உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 55
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 21

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சன்விதாவுக்கு புரியவே செய்தது அவன் உண்மையை தான் சொல்கின்றான் என்று ஆனால் பார்வதி அவனை முத்தமிட்ட காட்சி கண் முன் வரவே அவளால் சகித்து கொள்ளவே முடியவில்லை. சட்டென எழுந்து போக முயல அவள் மணிக்கட்டில் பிடித்து அருகே இழுக்க நெஞ்சில் மோதி நின்றவள் முகத்தை குனிந்து நோக்கினான்.

அவள் மனதில் ஓடும் எண்ணம் புரிந்த போதும் அவளை எப்படி நம்ப வைப்பது என்று புரியாமல் "சன்வி லிஸின் டு மீ, பார்வதி யாருன்னே எனக்கு தெரியாது"

"அதை பற்றி எனக்கு அக்கறையில்லை மிஸ்டர் அச்சுத கேசவன்"

"ஓஹ் ரியல்லி....."

"ஹா ரியல்லி"

"பிறகு எதுக்குடி அந்த பார்வதியை அடித்தாய்?"

"நா நான் என்னோட பிரண்ட காப்பாத்த அப்படி செய்தேன்"

"ரியல்லி ரோஸ், என்னை முதல் முறை சந்தித்த அன்றேவா!"

"......."

"என்னை சந்தித்த முதல் நாளே சொல்லியிருக்க வேண்டியது தானேடி நீ என் பிரண்ட கிஸ் பண்ண அதான் பிடிக்கல என்று"

"......."

"ஏன் என்று நான் சொல்லவா? என்னை இன்னொரு பெண்ணோட உன்னால நினைத்து கூட பார்க்க முடியல அதான் காரணம், அதுக்கு பெயர் பொஸசிவ்னஸ்"

"இல்லை அப்படியில்லை" கிட்டத்தட்ட கத்தினாள்.

"நீ அலுவலகத்துக்கு வந்தது போன் தாரத்துக்கு இல்ல, நான் எப்படி இருக்கின்றேன் என்று பார்க்க"

"இல்ல நான் போன் தரத்தான் வந்தேன்"

"அதை வீட்டில் அக்கவிடமே கொடுத்திருக்கலாமே?"

"......."

"என்ன காரணம் என்று நான் சொல்லவா?" அவனின் செங்கபில நிற கண்கள் அவளை ஆழ்ந்து நோக்கியது

"நான் எப்படி இருக்கின்றேன் என்று பார்க்க.... அக்கறை...."

"இல்லை எனக்கு அக்கறையில்லை"

"உனக்கு அக்கறை இருக்கு"

"இல்லை அப்படியில்லை"

"யெஸ் யூ டூ"

"நோ......" கண்களில் நீர் திரண்டுவிட்டிருந்தது. 

உலகத்தையே எதிர்த்து நிற்க முடிந்த அச்சுத கேசவனால் எதிர்த்து நிற்க முடியாதது அவனது அக்காவினதும் சன்வியினதும் கண்ணீர். அவள் கண்களில் நீரை கண்டதும் கையை விட்டுவிட்டான்.

"ப்ளீஸ் அவள் யாரென்றே தெரியாது சன்வி" சோர்வுடன் கூறினான் "அவளை முத்தமிட்டது உன்னை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிச்சிரு, ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை" அவள் உடல் மொழி கூறியது இப்போது எதை சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்ள போவதில்லை.

சோர்வுடன் "உனது மேஜை அதோ அங்கே இருக்கிறது" அவனது அறையின் அருகே இன்னொரு அறையாக கண்ணாடி தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட அறையை காட்டினான்.

வேறு எதுவும் பேசாமல் அவன் அறையை காட்டி போக சொல்ல ஒரு கணம் விழித்தவள் ஓரடி எடுத்தது வைத்தவள் திரும்பி பார்த்து ஏதோ கேட்க நினைத்து மனதை மாற்றியவளாய் திரும்பியவளை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.

"என்ன சன்வி எதுவாயிருந்தாலும் கேட்கலாம்" புன்னகைத்தான்.

"அந்த விபத்து...." தயங்கியவளுக்கு எடுத்து கொடுத்தான் "அந்த விபத்துக்கு என்ன?" அவள் கேட்க வருவது புரிந்த போதும் அவனுக்கு அதை அவள் வாயால் கேட்க ஆசையாய் இருந்தது.

"இல்ல அந்த விபத்தால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை தானே?" குனிந்தவாறு கேட்டாள்

அவன் முகத்தை பார்க்கவில்லை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் சந்தோசம் மகிழ்ச்சியின் அர்த்தம். அவன் முகம் அதன் இலக்கணமாய் இருந்தது "யூ மீன், போலீசால்.... இல்லை அப்படி எதுவும் இல்லை" அப்பாவியாய் பதிலளித்தான்.

"ச்சு... அதில்லை தலையில் அடிபட்டது அத....." நிமிர்ந்து முகம் பார்த்தவள், அவன் கண்ணில் வழிந்த குறும்பில் வார்தை பாதியில் நின்றது. ‘இவனோட ஒரு வார்தையை முடிக்க முடியுதா எப்ப பார் பாதியிலேயே நிற்குது’ மனதினுள் வறுத்தாள்.

பாண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டவாறே அவள் முன்னே வந்து நின்று குனிந்து பார்த்தவன் கேட்டான் "அக்கறைதான் இல்லையா?"

பேச்சின்றி உதடு கடித்து தலை குனிந்தாள்.

ஒரு கணம் குனிந்திருந்த தலையை பார்த்தவன் "நீ பிடிவாதக்காரி என்று தெரியும் ஆனால் இவ்வளவு பிடிவாதமா? உன் மனம் சொல்வதையாவது கேட்கலாமே"

"........"

"நிமிர்ந்து பார் சன்வி" கண்டிப்புடன் கூறினான்

நெஞ்சின் உயரமே இருந்த அவள் அண்ணாந்து அவனை நோக்க அவன் மனம் மீண்டும் கோவிலில் அவளை சந்தித்த நாளிற்கு செல்ல மெல்லிய புன்னனகையின் சாயல் முகத்தில் நிழலாட மென்மையாக கேட்டான் "என் கடந்த காலத்தை மறந்து மன்னிக்க கூடாதா?"

அச்சுதனுக்கே ஆச்சரியமாக இருந்தது சிறு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருப்பது தான் தானா என்று. அவன் பரம்பரைக்கும் வசதிக்கும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல பக்கத்து மாநிலத்தில் இருந்து கூட பெண் தருவதற்கு தயாராய் இருந்தார்கள். எதுவித நிபந்தனையும் இன்றி ஆனால் அவன் மனமே இந்த பிடிவாதக்காரியின் காலடியில் கிடக்கிறது. அதை விட ஆச்சரியம் அதை அவன் மனம் விரும்பியே செய்தது. அவனுக்கும் ஈகோ தொடங்கி எல்லா ஈர வெங்காயமும் இருந்ததது இருக்கின்றது.

அவன் கண்களையே பார்த்த சன்விதாவுக்கு மறந்தால் தான் என்ன என்று ஒரு கணம் தோன்றியது. மறு கணமே அன்று பார்வதியுடன் நெருக்கமாக இருந்த தருணம் கண் முன் வந்து மெல்லிய பிடிவாதத்துடன் போக அவனிடமிருந்து பார்வையை திருப்பினாள்.

கண்களிலிருந்து அவளின் மன ஓட்டத்தை படித்தவன் கண்கள் ஒரு கணம் பளிச்சிட்டது.

நாடி பிடித்து தன்னை நோக்கி திரும்பி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் உச்சி முடியை ஒதுக்கியவாறே கூறினான் "இப்போது வெளியில் போகின்றேன். நாளை சந்திக்க முடியுமா தெரியவில்லை, எப்படியும் அடுத்த இரண்டு நாட்களுக்கு உனக்கு என் தொல்லையில்லை" அவள் கண்களில் கணத்தில் ஓடி மறைந்த ஓர் உணர்வை கண்டு கொண்டவன் திருப்தியாக புன்னகைத்தான்.

"இந்த இரண்டு நாளும் அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. லீவு எடுப்பதானால் எடுத்து கொள், ஆ அப்படியே கண்ணனுக்கு நன்றியும் சொல்லலாம் இல்லையா? தாங்யூ கண்ணா... யூ ஆர் மை பெஸ்டி....., அப்புறம் என்ன ஆஹ் பிளையிங் கிஸ்" கூறியவனை, அவளையே அறியாமல் வந்த சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள் சன்விதா. என்னை இவ்வளவு தூரம் அறிவானா இவன் மனம் ஆச்சரியத்துடன் நினைத்தது.

தலை சாய்த்து அவளையே சிறு முறுவலோடு பார்த்திருந்தவன் சட்டென ஒரு கையால் இடையே பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், நெஞ்சில் கை பதித்து விழி விரிய நின்றவள் கன்னத்தை பற்றி வலது கன்னத்தில் கண்களுக்கும் காதுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து சிறு தாடி குத்த அழுந்த சத்தமாய் முத்தமிட்டான்.

சில கணங்களுக்கு அதிகமாகவே நின்று விலகியவன் இமைகளை தட்டி விழித்து நின்றவளின் கன்னத்தை பெருவிரலால் வருடியவன் "இரண்டு நாள் தாங்க வேண்டுமில்லையா?" தன் செயலுக்கு நியாயம் கூறினான்.

"குத்துது..." ஏதோ மயக்கத்தில் மெதுவாய் உளறினாள்.

சட்டென கன்னம் இரண்டையும் தாங்கி கொண்டவன் கண்களின்  வேட்கை பார்வையில் சன்விதா கண்களை மூடி கொள்ள, அவள் கண் மூடி நின்ற மோக நிலையை விழியாகலாது பாத்தவன், கண்களை இறுக மூடி ஆழ்ந்து சுவாசித்தது சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி மேசையிலிருந்த போனை எடுத்தவன் வேகமாக வெளியே சென்றுவிட்டான். 

கண்ணாடி வழியே அவன் போவதை பார்த்து கொண்டிருந்த சன்விதா மெதுவே அவன் முத்தமிட்ட இடத்தை தொட அது சில்லென்று இருந்தது.

இது என்ன கண்ணா, நெற்றி கண்ணில் முத்தமிடுவார்கள், கன்னத்தில் முத்தமிடுவார்கள் இதழில் கூட இது என்ன எப்ப பார்த்தாலும் இந்த இடத்தில் தான் கிஸ் பன்றான்.

அப்ப... அவன் கிஸ் பண்ணது உனக்கு பிரச்சனை இல்லை! மனசாட்சி தெளிவுபடுத்தி கொள்ள கேட்க இன்னும் குழம்பிபோய் நின்றாள் சன்விதா. 

♥♥♥♥♥

வெளியே சென்றவன் காதிலிருந்து ப்ளூ டூத்தை தட்டியவாறே காரை எடுத்தவன் "ஆகாஷ், ஒரு விபரம் வேண்டும் இன்னும் டுவெண்ட்டி போர் ஹௌர்ஸ்குள்ள பெயர் பார்வதி ராய்  லாஸ்ட் இயர் டெல்லியில் நடந்த பேஷன் ஷோ வந்திருக்கலாம், ஆஹ் அதோட சன்விதாவோட பிரண்ட் ஆங்கிலோ இந்தியன் உமாகரனுக்கும் தெரிந்திருக்கும், வழமையான டிடெக்ட்டிவ் ஏஜென்சியிடம் சொல்லி விசாரிக்க சொல், தகவல் இம்மீடியட்ட வேண்டும்."

"எஸ் சார்" என்றவனிடம் "ஆஹ் இன்னொன்று" விபத்துக்கு அடுத்த நாளினை கூறி "அந்த டேட்ல இருக்க டெல்லி ஆஃபீஸ், ஆஃபீஸோட என்ரன்ஸ் பில்டிங் உள்ளே வரும் போது இருக்கும் அத்தனை CCTV பூட்டேஜ் இம்மீடியட்ட வேனும்"

"புல் டேயா சார்"

"யெஸ் இமிடியாட்டா அனுப்ப சொல்லு"

"ஸுயர் சார், இன்று நைட்டே உங்களுக்கு டீமில் ஷேர் பண்ணிறேன்"

"யா ஓகே"

அதன் பின் அவனை வேலை விழுங்கிக் கொண்டது. பல ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், தொழிற் சாலைகள் மீட்டிங் என்று நேரம் இறக்கை கட்டி நின்றாலும் அவளை பார்க்காமல் நகர விட மாட்டேன் என்று மனம் அவனுடன் மல்லுக்கு நின்றது.

அன்று நள்ளிரவு மதுரை செல்லும் விமானத்தில் ஜன்னலோரம் கை முஷ்டியை வாயில் வைத்து  இருந்தவன் மனமும் வெளியே ஓடும் மேகங்களுடன் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. 

மதுரையின் பெரிய ஜாமீன் பரம்பரை அவனுடையது. மதுரை மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது யாரென்பது முற்று முழுதான அவனது முடிவு. அவனை மீறி நின்றால் அவனது சிறு கண்ணசைவில் ஒரு ஒட்டு விழாது. வேட்டி சட்டை கட்டாத நாட்டாமை.

சன்வி முக்கியம் அதே அளவு அவனது கடமையும் முக்கியம் வேறொரு நேரமாக இருந்தால் ஆறுதலாக ஆற அமர ஒரு பத்து நாள் நின்று வந்திருப்பான். இங்கே அருண் பார்த்து கொள்வான் எனவே தொழிலை பற்றி கவலையில்லை. இந்த தடவை டெல்லி போய் வந்தது போல் இரண்டு நாளில் வர முடியாது. பெரிய்ய்ய கெத்தாய் அவளிடம் இரண்டு நாள் என்று சொல்லிவிட்டான். ஆனால் குறைந்தது நான்கு நாட்களுக்கு அசைய முடியாது. அதிலும் குறைந்தது இருபது மணித்தியாலம் வேலையை பார்க்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவனது குடும்பத்தின் மேல் கொலை செய்ய முயற்சி நடக்கின்றது. விசாரித்ததில் அடி அத்திவாரம் மதுரையிலிருந்து என்று வரவே அதை அடியோடு களைந்தாக வேண்டிய கட்டாயம். சன்விதா மேலும் இரண்டு தடவை கொலை முயற்சி நடந்தாகிவிட்டது. அன்று மாலில் நடந்த சம்பவத்தில் செக்யூரிட்டியை அடித்து போட்டது வேறொரு கூட்டம், சன்விதாவை துரத்தி வந்தது வேறொரு கூட்டம். பேசாமல் அவளையும் அவனுடன் அழைத்து வந்திருக்கலாம் தான் ஆனால் அதில் இன்னும் அபாயம் அதிகம்.

அனைத்தையும் பார்க்க பத்து நாளே போதாதது போல் இருக்க ஆயாசத்துடன் பின் புறமாக இருக்கையில் தலை சாய்த்தான்.

♥♥♥♥♥

இங்கோ அவன் செல்வதை கண்ணாடியுடே பார்த்தவள் தான் என்ன நினைக்கிறன் என்பதே அவளுக்கு புரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அச்சுதன் தன் மனதை ஆக்கிரமிப்பது புரிய தலையில் கை வைத்துக் கொண்டு இருந்துவிட்டாள். விபத்தின் போது அவனை தனியாக சந்திக்க சென்றது அவன் கூறியது போல் இன்னதென்று இனங் காண முடியாத அக்கறைதான். அவன் கண்டு கொண்டானே என்று இருந்தது.

அன்று வந்த கனவுடன் இன்று அவள் இடையே பற்றிய போது ஏற்பட்ட உணர்வும் அன்று கோவிலில் வந்தது போலவே இருக்கவே தெளிவாக குழம்பினாள். அப்படியானால் இருவரும் ஒன்றா என்ற கேள்விக்கு ஆம் இல்லை என இரண்டு பதிலும் வர தலையை பிய்த்து கொள்ளாதாது தான் குறை.

அன்று கேசவ்வை விரும்பி அவன் குணம் சரியில்லை எனக்கு சரி வராது என்று விலகினேன். பின் முகம் தெரியாத ஒருவனை கோவிலில் கண்டு காதல் கொண்டேன். இப்போது இந்த அச்சுதனை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க தொடங்குது. எப்ப எப்படி என்றெல்லாம் தெரியல. நான் என்ன மாதிரிப் பெண் கண்ணா, கண்ணனிடமே கேட்டாள்.

அவனோட காதல் உண்மையானது தான் ஆனா என்னோட காதல் உண்மையானதா? அப்படி உண்மையானதா இருந்தால் அன்று ஏன் கேசவ்வை விட்டு விலகி வந்தேன் குற்றம் குறைகளை ஏற்று எதையும் எதிர்பார்க்காது வருவது தானே காதல். சுய  அசலில் சோர்வுற்று நிமிர்ந்தவள் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்கியது.

கண்ணன் இரக்கத்துடன் அவளைப் பார்த்தான். அச்சுதன் அவளிடம் கேட்டது போல் அச்சுதனிடம் ஒரே ஒரு கேள்வி 'என்னை முதல் முறை பார்த்தது எங்கே?' கேட்டிருந்தால் இந்த குழப்பமே இருந்திருக்காதே.

பொசெசிவ்னெஸினால் வரும் கோபத்திற்கும் சாதாரண கோபத்திற்கும் வித்தியாசம் புரியாமல் தவிக்கும் சிறு பெண்ணை பார்க்க அருகேயிருந்த ருக்குவுக்கே பாவமாய் இருந்தது.  கண்களில் கருணையுடன் கண்ணனை பார்த்து கேட்டாள். "குழந்தை தவிக்கிறாள் பாவமில்லையா?".

"அன்று உதவ வேண்டாம்.... என்றாய்?" நிறுத்தி நிதானித்து குறும்புடன் கேட்டான் கண்ணன். ருக்கு பதிலுக்கு முறைக்க "சரி சரி அவன் பத்து நாளிற்கு முன் வர முடியாத படி செய்து விடுகின்றேன் போதுமா?"

"பாவம் தவித்து விடுவாள், உங்களுக்கு இரக்கமேயில்லை"

"கனவில் சொல்லியும் புரியவில்லை. தவிக்கட்டும் அப்போது தான் சிலது புரியுமில்லையா?" புன்னகையுடன் கூறிய கண்ணனை கண்கள் மலர்த்தி பார்த்த தேவிக்கு புரிய கருணை நிறைந்த கண்களை சன்வி புறம் திருப்பினாள்.  

Reply
Posts: 55
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 22

மானசா தலையில் கை வைத்து நானே பாவம் என்ற போசில் அமர்ந்திருந்தாள்.

கட்டிலில் அவளுக்கு எதிரே அமர்ந்து இரு கைகளையும் இடுப்பில் வைத்த முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் சன்வி  "அக்கா...." அழுத்தமாய் அழைத்தாள்.

அவர்கள் இருவருக்குமிடையில் பாவமாய் விழுந்து கிடந்தது அவளது கைப்பையும் அச்சுதன் அவளுக்கு கொடுத்த நோக்யாவின் பியோ வியூ 10 மாடல் போனும். 

"என்னை பார்த்தால் உனக்கு பாவமா இல்லையா?" பரிதாபமாக கேட்டாள்.

"என் கேள்விக்கு பதில் சொல்லு நான் விடுறன்" கெத்தாய் சொன்னாள்.

இரண்டு நாட்களாக ஒரே கேள்வியை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தவள் இன்றுதான் சற்றே ஓய்ந்திருந்தாள். இந்த பாக்கையும் போனையும் பார்த்ததிலிருந்து மறுபடியும் தொடங்கிவிட்டாள்.

சண்டிகாருக்கு வேலை விடயமாக ஓடி தப்பிய கரனை மனதார திட்டி தீர்த்தவள்  "கேள்வியாடி அது. கொலை பண்ணிடுவேன் உன்னை மட்டுமில்லை அந்த அச்சுத கேசவனையும் சேர்த்து" தலையனையை எடுத்து தலையிலேயே மொத்தினாள்.

தலையை தடவியவாறே பாவமாய் கேட்டாள் சன்விதா "அப்படி என்ன கேட்டுட்டேன் என்று என்னை அடிக்கிற." இரண்டு நாளாக அவளிடம் கேட்ட அதே கேள்வியை திருப்பி கேட்டாள் "நான் கோவில்லே பார்த்தவனை தேடினா அவனை தானே லவ் பண்ணனும் அப்ப அச்சுதனை எப்படி லவ் பண்ணுவேன். அப்படி லவ் பண்ண அச்சுதனும் கோவிலில் பார்த்தவனும் ஒன்றா இல்லையே. அவன் இவனில்லை. இவனும் அவனில்லை பின் எப்படி. முதல்ல அவன் நான் லவ் பண்ணாத மாதிரிதானே இருந்தான். பிறகு எப்படி நான் லவ் பண்ற மாதிரி இருக்கலாம். இது தப்பில்லையா?"

தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு விட்ட மானசா "நீ அச்சுத கேசவனை லவ் பண்றீயா?" கேட்டாள்.

வேகமாக தலையாட்டி மறுத்தாள் "இல்லையே, இல்லவே இல்லையே".

"அப்ப பேசமா மூடிட்டு படுடி" வாயை இரு கையாலும் பொத்தி கண்களை வட்டமாய் விரித்தாள். மானஸாவுக்கு பார்க்க பாவமாயும் இருந்தது சிரிப்பாகவும் இருந்தது ஆனால் சிறிது வெளிக் காட்டினாலும் நிச்சயம் ENT வைத்தியரிடம் போக வேண்டும். காதால் இரத்தம் வரும் வரை இதே கேள்வியை கேட்பாள்.

தான் என்ன செய்தாலும் பொறுத்து போகும் சாது அக்காவையே கோபப்படுத்திய தன் பெருமையை தானே பாராட்டி கொண்டவளை மனசாட்சி 'நீ ஓவரா போறடி' எச்சரிக்க “ஹிஹிஹி” என்று அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள். 

"சரி சரி இதை பற்றி இனி பேசவில்லை ஜிஜு பற்றி பேசுவோமா?"

"ஜிஜு..." விழித்தாள் மானசா.

"ஹான் அருண் ஜிஜு"

"சன்வி......" தலையில் தட்டினாள் மானசா.

"சரி உனக்கு பிடிக்கலையா ஓகே நானே ப்ரொபோஸ் பண்ணுறன். நான் நினைக்கிற எல்லா குவாலிட்டியும் இருக்கு என்ன சொல்றா" இரு புருவத்தையும் இரண்டு மூன்று தரம் ஏற்றி இறக்கினாள்.

சட்டென மானசா முகம் இருள "உனக்கு நிஜமாகவே பிடிச்சிருக்கா?!" மெல்லிய குரலில் கேட்டாள். பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவள் முகத்தை சீரியஸாக வைத்தவாறு கண்களில் குறும்பு மின்ன "ஹா ஏன் பிடிக்காது நான் நினைக்கிற அனைத்து தகுதிகளும் இருக்கு இல்லையா?"  கூறியவாறே தோளில் கை போட்டாள்.

மானஸாவுக்கு சட்டென கண்கள் கலங்கிவிட அவளிடமிருந்து திரும்பி இருந்தாள்.

"சரி நான் ஜிஜுவுக்கு சொல்லிறன்." போனை எடுத்து அருண் நம்பரை டயல் செய்து ஸ்பீக்ரில் போட்டவள் "ஹலோ ஜிஜு" என்றவளை அதிர்ந்து போய் பார்த்தாள் மானசா "ஏய் என்னடி செய்யுற வேண்டாம்" கீழ் குரலில் கெஞ்சினாள்.

அச்சுதனுடன் வீடியோ காலில் இருந்தவன் அச்சுதனிடம் போனை காட்ட ஆச்சரியத்துடன் பார்த்தாலும் அக்காவுக்காக எடுக்கிறாள் என்பது புரிய ஆவலாய் "ஸ்பிக்ர்ல போடுடா" என்றான்.

"சன்வி, என்னமா இந்த நேரம் எதாவது எமெர்ஜென்சியா?" இருவருக்குமே தெரியும் அவளுக்கு ஒரு எமெர்ஜென்சியும் வெங்கயாமும் இல்லை என்பது இருபத்திநாலு மணி நேரத்திற்கும் செக்யூரிட்டி போட்டு வீட்டினுள்ளும் ஆட்கள் உள்ளார்கள் அப்படி ஏதாவது என்றால் அவர்கள் முதலில் தகவல் தந்துவிடுவார்கள்.

"ம்ஹும் அதெல்லாம் இல்லை எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"

"கேளும்மா தெரிஞ்சா சொல்றன்" அருண் காபியை குடித்தவாறே பதிலளித்தான். நண்பர்கள் இருவரும் புருவத்தை உயர்த்தி புதிராய் ஒருவரை ஒருவர் பார்த்த கொண்டார்கள்.

"நீங்கள் கல்யாணம் பண்ணுவீங்களா?" குடித்த காபி புரையேறி மூக்கு வழியாக வந்தது. பின் நடுசாமும் தண்டி  மணி மூன்றை தொட்டு கொண்டிருக்க கோல் எடுத்து இப்படி ஒரு கேள்வியை கேட்டால் இருமி தொண்டையை சரி செய்தவன் "சரி  செய்யலாம், இந்த அர்த்த ஜாமத்தில் யாரை, பொண்ணுக்கு எங்கே போக?"

"என்னை....." விழிகள் தெறித்து விடும் போல் வட்டமாய் விரிய போனையும் அச்சுதனையும் மாறிமாறி வெறித்தவனை பார்த்து அச்சுதனுக்கு புரையேற விழுந்து விழுந்து சிரித்தான். நல்லவேளை மியூட்டில் வைத்திருந்ததால் அச்சுதன் சிரிப்பு சத்தம் கேட்கவில்லை. திகைத்து நின்ற அருணை சன்விதாவின் குரல் நிகழ்காலத்திற்கு இழுத்தது.

அங்கே சன்வி ‘என்னை’ என்று சொல்ல மானசா விழியிலிருந்து கண்ணீர் குளம் கட்டி நின்றது விழாவா வேண்டாமா என்று. 

"ஹலோ ஜிஜு... ஜிஜு"

"ஹா சொல்லுமா எ... என்ன கேட்டாய்?"

அக்காவை பார்த்தவள் "என்னை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கும் என் செல்ல அக்கதான்." என்றவள் மானசா முகம் மலர்வதை பார்த்து கண்ணடித்து புன்னகைத்தாள். 

"எப்ப அவனை போட்டு தள்ள போறிங்க?"

அருணுக்கு போன உயிர் திரும்பி வர மறுபடி ஜெர்க் ஆனான். "என்ன...... யாரை" அச்சுதனை பார்த்த பார்வையில் இவளை எப்படிடா சமாளிக்கிறாய் பாராட்டு தொக்கி நின்றது.

‘ஐயாவோட திறமை அப்படி’ என்பது போல் பதிலுக்கு பார்த்து வைத்தான் அச்சுதன்.

"ஐயோ சன்வி சும்மாயிரு "அங்கே மானசா சன்விதாவை அடக்க முயல்வது தெளிவாக கேட்டது. 

"அதான் அந்த மங்குனி மாதவனை.... " அருண் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். மானசா விரும்பிதானே இந்த நிச்சயம் நடந்து இருக்கும் பிறகு அதை கலைக்க அவனுக்கு மனமில்லை. அந்த மாதவன் வேலை செய்வது அவனது கம்பெனியில் தான். ஒரு சின்ன விரலசைவில் அவனால் முடியும் ஆனால் மான்ஸாவின் விருப்பம் முக்கியம் என நினைத்தான். ஆனால் இந்த அச்சுதனையும் சன்விதாவையும் எப்படி அடக்குவது என்று தெரியாமல் விழித்தான். 

அருணின் போனில் அச்சுதன் கால் வர நிமிர்ந்து திரையை பார்த்தவனை அழைப்பை ஏற்குமாறு சைவகை செய்தான். அருண் அழைப்பை கான்பிரன்ஸ் காலில் போடவும் சன்விதா கேட்கவும் சரியாய் இருந்தது

"நீங்க எப்படி ஜித்தனுக்கு பிரண்....." பாதியில் இடைவெட்டியது அச்சுதன் குரல் "ஜித்தன் யாரு?"

கையிலிருந்த போன் ஓரடிக்கும் மேல் துள்ளி விழ அதை பிடித்தவள் "யா யா யாரு?" என்றவளிடம் "உனக்கு என் குரல் தெரியாதா?" வெளிப்படையான சினத்துடன் கேட்டான் அச்சுதன்.

"இ இ து ஜிஜு நம்பர் தானே நீங்க எப்படி.... நான் வைக்கிறேன்"

"அப்ப உனக்கு அருண் ஜிஜுவாக வேணுமா வேண்டாமா?" அவனின் கேள்வியில் கட் பண்ண போனவள் விரல் அந்தரத்தில் நின்றது. 

"டேய் சொன்ன கேளடா"

"சன்வி வேண்டாம்"

"நீ கொஞ்சம் சும்மா இருடா..."

"ஸ்ஸ்ஸ்.... சும்மாயிருக்கா அந்த மாங்காய் மங்குனி மாதவனையா கல்யாணம் பண்ண போற, அவனை விரட்டதான் நான் கரணை வர சொன்னது"

"மங்குனி மாதவன்" வாய்விட்டே சிரித்தான் அருண். அச்சுதணுக்குமே சிரிப்பு வர முறுவலாக அடக்கி கொண்டான்.

"ஜிஜு" உரிமையுடன் ராகமிட்டு அழைத்தாள் சன்விதா. அதை கேட்ட அச்சுதன் கண்களில் மெல்லிய ஏக்கம் திரையிட சிறு புன்னகையால் அதை மறைத்தவனை திரையில் பார்த்த அருண் உதட்டை கடித்தான். சன்விதாவோ இது எதையும் அறியாது தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தாள்.

"அந்த மங்குனிக்கு அக்காவின் மேல் காதலும் இல்லை ஒரு வெட் ஒனியனும் இல்லை ஜிஜு. நாங்க இருக்கும் இந்த நிலத்தின் மேல் ஒரு கண் அதோடா அக்காவை வீடியோ...." இரு ஆண்களின் குரலும் ஒன்றாக இடையிட்டது.

"என்ன வீடியோ...." அச்சுதன் கண்கள் கடினமாக அருணின் உடல் எஃகாய் இறுக ஓரே குரலில் கேட்டனர். 

"பயப்படும்படி இல்லை அக்கா காலேஜ் பிரண்டோட டூர் போன போட்டாவை எடுத்து மொபிங் செய்து நிச்சயத்துக்கு சம்மதிக்காட்டி சோசியல் மீடியாவுலா போட்டுருவான் என்று மிரட்டியிருக்கான் ராஸ்கல். பரதேவதை தியாக செம்மல் எங்கள் வீட்டு கண்ணாம்பா தலையாடிட்டாங்க" அக்காவை முறைத்தவாறே கூறினாள்.

"உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" மெலிதான மான்ஸாவின் குரல் கேட்க அச்சுதனுக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நேரம் கெட்ட நேரத்தில் அருணுக்கு அழைப்பு விடுத்தது இது தொடர்பாக பேசத்தான். ஆனால் இவ்வளவு தகவல்கள் சேகரித்திருக்கிறாளே.

"மான்சி, இது உண்மையா?" அவன் மான்சி என்ற அழைப்பில் தன்னை தொலைத்து "உண்மைதான்" என்று மெல்லிய குரலில் கூற ஏதோ உடைந்த சத்தம் கேட்க அக்கா தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து “ஹலோ ஹலோ ஜிஜு...” “அருண் என்னாச்சு...”  பதறியவர்களை அச்சுதன் குரல் சமாதானபடுத்தியது "அது ஒன்றுமில்லை வாஸ் கை தட்டுபட்டு உடைந்துவிட்டது." 

திரையில் அருணை பார்த்தவன் 'அருண் பேசு பயந்து விட்டார்கள்' சைகை செய்ய,  தலையாட்டியவன் "மான்சி..." என்றான்.

சட்டென சன்விதா கையிலிருந்த போனை பறித்த மானசா "அருண் உங்களுக்கு ஒன்றுமில்லையே" பதறினாள்.

"இல்லம்மா ஒன்றுமில்லை பயப்படாதேடா" ரத்தம் வழிந்த கைகளை பார்த்து கொண்டே ஆறுதல் கூறினான் "ஆஹ் அதோட அந்த மங்கு...." லேசாக சிரித்தவன் "மாதவன் பற்றிய கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன்" என்றான்.

அச்சுதன் சிறு சிரிப்புடன் தன் பக்க அழைப்பை துண்டித்தான்.

அவளுக்கும் லேசாக சிரிப்பு வர "பயந்துட்டேன்....." என்றவாறு தங்கையை தேட இல்லாத ஸ்லோ ம்யூசிக்கு ஆங்கில பாணியில் பால்ரூம் நடனம் ஆடியவாறே கதவை நோக்கி செல்ல தலையில் அடித்து கொண்டவள் தன் பேச்சை தொடர்ந்தாள். 

கடிகாரத்தை பார்த்தவள் மணி நாலை தொட சிறிது நேரமே உள்ளது எனக் காட்ட "சரி போய் ஒரு டி குடிப்போம்" தனக்குள் பேசியவாறே அடுப்பை பற்ற வைத்தாள்.

அதற்குள் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த அந்த வயதான அம்மா உள்ளே சமையல் கட்டினுள் வந்தவர் "நீயம்மா நான் எலி என்று நினைத்தேன்... " அவளை அன்புடன் பார்த்து புன்னகைத்தார்.

"அச்சோ அம்மம்மா.. உங்களை எழுப்பிவிட்டேனா சாரி சாரி சாரி..." வயதானவர்கள் உறக்கத்தை கெடுத்து விட்டேனோ என்று வருந்தியவளை பார்த்து புன்னகைத்தவர் "இல்லம்மா அப்படியெல்லாம் இல்லை, உனக்கு என்ன வேண்டும்" என்றார்.

வயிற்றை ஒரு கையால் தடவியவள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு "பசிக்குது" என்றவளை பார்த்து சிரித்தவர் அடுப்பை பற்ற வைத்து கொண்டே "உனக்கு பசிக்காத நேரம் இருக்கா?" என்று கேட்டார்.

"அம்மாம்மா....." சினுங்கினாள்.  

"தோசை சாப்பிடுறியா?"

"ஓ.... சாப்பிடுவேனே" துள்ளி அடுப்பின் அருகே மேடையில் அமர்ந்தவள் அவரை சிறிது நேரம் பார்த்து விட்டு கேட்டாள் "உங்கள் பேரன் எங்கே இருக்கிறான்?"

"ஏனம்மா அவனை கல்யாணம் பன்னுகிறாயா?" கேலியாக கேட்டார்.

"முடியாது முடியாது முடியவே முடியாது "உடனே வேகமாக குறுக்கே கையாட்டி மறுத்தாள்.

"ஏன் அவன் ராசா கணக்கா இருப்பான் தெரியுமா?" தோசையை வார்த்து தட்டிலிட்டவாறே கூறினார்.

"உங்கள் பேரனின் லட்சனத்தை நீங்கள் தான் மெச்ச வேண்டும்" தோசையை பிட்டு தனக்கு ஒரு வாயும் அவருக்கு ஒரு வாயும் என ஊட்டியவாறே கூறினாள். 

"ஏன்டிமா அவனுக்கு என்ன குறை" தோசை கரண்டியை முன்னே நீட்ட "அம்மாடியோவ் என்ன கோபம், உனக்கு நல்ல பேரன் கிடைச்சுட்டாலும் க்கும்" உதட்டை சுளித்தவாறு போட்டு வைத்திருந்த தேனீரை எடுத்தவள் அங்கிருந்து பறந்திருந்தாள்.

அவர் அருகே இருந்த போனை எடுத்து பார்க்க அவன் கேட்டான் "டிஸ்டப் பண்ணிட்டனா அம்மம்மா, எங்கே போய்ட்டாள்"

ஹாலை எட்டி பார்த்தவர் புன்னகையுடன் பதிலளித்தார் "தூங்கிவிட்டாள்"

"அதற்குள்ளேவா....! செம டயட் நானும் கொஞ்சம் நேரம் உறங்கனும்" என்றவன் போனை கட் செய்யாமலே உறங்கி விட, உறங்கும் அச்சுதனின் முகத்தையே பார்த்திருந்தார் அவர்.

Reply
Posts: 55
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

hi

Reply
Page 5 / 5
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”