம், ஐந்து நாளில் அழகர் கோயிலில் கல்யாணம், பின் அங்கு ரிஷஷ்பன் முடிய திருவிழா” அவனை போலவே சொல்லி காட்ட, ஒரு அசைவில் தன் கீழ் கொணர்ந்தவன் செங்கபில நிற கண்களில் காதலும் வேட்கையும் கலந்து வழிந்தது.

அவள் இதழ் மூலம் அவன் இதழுக்கு சொன்ன சேதியில் இத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர்த்திருக்க  மயக்கும் புன்னகையுடன் பார்த்தவன் அழகு அவள் மனதை கொள்ளை கொண்டது.

இத்தனை நேரம் கழித்து தான் அவள் கண்ணில் பட்டது அவன் பாதி முகத்தை மறைத்த தாடி மாயமாகி இருந்தது. கூடவே சடை போல் வளர்ந்திருந்த கேசமும். இருபுறமும் கேப் கட் போல் ஓட்ட வெட்டி நடுவில் ஒன்றரை இஞ்சி நீளத்தில் அயன் செய்துவிட்டது போல் நின்ற கேசம். அவள் தன்னை ரசிப்பதை உணர்ந்து ஒற்றை புருவம் தூக்கி பார்க்க சிவந்த முகத்தை திருப்பினாள். 

அவள் கன்னம் பிடித்து தன்னை பார்க்க செய்தவன் கேட்டான் “இப்ப ஓகேவா...?” அவள் தானே ஆகாஷ் மூலம் சேவிங் ஹேர் கட் இரண்டையும் செய்வித்தது. 

‘என்ன’ என்பது போல் பார்த்தவள் கையை எடுத்து மீண்டும் ஒரு மில்லி மீட்டர் தாடி ஆகியிருந்த ஸ்டபில் கன்னத்தில் வைத்து அழுத்தியவன் அவள் முகம் பார்க்க அசைந்தது கூட தெரியாமல் தலையசைத்தாள்.

அவளை பார்த்தவன் குறும்புடன் அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து தேய்க்க “குத்துது” கண் மூடி சிணுங்கினாள். 

தன் கைகளில் கண் மூடி மலர்ந்திருந்தவளை அப்படியே அள்ளி எடுத்து கொள்ள சொல்லி உடலின் அனைத்து ஹோர்மன்ங்களும் சத்தமிட சிரமப்பட்டு அடக்கி எழுந்தவனை இன்னும் சோதித்தாள் சன்விதா. அவன் கழுத்தை சுற்றி கையை போட்டு தன்னுடன் இறுக்கி கொண்டாள். அவள் காதருகே சென்று “ரோஸ்” அழைத்தான். 

“ஹ்ம்ம்...” 

“நான் பாவமில்லையா...?”

“ஹ்ம்ம்...” 

“என்னை ரெம்ப சோதிக்க கூடாது”    

“ஹ்ம்ம்..” இன்னும் அவன் மீதுள்ள மையல் தீராமல் மயக்கத்தில் கண் மூடி இருந்தாள். கன்னத்தை லேசாக கடிக்க விழித்தவள் கண்ணில் பட்டது அவன் கழுத்து வளைவில் இருந்த அந்த பற்தடம். சட்டென அவனை உதறி கட்டிலை விட்டு எழுந்து நிற்க “என்னாச்சு..?” குழப்பத்துடன் கேட்டான் அச்சுதன்.  

“அந்த பற்தடம்....” 

“அதுக்கு என்ன?” தலையின் கீழ் கைகோர்த்து குறும்பு புன்னகையுடன் கேட்டான். 

அவனை முகம் முட்ட முறைத்து தள்ளியவள் “அது யாருடையது?” கேட்டாள். 

“ஹாஹாஹா” சத்தமாகவே சிரித்தான் அச்சுதன். அவன் சிரிப்பில் கடுப்பாகி மார்புக்கு குறுக்கே கைகட்டி திரும்பி நிற்க எழுந்து பின்னிருந்து அணைத்தவன் “நீதானேடி கடிச்சு வைச்சா”  என்றான். 

தோளிற்கு மேலாக பார்த்தவள் “நானா?” ஆச்சரியத்துடன் கேட்க “அன்று மதுரையிலிருந்து வந்த போது.... பல்லு பதிந்துவிட்டது அப்போது இருந் மனநிலையில் நானும் கவனிக்கவில்லை, பின் தழும்பு வந்துட்டு நானும் இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்” ஒற்றை கண் மூடி உதட்டை கடிக்க “அவளை என்ன செய்யலாம் சொல்லு” என்றான்.

அவள் குழந்தை போல் விழிக்க சிரித்தவன் ஒரு தரம் இறுக அணைத்து விடுவித்தான் “இதற்கு மேல் தாமதித்தால் சரி வராது போவோம் வா” என்றான்.   

“சாப்பிட்டு போவோம்” என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் “இங்கே சாப்பாடு எதுவும் இல்லையே”. 

“நான்தான் கொண்டு வந்தேனே” சிரிப்புடன் கூறி முன்னே சென்றவளை கட்டிலின் ஓரத்தில் இருந்த சட்டையை எடுத்து போட்டவாறே பின் தொடர்ந்தான்.

♥♥♥♥♥

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்க போனவளை கை பிடித்து நிறுத்தி “அருணிடம் உனக்கு கோபம் இல்லைதானே” தயக்கத்துடன் கேட்க புன்னகையுடன் தலையாட்டினாள் இல்லை என்று.

“நீங்கள் உள்ளே வரவில்லையா?” என்று கேட்க “இல்லை வீண் பேச்சு வரும் நீ போ இன்னும் ஐந்து நாளில் உரிமையாய் வருகின்றேன்” என்று பதிலளித்தான். அதற்கு மேல் அவளும் வற்புறுத்தவில்லை. எதையோ கேட்க தயங்க அவள் கேட்க தயங்குவது என்னவென்று புரிய அவள் கையை அழுத்தி பிடித்தவன் “இனி சந்திக்க நேரம் கிடைக்கும்” முறுவலுடன் சொன்னான். விடைபெற்று உள்ளே சென்றவளின் பின்னே வந்த சிலர் அவள் நிச்சயதார்த்த ஆடைகளும் அதன் நகைகளும் கொண்டு வைத்து சென்றனர்.

வாசலில் அமர்ந்திருந்த அருண் அர்ஜுன் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்து கேட்டாள் “ஜிஜு அண்ணா நீங்கள் இருவரும் இங்கே என்ன...” அவள் அழைப்பே கண்டேன் சீதையை என்பது போல் நிலைமையை சொல்லி விட “உன் ஆடை நகைகள் எல்லாம் சரியா என்று பார்த்து வர வந்தோம்” என்றனர்.

உள்ளே சென்று அவர்களுடன் பேசியவளையே காரிலிருந்து புன்னகையுடன் பார்த்திருந்தான் அச்சுதன். 


Reply
Posts: 88
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 5 months ago

யாசகம் ♥ 46

கள்ளழகர் கோவிலில் இரு குடும்பத்திலும் முக்கியமானவர் முன்னிலையில் அந்தக் கள்ளழகர் சாட்சியாக வைத்து மாங்கல்யம் அணிவித்தவன் இரு கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட ரோஜா வண்ண ரோஜாமாலை நடுவே சிவப்பு ரோஜாவானாள் சன்விதா. 

முதல் தடவையாக தலையில் தலைப்பாகையுடன் பட்டு வேஷ்டி சட்டையில் அவனைப் பார்த்து மயங்கியவள் தான் இன்னும் தெளியவில்லை. மாலையுடன் மண மேடைக்கு வந்தவள் அவன் கழுத்தில் மாலையை போட்டு விட்டு அழகாய் விரல்களால் திருஷ்டி சுற்றி நெற்றியில் நெட்டி முறிக்க சுற்றி இருந்தவர்களின் ஆரவாரத்தில் காது மடல் வரை சிவந்து நின்றான் அச்சுதன். 

அதன் பிறகு நடந்த கல்யாண சடங்கு அனைத்திலும் மயக்கத்துடன் அவனையே பார்த்திருந்த சன்விதாவை பின்னால் நின்ற மானாஸாதான் தட்டி செய்ய வைத்து கொண்டிருந்தாள். 

ஐயர் வலபுறாமக கை கொண்டு வந்து அவள் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்ல கைவளைவில் இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அந்த அழகிய தருணத்தை அழகாய் கிளிக்கி கேமராவினுள் பதுக்கி கொண்டார் புகைப்பட கலைஞர். 

கல்யாணத்திற்கு சொல்லவில்லை என்றாலும் ஊரில் வரவேற்பு வைத்து அதற்கு சொல்லியிருக்க நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் வீட்டிற்கும் வந்திருந்தனர்.

அவர்களில் ஒருவராக நின்ற கரண் தனியாக சோர்ந்து போய் பார்வதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அன்று டெல்லியில் அச்சுதன் விபத்தின் பின்னர் ஹாப்பி சிங்கிடம் பேசுவதை கேட்டவனுக்கு கண் மண் தெரியாத கோபம்.

♥♥♥♥♥

“ஹப்பி சிங்ஜி, நேற்று நாம் ஒருத்தனை கூட்டிட்டு போய் விட்டமோ அவனுக்கு நம் சன்விதாவின் மேல் ஒரு கண் ஆளும் சரியில்லை யாராவது வந்து விசாரித்தால் தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” அப்பாவி போல் கூற அவரும் பெண்பிள்ளை என்று அவள் கூறியது போலவே அச்சுதனிடமிருந்து வந்தவர்களிடம் கூறிவிட்டார். அதோடு அவனை எச்சரிக்க போவதாக கூறி அவன் அலுவலகத்திற்கும் அவரையே டாக்ஸி ஓட்ட சொல்லி சன்விதாவிற்கு முன்னரே சென்றுவிட்டிருந்தாள்.

அன்று மொடேல்லிங் தேர்வு நடக்க அவளுக்கு தெரிந்த ஒன்றாகவும் இருந்தது அவள் அதிர்ஷ்டமே. சன்விதா வரும் நேரம் பார்த்து உள்ளே சென்றவள் தன் செய்த மொடேல்லிங் காட்சிகளை தொலைபேசியில் காட்ட அதை பார்ப்பதற்காக அச்சுதன் நெருங்கி இருக்க வாசலில் இருந்து பார்த்த சன்விதாவிற்கு இருவரும் முத்தமிடுவது போலவே தென்பட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாகவே பார்வதியின் பேச்சும் அமைய செல்ல பிள்ளையாக கைக்குள் வளர்ந்த சன்விதா இப்படி ஓருவர் சூழ்ச்சி செய்ய கூடும் என்று கூட யோசிக்காமல் அப்படியே நம்பிவிட்டிருந்தாள்.

ஹாப்பி சிங்கிடம் கூறியதை கரண் பெரிதாக நினைக்கவில்லை. அவனுமே எச்சரிக்கதான் வந்தான். உண்மையில் அன்று அந்த பெண்களுக்கும் அச்சுதனுக்கும் ஏதோ தொடர்பு என்பது புரிய சன்விதாவின் கண்கள் சொன்ன செய்தியை கண்டு கொண்டவன் அவனைப் பற்றி விசாரித்தான். அச்சுதனின் செல்வ நிலையும் பெண்கள் பழக்கமும் கவனத்திற்கு வரவே சிறிது காலம் சன்விதாவை கவனிப்போம். அவள் ஏதாவது வெளிப்படுத்தினால் மேற் கொண்டு இதை பற்றி அவளிடம் சொல்வோம் என எண்ணியிருந்தான்.

ஆனால் அன்று மாலை வந்த போது சன்விதாவின் முகம் அழுதது போல் இருக்கவே “அழுதாயா?” என்று  எவ்வளவு கேட்டும் “ஒன்றுமில்லை” என்று சாதித்துவிடவே பார்வதி வீட்டில்தானே இருந்தாள் அவளை கேட்போம் என்று அவளிடம் சென்றான்.

அப்போதுதான் அன்றைய இரவுக்கான பேஷன் ஷோ முடித்து வந்தவளுக்கு மனது பாரமாய் இருக்க வெளிநாட்டில் இருக்கும் தன் தோழியுடன் போனில் உரையாடி கொண்டிருந்தாள்.

அவள் பேசி முடித்து வரும்வரை காத்து நின்றவனுக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊறியது போல் இருந்தது அவள் பேச்சு. அன்று முழுதும் அவள் செய்த செயல்களை எல்லாம் தோழியிடம் கூறி ஆறுதல் தேடிக் கொண்டிருந்தாள்.

‘நான் யாரை காதலிக்கின்றேன் என்று கூட தெரியவில்லை. இதில் என் காதலை சேர்த்து வைக்க போறாளாம். அதிலும் தங்கை போன்ற சன்விதாவை நான் காதலிக்கின்றேனா’ பொங்கி வந்த கோபத்தை கண் மூடி அடக்கியவன் எதுவித பேச்சும் இன்றி அன்றே அவளை அனுப்பி வைத்து விட்டு சன்விதாவை அழைத்து கொண்டு சென்னை சென்றுவிட்டான். அப்படியே கனடாவும் சென்றுவிட்டான்.

இடையில் அலுவலாக வந்த போது சன்வி மானாசவை அழைத்து கொண்டு டெல்லியில் உள்ள லக்ஸ்மி கோவிலுக்கு சென்றிருந்தான். சன்விதா மணியை அடிக்க முயற்சி செய்ய “அதுக்கு நீ கொஞ்சம் வளரனும்” என்று கிண்டல் செய்தான்.

அதற்குள் வேலை செய்யும் இடத்திலிருந்து போன் வரவே சற்று தள்ளியிருந்து அவர்களுடன் பேசியவாறே திரும்பி பார்த்தவனுக்கு தங்கள் வீட்டு செல்ல பெண் செய்யும் காரியம் புரிய வேகமாய் வருவதற்குள் இன்னொருவன் காப்பற்றி இருந்தான்.

ஆனால் இருவருமே ஒருவரை ஓருவர் அறியாதது போல் நடந்து கொள்ள தலையை பிய்த்து கொள்ளதா குறையாக நின்றான் கரண்.

சரி மறந்துவிட்டாள் போல் நாம் ஏன் ஞாபகபடுத்துவான் என்று நினைத்து போவோம் என்று கிளம்பினால் அவளோ கோவில் முழுக்க அவனை தேடினாள். இன்னொரு பக்கத்தில் அச்சுதனும் தேட நடுவில் நின்று வேடிக்கை மட்டும் பார்த்தான் கரண்.

அதன் பிறகு பார்வதி அவனை தொடர்பு கொள்ள முயன்ற போதெல்லாம் அவள் மேல் இருந்த கோபத்தில் யாரோ போல் பேச சரி சன்விதா அவனுக்கு கிடைத்துவிட்டாள். அதனால் தான் தன் போனை தவிர்கின்றான் என நினைத்தவளுக்கு ஒரு விதத்தில் சந்தோசமே. தான் காதலித்தவன் சந்தோசமாய் இருக்கின்றான். அன்று கரன் வந்து சன்விதாவின் திருமண அழைப்பிதழை கொடுக்கும் வரையில் அப்படிதான் நினைத்து கொண்டிருந்தாள்.

அழைப்பிதழை கொடுத்தவன் உதடுக்குள் ஒரு சிரிப்புடன் சென்றுவிட்டான்.

♥♥♥♥♥

வீட்டின் வெளியே தனியாக அமர்ந்திருந்தவள் அருகே யாரோ அமர திரும்பி பார்த்தாள். கரண்தான் “என்ன?” என்றவனிடம் “மதுரை ஏர்போர்டில் பிளைட்” மெல்லிய சோகத்துடன் புன்னகைத்தாள்.

அம்மா அப்பா இருவரும் விவாகரத்து பெற்றுவிட ஹாஸ்டலில் தனிமையிலே காலம் சென்றதில் இது போன்ற உறவுகளுக்காக மனம் ஏங்கும். தன் வயது பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு உறவு சொல்லி பேசும் போதெல்லாம் எனக்கும் வேண்டுமே என்று அவள் மனம் ஏங்கும். உண்மையில் கரனுடன் பழக தொடங்கியது கூட அவனிடம் பேசும் போது பூவாஜி பத்மாவதி சன்விதா என அனைவரும் அவளுடனும் பேசுவார்கள். அவனுக்கு ஏதாவது பார்சல் அனுப்பினால் அவளுக்கும் அதில் ஏதாவது இருக்கும். அவர்கள் அனுப்பும் பொருட்களை விட அவளையும் நினைத்தேன் என்ற அந்த எண்ணமே அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

இங்கு வந்ததில் இருந்து கரண் அவளிடம் முகமனுக்கு கூட பேசாத போதுதான் தன் தவறு புரிந்தது. ஆனால் அவளும் தான் என்ன செய்வாள். அவள் இருந்த இடத்தில் இதுபோல் உறவகளை பார்த்து வளரவில்லையே. தன் மடத்தனத்தால் இனி இது போன்ற உறவுகள் இல்லை என்பதும் புரிந்தது.

குனிந்து மடியில் கோர்த்திருந்த கரங்களை பார்த்தவள் “சன்வி ரெம்ப லக்கி இல்ல” என்றவளை விநோதமாக பார்த்தான்.

நிமிர்ந்து நிலவினை பார்த்தவள் கண்கள் பளபளத்தது. “அன்பான பேரெண்ட்ஸ், ரெம்ப நல்ல பிரண்ட்ஸ், உயிரை விட மேலா லவ் பண்ற லவ்வர்...” சுட்டு விரலால் மூக்கை தேய்த்தவள் உயிரின்றி சிரித்தாள் “கடவுளுக்கு சன்வியை ரெம்ப பிடிக்கும் இல்லையா?”

அவன் பதிலை எதிர் பாராமலே தொடந்தாள் “ஐ வில் மிஸ் ஆல் ஒப் யூ. சன்வி, பத்மாவதி அண்டி, பூவாஜி, மானாசா, அங்கிள், உன்னோட அப்பா, அம்மா ஆஹ் ஹப்பிசிங் எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்” ஒரு கண அமைதியின் பின் “இவர்களிடம் எல்லாம் விடை பெற என்னால் முடியாது நீயே சொல்லிரு ப்ளீஸ்” கட்டு மீறி கன்னத்தில் வழிந்த நீரை அவனறியாமல் துடைத்தாள். “ஆனால் உன்னிடமும் சொல்லமால்  போக முடியல... யூ டிட்ன்ட் டாக் எப்படி சொல்றது என்றும் தெரியல எனிவே குட் தட் யூ கம் ஹியர்” சிரிப்பின் பின் சோகத்தை மறைத்தாள்.

“சாரி...” என்றவளை கேள்வியாக பார்க்க “உன்னை எனக்கு ரெம்ப பிடிக்கும் நீ விரும்பிறது எல்லாம் உனக்கு கிடைக்கணும் என்று நினைச்சேன். நீ யாரை காதலிக்கிறாய் என்று தெரியாம நான் பாட்டுக்கு எதையெதையோ செய்து... சாரி அன்ட் பாய்” அவன் ஏதாவது சொல்வான என்று முகம் பார்த்து இருந்தாள். 

கரனோ அவள் ஏக்கம் நிரம்பிய முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். அன்று பூவைக்கும் வைபவத்தின் பின் அச்சுதனிடம் சென்று வந்த சன்வி அவனை பிடித்து வைத்து வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டாள். “நீ உன் காதலை சொல்லமால் ஒரு பெண்ணை காதலிக்கின்றேன் என்று சொல்லிட்டு இன்னொருத்தியோட பழகின யாராய் இருந்தாலும் அப்படித் தான் நினைப்பார்கள். ஒழுங்கு மரியாதையா போய் லவ்வை சொல்லு இல்லை நானே யாரையாவது ஒருத்தனை பிடித்து கட்டி வைத்துவிடுவேன்”

பார்வதிக்கோ அவன் அமைதி இன்னும் தன்னிடம் கோபமாக இருப்பதாகவே பட “ஐ கெஸ்ஸஷ் தேர் இஸ் நோதிங் டு சே” கண்ணீரை அடக்கி கொண்டவள் “கடவுளுக்கு பிடிக்காதவங்க லிஸ்ட்ல என்னோட பெயர்தான் முதல்ல இருக்கு இல்ல” தனக்குள் முணுமுணுத்தவாறே அருகே இருந்த பாக்கை எடுத்து தோளில் போட்டவள் மீண்டும் தயங்கி நின்றாள். ஏதாவது சொல்வானா என்பது போல். ஏனெனில் இந்த தடவை சென்றாள் திரும்பி வரவேமாட்டாள்.   

அதிர்ந்து போய் பார்த்திருந்தான் கரண் அவள் இத்தனை சீக்கிரம் புறப்டுவாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

இத்தனை தூரம் சொல்லிவிட்டாள் உன்னை பிடிச்சிருக்கு என்றும் சொல்லிவிட்டாள். மிஸ் பண்ணுவேன் என்றும் வெட்கத்தை விட்டு சொல்லிவிட்டாள். இதற்கு மேல் எதைதான் சொல்ல. அவன் காதலிக்கும் பெண் நீயில்லை மனம் கூப்பாடு போட அவர்கள் இருந்த இடத்திற்கு எதிர் புறத்தில் இருந்த காரை நோக்கி சென்றாள்.

அவள் அந்த அவினியுவை கடந்து செல்லவே கரனுக்கு உறைத்தது. அவள் தன்னை விட்டு நிரந்தரமாய் போகிறாள். திரும்ப பார்க்கவே முடியாது. அவன் கடந்து போவதற்குள் யாரோ விஐபி வந்த வாகனங்கள் தொடரணியாக அடுத்தடுத்து செல்ல அந்த பக்கம் போக பத்து நிமிடம் எடுத்துவிட்டது.

சென்று பார்த்தவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை கண்ணிலேயே தென்படவில்லை. சுற்றும் முற்றும் பார்க்க ஒரு கார் நிற்க அதனை பஞ்சர் போட்டு கொண்டிருந்தார் அதன் டிரைவர். அருகே சென்றவன் “இந்த பக்கம் ஒரு பெண் வந்தாளா? இந்த உயரம் இருக்கும் மஸ்கட் கலர் லேஹெங்கா....” ட்ரைவர் ஒரு புறம் கைகாட்டவே அங்கயிருந்த பெஞ்ச் ஒன்றில் குனிந்து அமர்ந்திருந்தாள் பார்வதி.

ஓடி சென்று அவளை எழுப்பியவன் கன்னம் தாங்கி “ஐ லவ் யூ அன்ட் சாரி” கண்களையே பார்த்து கூறினான்.

பார்வதிக்கோ தன் காதால் கேட்டதையே நம்ப முடியவில்லை. “அஹ்...” வார்தையின்றி தடுமாற “ஐ லவ் யூ, ஐ லவ் யூ அன்ட் சாரி” மீண்டும் சொன்னவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு இறுக அணைத்துக் கொண்டான்.

அப்போதும் நம்பாமல் அவனிடமிருந்து விலகி “நிஜமா....” கேட்டவளுக்கு பதிலாய் நெற்றியோடு நெற்றி முட்டி “நிஜமாதான் உன்னை கடவுளுக்கு மட்டுமில்லை எனக்கும் பிடிக்கும்டி மண்டு” என்றான்.

♥♥♥♥♥

சன்விதாவோ அதி காலையிலேயே முகூர்த்தம் என்று நடுசாமத்தில் எழும்பி அலங்காரம் சடங்கு சாங்கியம் என்று களைத்து போய் இருந்தாலும் முகத்தில் இருந்த பொலிவு குறையவில்லை. வீடு நிறைய சொந்தங்களுக்கு மத்தியில் அவளை போய் ஓய்வெடு என்றும் அச்சுதனால் சொல்ல முடியவில்லை. அவர்கள் வந்திருப்பதே அவளை பார்க்க தான். அப்படியிருந்தும் தான் ஓய்வு எடுக்க போவதாக சொல்லி அவளை அழைத்து சென்று ஒரு மணி நேரம் உறங்கவிட்டிருந்தான். அதற்குள் மாலை வரவேற்புக்கு அலங்காரம் செய்ய வந்துவிட்டிருந்தனர். 

அலங்காரம் முடித்து அவன் அறையிலேயே கூட்டி வந்து விட்டிருக்க, தான் உடை மாற்ற வந்தவன் மெய் மறந்து நின்றான். ரோஜா வண்ணத்தின் லைட் டார்க் இரண்டும் கலந்த லெஹெங்காவில் தானும் ஒரு ரோஜாவாய் கையில் சிவப்பு ரோஜா மலர் செண்டுடன் கண்ணாடி முன் நின்றவளை கண்டு கண்களில் மயக்கம் படர மெதுவே நெருங்கினான்.


Reply
Posts: 88
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 5 months ago

யாசகம் ♥ 47

அவன் அருகே வருவதை கண்ணாடி வழியே பார்த்த சன்விதாவின் இதயம் கட்டு மீறி துடிக்க தொடங்கியது. கண்களை அகல விரித்து அவனை பார்க்க அந்த கண்களில் விழுந்து கரைந்து போனான் அவன்.    

“கொல்றாளே...” வாய்க்குள் முனங்கினான். அவள் காதருகே சுருண்ட கேசம் அவன் மூச்சை திணற வைத்தது. 

பின்னிருந்து தோளுக்கு சற்று கீழே இரு கைகளையும் பிடித்து கொண்டவன் கழுத்து வளைவில் உதடு பதித்தான். கைகளை இறக்கி இடையோடு இறுக்க அவள் செவ்விதழ்கள் மெதுவாய் அதிர “என்னடி” என்றான். 

“இல்ல..... மேகேப்.... ட்ரெஸ் கசங்கிரும்...” கன்னம் சிவக்க தயக்கத்துடன் கூறினாள். 

“உன்னை யாரு இங்கே வந்திருக்க சொன்னது” 

“அண்ணாதான்” மயக்கத்தில் வார்தைகள் குழறாளாய் வர, வெளியே கதவு தட்டும் சத்தம் இருவரையும் நடப்பிற்கு கொண்டு வந்தது.  இருவரும் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வர முயலும் போதே வெளியே அர்ஜூனுக்கும் சுபத்ராவிற்கும் நடந்த வாக்குவாதம் உள்ளே கேட்டது. 

“அவளை ஏன் கண்ணாவின் அறையில் விட்டீர்கள், அவன் பாவமில்லையா” 

“இப்போது அவன் மனைவி தானே, பிறகு என்ன...” 

“அச்சோ..... உங்களுக்கு பொருள் விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது முன்பாவது நீங்கள் தனியாக இப்போது கரன் சந்த்துடன் சேர்ந்து கொண்டு செய்யும் அட்டகாசம் தாங்க முடியல” தலையில் அடித்து  கொள்ளாதா குறை “கண்ணா....” கதவை தட்டினாள் சுபத்ரா. 

அவர்கள் வாக்குவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க சன்விதாவின் கன்னம் சிவக்க அந்தக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு பிரஷ் ஆக சென்றுவிட்டான்.

மலர் செண்டை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்து விட்டு கவனமாய் இரு கைகளாலும் லெஹெங்காவை பிடித்து சென்று கதவை திறந்தவள் “அண்ணி உள்ளே வாருங்கள்” என்று சுபத்ராவை கையை பிடித்து அழைத்து சென்றாள். அப்படியே அர்ஜுனிடம் திரும்பி “அண்ணா அவர் உடை அதோ இருக்கு ப்ளீஸ் அவர் ரெடியாக கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கள்” என்றவள் உள்ளே மேஜையில் இருந்த உணவை காட்டி கூறினாள் “சாப்பிடுங்கள்”. 

“இப்போதா...?” என்று இழுக்க “அவர் வந்து உடை மாற்றி ரெடியாகும் நேரத்திற்குள்  சாப்பிடலாம் சாப்பிடுங்கள், வரவேற்பு தொடங்கினால் உங்களுக்கு சாப்பிட நேரமிருக்காது” செல்லமாய் மிரட்டினாள். 

“இதோ லெமன் டீயும் ரெடி அள்ளி சாப்பிட ஸ்பூனும் ரெடி” 

அச்சுதன் வெளியே வந்த போது பார்த்தது அக்கா சாப்பிட்டு கொண்டிருக்க அவன் மனைவியும் அத்தானும் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள். பொட்டம் மட்டும் அணிந்து புன்னகையுடன் அருகே சென்றவன் சன்விதா கையிலிருந்த தேநீரை பறித்து குடித்தவாறே வந்து தயாரானான்.  

தனது கையையும் அச்சுதன் கையில் இருந்த கப்பையும் தன் கையையும் மாறி மாறி பார்த்த சன்விதா “வேண்டுமானால் கேட்க வேண்டியது தானே” என்று வாய்க்குள் முனங்கியவள் வேறொரு கப்பில் தனக்கு ஊற்றிக் கொண்டாள். அவர்களைக் காணாதது போல் பார்த்த அர்ஜுன் சிரிப்பை தனது கப்பின் பின்னே மறைத்துக் கொண்டான். 

அர்ஜுன் முதுகின் பின்னே நின்று ‘டேஸ்ட்டி’ என்று வாய் அசைவில் சொல்ல அவளோ அன்று குல்பியை சொன்ன போது கொடுத்த அதே பாவனையை கொடுக்க சிரித்து விட்டு தாயாராக தொடங்கினான். 

அவள் சொன்னது போல் அச்சுதன் தயாராகவும் சுபத்ரா சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது. வரவேற்பிற்கான நேரமும் நெருங்கி வர சுபத்ரா இருவரையும் “கீழே வாருங்கள்” என அழைத்தவாறு முன்னே நடந்தாள்.

அர்ஜுனும் அவள் பின்னே சென்று விட சில கணங்கள் தனித்து விடப்பட கடைக்கண்ணால் அச்சுதனை ரசித்த சன்விதா அவளை வருடி சென்ற அவன் பார்வையின் வேட்கையில் செங்கொழுந்தாகி போனாள். 

♥♥♥♥♥

மதுரையில் மிக பெரிய மண்டபத்தில் தான் வரவேற்பு வைத்திருந்தனர். வருபவர்கள் தங்கவும் வசதியாக இருக்கும் என்று. மாலை ஆரம்பித்த வரவேற்பு முடிய மணி பதினொன்றை தொட்டு இருந்தது. அதற்குள் இரண்டு தரம் அச்சுதன் தோளில் சாய்ந்து மேடையிலேயே சன்விதா உறங்கி விட்டிருந்தாள். அவளின் களைப்பை பார்த்தவன் வரவேற்பை இரண்டு நாள் தள்ளி வைத்திருக்கலாமோ என்று யோசித்தான். எல்லாம் முடிந்து வீடு வந்த போது நடுச்சாமம் தாண்டியிருந்தது. 

காரில் வரும் போதே அவன் மார்பில் சுருண்டு விட்டாள். காரில் வைத்தே அவள் தலையிலிருந்த அலங்கார நகைகள் கிளிப்புகள் என்று  ஒவ்வென்றாக லாவகமாக கழட்ட சன்விதாவிற்கு தலையிலிருந்து ஐந்து கிலோ குறைந்தது போல் இருந்தது. உறக்கம் வழிந்த கண்களோடு சோர்வாய் புன்னகைத்தவள் இரு கன்னங்களையும் மென்மையாக ஏந்தி கொண்டவன் “இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மெல்ல கண்ணயர்ந்தவளை பார்த்து தலையாட்டி சிரித்தான் அச்சுதன்.

காரை ட்ரைவ் செய்து கொண்டிருந்த அர்ஜுன் கண்ணாடியில் பார்த்து விட்டு “இன்றிரவு கஷ்டம்தான்” என்று அவர்களை பார்த்து சிரிக்க அவன் தொடையை கிள்ளினாள் அருகே அமர்ந்திருந்த சுபத்ரா “சும்மா இருக்க மாட்டீர்கள்”.

வீடு வந்த போது சன்விதா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். வீடு நிறைய உறவினர் நிறைந்திருக்க யாரை பற்றிய கவலையுமின்றி அவளை அலுங்காமல் தூக்கியவன் “ஆகாஷ் பியூடிஷனை மேலே வர சொல்லு” என்று சென்றுவிட்டான்.

அருணுடன் வேறு காரில் முன்னேமே வந்திருந்த மானசா அறை வாசலில் காத்திருந்தாள். அவளுக்கு இன்னும் பதினான்கு நாட்களில் திருமணம். அவளுக்கு தான் தெரியுமே தன் செல்ல தங்கை இத்தனை நேரம் விழித்து இருந்ததே பெரிது. மானஸாவை பார்த்து நிம்மதியாய் மூச்சுவிட்டான் அச்சுதன். 

சன்விதாவை மான்ஸாவிடம் விட்டு லைட் வெளிச்சமும் அத்தனை நேரம் அணிந்திருந்த பட்டு குர்தியும் கசகச என்று இருக்கவே தன் ஆடைகளை எடுத்து கொண்டு குளித்து வர சென்றுவிட்டான்.

சன்விதாவை தட்டி எழுப்பிய மானசா அழகு கலை நிபுணரின் உதவியுடன் மேக்கேப் கலைத்து குளிக்க அனுப்புவதற்குள் ஒரு வழியாகிவிட்டாள்.  கரண், அர்ஜுன், சந்த் பூவாஜி, மானசா சுபத்ராவுடன் பத்மாவதியும் காத்திருக்க ஈர தலையுடன் ட்ராக் பாண்ட் டீ ஷிர்ட்டுடன் உள்ளே வந்த அச்சுதன் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தான். 

அப்படியே அவன் பார்வை மானாஸாவின் தோளில் சாய்ந்து கொண்டு குட்டி தூக்கம் போட்ட மனைவியில் நிலைக்க பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குல் அடக்கினான். “ஏய் எழுந்திருடி” தலையிலேயே ஒரு அடி போட்டாள் மானசா. தலையை தடவியவாறு விழித்தவள் தன்னை தானே குனிந்து பார்த்து கொண்டு சுற்றி இருந்தவர்களையும் பார்த்து அசடு வழிய சிரித்தாள். 

“இங்கே வந்து நில்” பத்மாவதி அழைக்க காலை தரையில் உதைத்தவாறே சென்றவளை கிழக்கு பார்த்து நிற்க வைத்தார். “மாப்பிள்ளை நீங்களும் வாருங்கள்” அச்சுதனையும் அருகே நிற்க விட சட்டென முகம் பிரகாசிக்க பார்த்தாள் சன்விதா. இப்போது அவள் தேவை ஒரு தோள் அது யாராய் இருந்தால் என்ன அப்படியே அச்சுதன் தோளில் சாய்ந்து நின்றுவிட்டாள். அத்தனை நேரம் வரவேற்பில் நின்ற கால்கள் கெஞ்சியது எங்காவது இரேன் என்று.

பத்மாவதியும் மானாஸாவும் தலையில் அடித்து கொள்ள கரனும் சந்த்தும் சத்தமாய் சிரிக்க அர்ஜுனும் சுபத்ராவும் புன்னகைத்தனர். 

பத்மாவதியின் சுற்றிய கையை பார்த்தவள் “தலை சுத்தும்மா..” சிணுங்கினாள்.

“கொஞ்ச நேரம் சும்மா நில்லு” அவள் தலையில் தட்டுவதற்குள் அச்சுதன் தன் கைவளைவிற்குள் அவளை கொண்டு வந்திருந்தான் “வேண்டாம் அத்தை களைத்துவிட்டாள்” 

“அதிக இடம் கொடுக்காதீர்கள் உங்கள் தலையிலேயே ஏறி இருந்துவிடுவாள் கவனம். தம்பி எல்லோரும் பெண்ணை அழவிடாமால் பார்த்து கொள்ளுங்கள் என்பார்கள். இங்கே  நீங்கள் பத்திரம் அவ்வளவு தான் சொல்வேன்” அச்சுதனிடம் கூறியவர் மகளிடம் திரும்பி “அவரும் தானே உன்னுடன் நின்றார். இத்தனைக்கும் நேற்று வரை வேலை வேறு” செல்லமாய் திட்டி அவள் பொறுப்பை எடுத்து கூற அப்பாவியாய் அண்ணாந்து அவன் முகம் பார்க்க கண்ணடித்து ‘சும்மா’ என்பது போல் வாயசைத்தான் செய்தான். 

திரும்பிய பத்மாவதியை “அம்மா...” என்று கத்தியே நிறுத்தியிருந்தாள்.

அவள் கத்தலில் அச்சுதனே திடுக்கிட்டுவிட்டான்.  முறைத்தவாறே இன்னொரு பார்சலை அருகே இருந்த வேலைக்கார பெண்ணிடமிருந்து வாங்கிய பத்மாவதியை பார்த்து அசடு வழிய சிரித்தாள் “அது... வந்து... அண்ணிக்கு...... சுற்றி அம்மா என்றால்  அம்மாதான்” என்று அவர் தோளை கட்டிக்கொண்டு சுற்றி போடுவதை வேடிக்கை பார்த்தாள். 

“எனக்கு எதற்கு...” என்று தயங்கிய சுபத்ராவை “சும்மாயிரும்மா கர்ப்பிணி பெண் எத்தனை பேர் கண் பட்டுச்சோ” என்று கண்ணூறு கழிக்க சுபத்ரா அச்சுதன் இருவர் கண்ணும் கலங்கியது. 

சூழ்நிலையை சுமுகமாக்க சன்விதா அச்சுதன் அருகே வந்த பூவாஜி “வீட்டிற்கு ஒத்தை பிள்ளை அவனை அழவைக்காதே பட்டாம்பூச்சி” என்றவரை முறைக்க அவளை கலாய்ப்பதை புரிந்து கொண்ட அச்சுதன் சிரிப்பை அடக்க மறுபுறம் திரும்ப கரன் சத்தமாவே சிரித்தான். அவன் காதை முறுக்கியவள் “தேவதாஸ் பாருவிடம் எப்போ காதலை சொல்ல போறீங்க” கேட்கவே “நான் எப்பவோ சொல்லியாச்சு மானாஸாவுக்கு  அடுத்து எங்கள் வெடிங் தான் வந்து சேர்” என்றான். 

அவனை விட்டு அச்சுதன் அருகே வந்த சன்விதா மீண்டும் தோளில் சாயாமல் நேராக நிற்க சிரமப்படுவதை கீழ் கண்ணால் பார்த்தவன் ஒரு கையால் நெஞ்சோடு அணைத்தவன் அத்தானிடம் கண் காட்டினான். 

“ஓகே ஓகே நாம் போவோம் அவர்கள் ரெஸ்ட் எடுக்கட்டும் நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் போக வேண்டும்” என்று அனைவரையும் அழைத்து செல்ல முயற்சிக்க “இல்லை” என்று அனைவரும் கோரஸாக கூற அவ்வளவு நேரம் நெஞ்சில் மஞ்சம் கொண்ட சன்விதா திடுக்கிட்டு விழித்தாள். அதை பார்த்த அச்சுதன் முகத்தில் மெலிதாய் சில எரிச்சல் கோடுகள். 

“அவளும் தூங்க மாட்டாள் மாப்பிள்ளையையும் தூங்க விட மாட்டாள்” கரண் கூறவே அர்ஜுன் குழப்பத்துடன் பார்த்தான். அதற்குள் ஓர் செர்வாண்ட் கையில் டிரேயுடன் உள்ளே வந்தாள் “சார் இதில் நீங்கள் கேட்டது போலவே ஹாட் பாக்சில் இருக்கிறது” பணிவுடன் கூறி மேசையில் வைத்து செல்ல மறு பேச்சின்றி அனைவரும் வெளியே செல்ல அர்ஜுன் குழப்பத்துடன் கேட்டான் “ஏன்” 

“அதுவா சான்விச் இரவு சாப்பிடாம படுத்தால் தானும் தூங்க மாட்டாள் அருகில் படுக்கிறவரையும் தூங்க விட மாட்டாள். அது தான் அச்சுதன் சாப்பாடு ஏற்பாடு செய்தாச்சு சோ நோ ப்ரோப்லேம்” கரண் விளக்கம் கொடுத்தான். 

உள்ளே அனைவரும் சென்று கதவும் தானாக சாற்றி கொள்ள திரும்பி சன்விதாவை பார்க்க அவள் நின்று கொண்டே தூங்கினாள். கன்னத்தில் தட்ட துள்ளி விழித்தவள் விழாமல் தாங்கினான் “அது எப்படி நின்று கொண்டே தூங்குற” என்ற அவன் கேள்வியில் மீண்டும் விழிக்க வாய்க்குள் சிரித்தவன் “சரி வா” என்று மேசை அருகே அழைத்து சென்றான்.

அருகே இருத்தி தோசையை பிய்த்து அவள் முகத்தைப் பார்த்தவாறே அவளுக்கு ஊட்டிவிட்டான். இடையில் அவள் வாயில் இருந்த தோசையை களவாடியவன் “டேஸ்டி” கண்ணில் மயக்கத்துடன் கூற அப்போதுதான் அவளுக்கு லேசாக உரைத்தது அன்று குல்ஃபியையும் இன்று தேநீரையும் பருகி விட்டு எதை டேஸ்டி என்றான் என்று. புரிந்ததில் முகம் சிவக்க தலை குனிந்தவளை பார்த்து சற்று சத்தமாக சிரித்தவன் “அப்படியானால் இனி கஷ்டம் இல்லை” என்று கண்ணடித்து சத்தமாய் சிரித்தான்.

வெட்கத்தில் ரோஜாவை சிவந்தவள் “ச்சு...” சிணுங்கினாள்.

அவள் உண்டு முடித்ததும் எழும்பியவனை  தடுத்து அவனுக்கு ரெண்டு தோசையை எடுத்து சிறு துண்டாக பிய்த்து அவனுக்கு நீட்டினாள். இரண்டு வாய் வாங்கியவன் அவள் தூக்கம் வழியும் கண்களை பார்த்து “எனக்கு போதும்” என்றான்.

ஒரு கணம் அவனைப் பார்த்து விட்டு “நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் அதுவரை நான் இப்படியே இருக்கிறேன்” என்று அவன் கைகளை கட்டிக் கொண்டு புஜத்தில் தலை சாய்த்தாள்.

♥♥♥♥♥

இரவு எந்த நேரம் உறங்கினாலும் காலையில் நேரத்திற்கு எழுந்து விடும் பழக்கம் உள்ள அச்சுதன் எழுந்து குளித்து வெளியே வந்தவன் நேரத்தை பார்க்க மணி ஏழரையை நெருங்கி கொண்டிருந்தது. ஒன்பது மணிக்கு நல்ல நேரம் கோவிலுக்கு சென்று நாள் கடைக்கும் செல்ல வேண்டும். பூனை குட்டி போல் போர்வைக்குள் சுருண்டிருந்தவளை எழுப்ப மனமின்றி பார்த்து கொண்டிருந்தவன் கதவை தட்டும் சத்தம் கேட்டும் பதிலளிக்காமல் அவளையே பார்த்திருந்தான்.

“மாப்பிள்ளை நீங்கள் எழும்பியாச்சு என்று எல்லோருக்கும் தெரியும், கதவைத் திறங்கள்” வெளியே பத்மாவதியின் குரலும் அதை தொடர்ந்து சிரிப்பொலியும் கேட்க “ஆகாஷ்...” பல்லை கடித்தான் அச்சுதன்.

காலை ஐந்தரைக்கே எழுந்தவன் மார்பில் மஞ்சம் கொண்டிருந்த மனைவியை மெதுவாய் விலக்கி மெத்தையில் படுக்க வைக்க அவள் லேசாய் சிணுங்கவே அருகே இருந்தே சில வேலைகளை ஃபோன், லப் மூலமாக ஆகாஷுடன் சேர்ந்து பார்த்து விட்டு இப்போது தான் குளித்து வந்தான். இந்த குரங்கு ஆகாஷ் அதற்குள் போட்டு கொடுத்துவிட்டான்.

“அவளுக்கு கல்யாணம் முடிந்தது ஞாபகம் இருக்கா? இல்லையா? வர்றவன் ஆவது அவளை திருத்துவான் என்று பார்த்தால் நீங்கள் அவள் அக்காவுக்கு மேல்” பத்மாவதியின் புலம்பலுடன் மானசாவின் “ஆ....” என்ற சத்தமும் சேர்த்தே கேட்டது.

இடுப்பில் கை வைத்து பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் குனிந்து தலையை குலுக்கி தண்ணீரை தெளித்தான். அவள் உதட்டிலும் ஒரு துளி தெறிக்க குழந்தை போல் உதட்டை சப்பி உறக்கத்தை தொடர்ந்தவளை பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. சாதாரணமாகவே அவனை சுண்டி இழுக்கும் அவள் இதழ்கள் இன்றோ உரிமையுடன் அருகே... எதுவித தயக்கமும் இன்றி அவள் இதழ்களைச் சிறை செய்தான். பாதி முத்தத்தில் அவள் விழிக்க சட்டென நிமிர்ந்து விலகி நேராக இருந்தான். எல்லாம் அனுபவம் தான். 

எழுந்து அமர்ந்தவள் விழித்தாள் “நீங்க எங்கே இங்கே?” 

“போச்சு போ எல்லாம் முதல்ல இருந்தே சொல்லனுமா...” கழுத்தில் தொங்கிய தாலியை கண்ணால் காட்ட உதட்டை கடித்தது ஒற்றை கண் மூடி சிரித்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்கவே நேரத்தை பார்த்து விட்டு தலையை தடவினாள் ‘என்ன’ கண்ணாலேயே கேட்டவனுக்கு  “அம்மா அடிக்கும்” என்றாள். 

“நீ அங்கே போ நான் அவர்களை சமாளிக்கின்றேன்” குளியலறையை கைகாட்டினான். 

“அப்ப காபி....” 

“பிரெஷ் பண்ணாமலா?” 

“சிங்கம் புலியெல்லாம் பல்லு தீட்டுதா என்ன?”  

கையை மார்புக்கு குறுக்கே காட்டியபடி இருந்தவன் அழுத்தமான பார்வையில் காலை உதைத்தவாறே சென்றவள் “இவர் கிஸ் பண்ணும் போது மட்டும் பிரெஷ் பண்ணறது எல்லாம் ஞாபகம் இருக்காது” வாய்க்குள் முனங்கினாள். 

“ஹா...” 

“சும்மா பேசிக்கிட்டிருந்தேன்...” 

♥♥♥♥♥

அதன் பின் நாட்கள் இறக்கை கட்டி பறந்தது. சென்னையில் வரவேற்பு சில தவிர்க்க முடியாத விருந்துகள் என புது மணமக்கள் பிஸியாக அடுத்த கல்யாண வேலையும் அலுவலக வேலையும் சேர்ந்து அச்சுத்தனின் நேரத்தை விழுங்கியது. 

தானும் கல்யாண வேலை செய்கின்றேன் என்று பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலுமாய் மாறி மாறி நாளை கழித்தாள் சன்விதா. இருவருக்கும் மணமாகி ஒரு மாதம் சென்றிருந்தாலும் அவர்கள் வாழ்கை அடுத்த படியை எட்டவில்லை. வேலை முடித்து இரவில் எப்போது வந்து படுத்தாலும் ஆழ்ந்த உறக்கத்திலும் அவனை உணர்ந்து மார்பில் மஞ்சம் கொள்ளுவாள்.  

அன்றும் வேலை முடித்து தாமதமாய் வந்தவன் பிரெஷ் ஆகி அருகே படுத்து அவள் தலையை வருடினான். அவனை உணர்ந்தவள் இயல்பாக அவன் மார்பில் தலை சாய்க்க உச்சியில் முத்தமிட்டு “சாரிடா...” என்றான். அவள் கண்கள் கேட்கும் கேள்வி அவனுக்கா புரியாது. கல்யாணம் வரை வந்தவனுக்கு ஏனோ அதை தாண்டி போக முடியவில்லை.

அச்சுதனுக்கோ எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற பயத்துடன் வெளியே சொல்ல முடியதா ஒரு தயக்கமும் இருக்க அவளுக்கோ வாய் விட்டு கேட்க பெண்மையின் கூச்சம் விடவில்லை. 

உறக்கத்தில் சீராக மார்பு ஏறி இறங்க அவன் மார்பிலிருந்து தலையை நிமிர்த்தினாள் சன்விதா. அப்போதும் ஆழ்ந்த் உறக்கமின்றி புருவம் சுழித்திருக்க அவன் கேசம் கோதிவிட்டாள். மெல்லிய புன்னகையுடன் உறங்கியவன் முகத்தையே யோசனையுடன் பார்த்திருந்தாள் சன்விதா.

♥♥♥♥♥

சரியாக அச்சுதன் சன்வதா திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அன்றுதான் அருணுக்கும் மான்ஸாவுக்கும் திருமணம் முடிந்தது. திருமணத்தில் இருவருமே முன் நின்று அனைத்தையம் செய்ய அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். சாந்தி முகூர்த்தம் நாளை என கூறிவிட ஏற்கனவே மணமானவள் அக்கா தங்கை ஏதாவது பயம் இருந்தால் பேசி கொள்வார்கள் என்று சன்விதாவை மானாசாவுடன் விட்டிருந்தார்கள். 

சற்றுப் பயந்திருந்த மானசா அவள் கையை பிடித்து ரகசிய குரலில் கேட்டால் “சன்வி நாளை என்ன நடக்கும்”

“பாலை குடித்துவிட்டு படுக்க வேண்டியது தான்” என்றாள். (அததானே ஒரு மாதாமா இரண்டும் செய்திட்டு இருக்கு)

“அதுக்கு ஏண்டி கஷ்டப்பட்டு இப்படி அலங்காரம் எல்லாம்” எரிச்சலுடன் மொழிந்தவளுக்கு பதிலாய் “அதானே” என்று பின்பாட்டு பாடி சிறிது யோசித்தவள் “இரு வருகிறேன்” என்று வேகமாக வெளியே சென்றாள்.

யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான் அச்சுதன். அருகே சென்று “அச்சுதன் முதலிரவில் என்ன நடக்கும்” நல்லவேளை சற்று மெதுவாக தான் கேட்டாள். 

முதலில் அவள் கேள்வியை கவனிக்காமல் லேசாய் அணைத்து “போன் பேசி முடித்து விட்டு வருகிறேன் கொஞ்சம் பொறு” என்றவனிடம் “சரி நான் அம்மாவிடம் கேட்கிறேன். அக்காவுக்கு சொல்ல வேண்டும்” என்று அவள் அங்கிருந்து நகர அவள் கேட்ட கேள்வி மூளையில் உரைக்க “ஐ வில் கால் யூ பேக்” என்று ஃபோனை கட் செய்து வெகு வேகமாக கையைப் பிடித்து நிறுத்தினான். 

“விடுங்கள் நான் அம்மாவிடம் கேட்டு விட்டு பதில் சொல்ல வேண்டும் அவளுக்கு” என்று கையை உதறி கொண்டு போகிறேன் என்று நின்றாள். அதற்கு பத்மாவதி அந்தப் பக்கம் வர “அம்மா.....” என்று சத்தமாக அழைத்து “முதல் இரவு.....” என்று ஆரம்பிக்க அச்சுதன் அவள் வாயை கைகளால் மூடினான். துள்ளிக் கொண்டு போக முயன்ற அவளை பின் இருந்து தன்னுடன் பிடித்து வைத்திருக்க என்னவென்று அருகே வந்த பத்மாவதி அவர்கள் இருவரும் நின்ற கோலத்தை பார்த்து இவள் என்ன செய்து வைத்தாள் என்றே யோசித்தார். 

பலவந்தமாக கையை விடுவித்துக் கொண்டவள் மீண்டும் “அம்மா முதல் இரவு.....” என்று தொடங்க அச்சுதன் நன்றாக அவள் வாயை மூடி “அத்தை நீங்கள் போங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். 

அவள் பேச்சில் அதிர்ச்சியானவர் “உன்னை.....” என்று அவள் தலையில் ஒரு அடி போட்டு “இவள் எப்போது தான் உருப்பட போறளோ?” தன் தலையிலும் அடித்தவாறே அங்கிருந்து சென்றார். 

அருகே இருந்த அறைக்குள் அவளை தள்ளி கதவை சாத்தியவன் “இப்போது கேள் நானே சொல்கின்றேன்” என்று அவளை நோக்கி நடக்க பின்னே செல்வாள் என்று நினைத்தால் கையை தூசி தட்டி “அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டீங்க....” என்றாளே பார்க்கலாம். 

நெற்றி மேட்டுக்கு புருவம் உயர்த்திய அச்சுதன் “யாரு.... நான்” தன்னை தானே சுட்டு விரலால் காட்டி கேட்க தீவிரமாய் தலையாட்டி ஆமோதித்து “உங்கள் பெண்கள் பழக்க வழக்கம் எல்லாம் வெறும் வாய் பேச்சு வீரம்தானே” வாய்க்குள் முணுமுணுத்தாள். 

அருகே வந்தவன் இருபுறமும் கையூன்றி அவள் முகத்தையே பார்த்திருக்க பார்வையின் வீரியம் தங்காமல் கன்னம் சிவக்க தலை குனிந்தாள். உதட்டை கடித்தபடி சில கணங்கள் அவள் முகத்தையே பார்த்தவன் அவள் காதருகே குனிந்து லேசாய் கரகரத்த குரலில் கூறினான் “சாரி...” அப்படியே வேகமாய் விலகி சென்றிருந்தான். 


Reply
Page 9 / 10
Share: